திருபுவனத்தில் 1008 கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட மகா பரத நாட்டிய நிகழ்ச்சி
திருபுவனம் கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008 பரத கலைஞர்கள் பங்கேற்கும் மகா பரதநாட்டிய நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டார்.
திருபுவனத்தில் 1008 கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட மகா பரத நாட்டிய நிகழ்ச்சி
திருபுவனம் கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008 பரத கலைஞர்கள் பங்கேற்கும் மகா பரதநாட்டிய நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டார்.
பழனி முருகன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற தெப்ப திருவிழா
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 19-ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது . விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, பெரியநாயகி அம்மன் கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் முத்துகுமாரசாமி, வள்ளி-தெய்வான அழைத்துவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவாரூர் ஸ்ரீ கமலவல்லி தாயார் திருமஞ்சனம் நிகழ்வு
திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருள்மிகு லெட்சுமிநாராயண பெருமாள் ஆலயத்தில் உள்ள கமலவள்ளி தாயாருக்கு, தை மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி திருமஞ்சனம் நடைப்பெற்றது. இதையொட்டி கமலவள்ளி தாயாருக்கு திரவியம், மஞ்சள், பால்,தயிர், தேன்,இளநீர்,சந்தனம் ஆகிய திரவியங்களால் திருமஞ்சனம் நடைப்பெற்றது. தொடர்ந்து தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் பெருமாளுக்கு அணிவித்தமாலை தாயாருக்கு சாத்தப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி தெப்பல் உற்சவம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி தெப்பல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா!
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாகப்பட்டினம் அடுத்த சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்தக் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் தெப்போற்சவம் நடைபெற்றது.
தஞ்சை பெருவுடையார் கோயில் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
தை மாதம் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
திருவாரூர் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தைபூச திருவிழா!
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் அதிர்ஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!
திருவண்ணாமலை மாவட்டம் மாதலம்பாடி மதுரா கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலய அதிர்ஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
மகாலிங்க சுவாமி கோவில் தைப்பூச பெருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோவில் தைப்பூச பெருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.