Author: சக்தி ஆன்லைன் டீம்

  • 2016-08-12-08-01-05

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தங்கத்தை வங்கி அதிகாரிகள் ஏற்க மறுப்பதால் 1000 கிலோ தங்கம் தேங்கி கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கத்தை காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் ஏழுமலையான் உண்டியலில் தினமும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

    திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் இது வரை அளித்துள்ள நகைகளின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கிலோவை கடந்து விட்டது. அதில் 1000 கிலோ நகையை தங்க முதலீடு திட்டத்திக் கீழ் முதலீடு செய்ய திருப்பதி-திருமலை தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து பொதுத்துறை வங்கிகளை கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்பதி ஆலய அதிகாரிகள் அணுகி இது குறித்து பேசினார்கள். பக்தர்கள் பயன்படுத்திய நகைகளாக உள்ள அந்த 1000 கிலோ தங்கத்தில் ஒவ்வொரு வங்கிக்கும் எத்தனை கிலோ நகைகளை கொடுப்பது என்று பேசி வந்தனர்.

    இந்த நகைகளை வங்கி அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் மும்பைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மும்பையில் அந்த நகைகள் உருக்கி 999 கே.டி.எம் ஆக மாற்றப்படும். இந்த பொறுப்பை ஏற்க வங்கி அதிகாரிகள் தயங்குகிறார்கள். இதனால் திருப்பதி கோவிலின் 1000 கிலோ நகைகள் கடந்த 2 மாதமாக எந்த வங்கிக்கும் செல்லாமல் உள்ளது.

    இதற்கிடையே அடுத்த 2 மாதத்தில் மேலும் 400 கிலோ நகைகள் சேர்ந்து விடும் என்று தெரியவந்துள்ளது. எனவே 1000 கிலோ நகையை பெற்று கொள்ளும்படி வங்கிகளுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

  • 2016-08-12-08-01-05

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தங்கத்தை வங்கி அதிகாரிகள் ஏற்க மறுப்பதால் 1000 கிலோ தங்கம் தேங்கி கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கத்தை காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் ஏழுமலையான் உண்டியலில் தினமும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

    திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் இது வரை அளித்துள்ள நகைகளின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கிலோவை கடந்து விட்டது. அதில் 1000 கிலோ நகையை தங்க முதலீடு திட்டத்திக் கீழ் முதலீடு செய்ய திருப்பதி-திருமலை தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து பொதுத்துறை வங்கிகளை கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்பதி ஆலய அதிகாரிகள் அணுகி இது குறித்து பேசினார்கள். பக்தர்கள் பயன்படுத்திய நகைகளாக உள்ள அந்த 1000 கிலோ தங்கத்தில் ஒவ்வொரு வங்கிக்கும் எத்தனை கிலோ நகைகளை கொடுப்பது என்று பேசி வந்தனர்.

    இந்த நகைகளை வங்கி அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் மும்பைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மும்பையில் அந்த நகைகள் உருக்கி 999 கே.டி.எம் ஆக மாற்றப்படும். இந்த பொறுப்பை ஏற்க வங்கி அதிகாரிகள் தயங்குகிறார்கள். இதனால் திருப்பதி கோவிலின் 1000 கிலோ நகைகள் கடந்த 2 மாதமாக எந்த வங்கிக்கும் செல்லாமல் உள்ளது.

    இதற்கிடையே அடுத்த 2 மாதத்தில் மேலும் 400 கிலோ நகைகள் சேர்ந்து விடும் என்று தெரியவந்துள்ளது. எனவே 1000 கிலோ நகையை பெற்று கொள்ளும்படி வங்கிகளுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

  • 9

    உணவகத்தை விட்டு வெளியே வந்து, அமெரிக்கரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு எங்கள் விடுதிக்குத் திரும்பினோம். அமெரிக்கருக்கு அமெரிக்காவில் மனைவியும் வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்களாம். ஆண்டுக்குச் சில மாதங்கள் மட்டும் விடுப்பில் கம்போடியா வந்து இந்த ஊர் மனைவியோடு குடும்பம் நடத்தி விட்டுச் செல்கிறாராம். இது கம்போடியாவில் பரவலாகப் புழக்கத்தில் இருக்கிறது. கம்போடியாவில் மட்டுமல்ல, தாய்லந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருக்கிறது.

