Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • October 27 2023 Subamuhurthanaal

    அக்டோபர் 27 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 10
    சுபமுகூர்த்த நாள்
    27-அக்-2023 வெள்ளி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : திரையோதசி கா 6.9
    நட்சத்திரம் : உத்திரட்டாதி கா 9.22
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • October 26 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  சுகம்
    ரிஷபம்         –    தேர்ச்சி
    மிதுனம்     –   பணிவு
    கடகம்         –  நன்மை
    சிம்மம்         –   துணிவு
    கன்னி         –    யோகம்
    துலாம்         –     லாபம்  
    விருச்சிகம்     – நிறைவு
    தனுசு         –     செலவு
    மகரம்         –    உதவி
    கும்பம்         –     ஆக்கம்
    மீனம்         –      ஆதரவு
    சந்திராஷ்டமம்    –   மகம்

     

  • October 26 2023 Pradhosham

    அக்டோபர் 26 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 9
    பிரதோஷம்
    26-அக்-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் : துவாதசி கா 8.17
    நட்சத்திரம் : பூரட்டாதி கா 10.48
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Krishnagiri car festival

    கிருஷ்ணகிரியில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சைவ மற்றும் வைணவ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா காட்சி நடைபெறும். அதன்படி இந்தாண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் கோயில்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று  இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

    இதில், பழையபேட்டை நரசிம்மசாமி கோயில் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், திருநீலகண்டர் கோயில், பழையபேட்டை சீனிவாசர் கோயில், தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், காட்டிநாயனப்பள்ளி சுப்பரமணியசாமி கோயில் மற்றும் கார்வேபுரம் கல்கத்தா காளிக்கோயில் உட்பட 9 கோயில்களில் இருந்து மின் விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதியுலா வந்தனர்.

    இந்த ஊர்வலம், கிருஷ்ணகிரி பழையபேட்டை, நரசிம்மசாமி கோயில் தெரு, பாண்டுரங்கர் தெரு, மீன் மார்க்கெட், நேதாஜி சாலை, காந்தி சாலை, பழைய சப்-ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலை ஆகிய பகுதிகளில் 9 சப்பரங்களும் ஊர்வலமாக வந்தது.

    இரவு முழுவதும் நடந்த தேரோட்டம் இன்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றன. அவ்வாறு அணிவகுத்து நின்ற தேர்களில் உள்ள சுவாமிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர். இதனை தொடர்ந்து அனைத்து தேர்களும் மீண்டும் தங்களது கோயிலுக்கு சென்றது.

  • Raja Raja Chozhan sadhaya vizha

    தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜராஜ சோழனுக்கு 1038 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி தமிழ் முறைப்படி தேவாரம் திருமுறை பாடி பெருவுடையாருக்கு 48 வகையான பேரஅபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

    தஞ்சை ஆண்ட மாமன்னர் ராஜராஜன் சோழன் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் நாட்டியம் கலை நிகழ்ச்சி பட்டிமன்றம் திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி தமிழ் முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருமுறை வீதி உலா தஞ்சை மாநகர 4 விதியில் நடைபெற்று பின்னர் தஞ்சை பெரிய கோயில் வளாகத்திற்குள் திருவீதி உலா வந்து அடைத்தது.

    பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார்க்கு திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி பால் மஞ்சள் சந்தனம் திருநீர் தேன் அரிசிமாவு பொடி நெய் தயிர் பன்னீர் எழுமிச்சை பழச்சாறு திரவிய பொடி பஞ்சாமிர்தம் மூலிகைப் பொடிகள் உள்ளிட்ட 48 வகையான பேரஅபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.4

  • October 25 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நன்மை
    ரிஷபம்         –    வெற்றி
    மிதுனம்     –   வரவு
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –    நற்செய்தி
    கன்னி         –    மகிழ்ச்சி
    துலாம்         –     ஆதரவு  
    விருச்சிகம்     – லாபம்
    தனுசு         –     சுகம்
    மகரம்         –    அலைச்சல்
    கும்பம்         –     குழப்பம்
    மீனம்         –      உற்சாகம்
    சந்திராஷ்டமம்    –  ஆயில்யம், மகம்

     

  • October 25 2023 Indrayanaal

    அக்டோபர் 25 – கொலு எடுக்க காலை 9.00 – 10.30 மணி
    சோபகிருது வருடம் – ஐப்பசி 8
    சுபமுகூர்த்த நாள்
    25-அக்-2023 புதன்
    கொலு எடுக்க காலை 9.00 – 10.30 மணி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : துவாதசி
    திதி நேரம் : ஏகாதசி கா 10.37
    நட்சத்திரம் : சதயம் ம 12.24
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • navarathiri mudindhu thirumbiya buvaneswari amman

    பழனியில் நவராத்திரி விரதம் முடிந்து புவனேஸ்வரி அம்மன் மலைக்கோயில் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 15 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்தது. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

    சூரனை வதம் செய்யும் நிகழ்வுக்காக  மலைமிருந்து கீழே வந்த புவனேஸ்வரி அம்மன் கொழுவில் அமர்ந்தார். நவராத்திரி விழா நிறைவு நாளில் புவனேஸ்வரி அம்மன் மீண்டும் மலை மீது செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக புலிப்பாணி ஆசிரமத்தில் புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புவனேஸ்வரி அம்மனினை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பல்லக்கில் வைத்து மலைக் கோயிலுக்கு ஊர்வலமாக புவனேஸ்வரி அம்மனே அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

  • maan vetaiyadiya malayappasamy

    விஜயதசமி தினமான இன்று திருப்பதி மலையில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்ற வேடுபறி உற்சவத்தின் போது உற்சவர் மலையப்ப சுவாமி சம்பிரதாய முறையில் மான் வேட்டையாடினார். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினம் அன்று திருப்பதி மலையில் வேடுபறி உற்சவம் நடைபெறும்.

    அந்த வகையில் இன்று நடைபெற்ற வேடுபறி உற்சவத்தில் எழுந்தருள்வதற்காக உற்சவர் மலையப்ப சுவாமி, கிருஷ்ணர் ஆகிய  உற்சவர்கள் கோவிலில் இருந்து தனித்தனி பல்லக்குகளில் புறப்பட்டு திருப்பதி மலையில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் பாபநாசம் செல்லும் வழியில் இருக்கும் வேடுப்பறி உற்சவ மண்டபத்தை அடைந்தனர்.

    அங்கு மலையப்ப சுவாமி, கிருஷ்ணர் ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.  அதனை தொடர்ந்து வேடுபறி உற்சவம் நடைபெற்றது. அப்போது உற்சவர் மலையப்ப சுவாமியை தேவஸ்தான ஊழியர்கள் மூன்று முறை முன்னும் பின்னும் தூக்கி சென்ற போது ஏழுமலையான் கோவில்  தலைமை அர்ச்சகர் கையில் வைத்திருந்த வெள்ளி ஈட்டி ஒன்றை பொய்மான்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி வீசி எறிந்தார்.

     மூன்று முறை ஈட்டி வீசி எறியப்பட்ட பின் மலையப்ப சுவாமி,  கிருஷ்ணர் ஆகிய உற்சவர்கள் மீண்டும் கோவிலை அடைந்தனர்

     

  • Saraswathi amman rupees alangaram

    நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக ரூபாய் நோட்டு மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்தார் ஏராளமான பக்தர்கள்  வழிபட்டனர்.

    நவராத்திரி திருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி அம்மனுக்கு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரம் என ஒன்பது நாட்களுக்கு தொடர்ந்து அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக தேனி பத்திரகாளி அம்மன் கோயிலில் உற்சவர் அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி தந்தார்.

    முன்னதாக கோயில் முழுவதும் வண்ண விளக்கங்களால் ஜொலிக்கப்பட்டு உற்சவர் அம்மனை வண்ண பட்டு உடுத்தி ஆபரணங்கள் அணிவித்து சரஸ்வதி அம்மனாக அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தார். மேலும் ரூபாய் நோட்டுகளால் மற்றும் காசு மாலைகளால் சரஸ்வதி அம்மனுக்கு அலங்காரம் செய்து பணமழை பொழிவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ரூபாய் நோட்டு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சரஸ்வதி அம்மனை வணங்கிச் சென்றனர். அதன் பின்னர் சிறுவர் சிறுமிகள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திரக்கல்யாணம் வைபவத்தை தத்ரூபமாக நடித்து காட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.