    இந்தோனேசியாவின் பாலித் தீவுக்குச் சென்றிருந்தபோதும் இதுபோன்ற கதைகளைக் கேள்விப்பட்டோம். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பேங்காக் சென்றிருந்தபோது, விமான நிலையத்திலேயே வெள்ளைக்காரர்கள் (பெரும்பாலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்) உள்ளூர்ப் பெண்களோடு அறிமுகமாகி ஊர் சுற்றுவதை சகஜமாகக் காண முடிந்தது. அந்த நாட்டுக்குத் தனியாக வருபவர்கள், உள்ளூரில் துணையைத் தேடிக் கொண்டு உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டுப் போகிறார்கள் என்றுதான் அப்போது புரிந்து கொண்டேன். பெரும்பாலும் அப்படித்தான்.

    ஆனால், வெள்ளைக்காரக் கணவருக்காகவே இந்த நாடுகளில் காத்திருக்கும் பருவகால மனைவிகளும் இருக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். புதிய இளம் மனைவிக்கான முழுச் செலவையும் வெளிநாட்டுக் கணவர் ஏற்றுக் கொள்கிறார். மிகப் பெரும்பாலோர் தரமான வீடும் வாங்கிக் கொடுத்து விடுவார்களாம்.

    இளம் மனைவிக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்துக்கே இந்த வெள்ளைக்கார முதிர் மாப்பிள்ளைகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்களாம். தாத்தா, பாட்டி உட்பட… இவ்வாறு வயதான வெள்ளைக்கார மாப்பிள்ளைக்கு வாழ்க்கப்படுவது குறித்து இளம்பெண்களுக்கு எந்த மனக்குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. மகிழ்ச்சியாகவே அதை ஏற்றுக் கொள்கிறார்கள் போலும்.

    அந்த நாட்டு வறுமைச் சூழல் அவர்களை அதை ஏற்றுக் கொள்ளச் செய்திருக்க வேண்டும். இந்தக் கதை தெரிந்த பின் கண்ணில் தென்படும் பொருத்தமற்ற ஜோடிகள் பற்றிய எங்கள் மனப்போக்கு மாறியது. அவரவர் வாழ்க்கை அவரவர் முடிவு. இதில் நாம் யார் அதுபற்றித் தீர்மானிக்க ?

    உணவகத்துக்கு அருகிலிருந்த ஒரு பெரிய பேரங்காடியில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு விடுதிக்கு வந்து உடனே தூங்கி விட்டோம். நாளைக் காலையில், கருக்கலில் சென்று அங்கோர் வாட் ஆலயத்தைக் காணத் தீர்மானித்திருந்தோம். ஒரு நாள்தான் இருக்கிறது. முழுமையாகப் பார்த்துவிட முடியுமா என்று தெரியவில்லை. பார்ப்போம். அங்கோர் வாட்டுக்குப் பிறகு பாயோன் கோயில் பார்த்துவிட்டு மாலையே புனோம்பென் புறப்படுவதாகத் திட்டம்.

    அதிகாலையில் பல்விளக்கித் தயாராக இருந்தோம். குளிக்கவில்லை. புலரியில் ஆலயத்தைப் பார்த்துப் படங்கள் கொஞ்சம் எடுத்துவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்து குளித்துக் கிளம்பிக் கோயிலை விஸ்தாரமாய்ப் பார்ப்பதாக ஏற்பாடு. டாண் எனக் காலை ஐந்து மணிக்கு ஓட்டுநர் ரா வந்துவிட்டார். பொழுது விடியும் நேரத்தில் எந்த ஊரும் அழகுதான்.

    எங்களைப் போன்ற சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாய் வண்டிகளில் வந்து கொண்டிருந்தார்கள். அங்கோர் வாட் ஆலய வளாகத்துக்குச் செல்ல சியாம் ரீப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நுழைவுச் சீட்டு கொடுக்கிறார்கள். ஒரு நாள் சுற்றிப் பார்க்க, இரண்டு நாள் பார்க்க, ஒரு வாரம், ஒரு மாதம், ஆறு மாதம் தங்கி ஆய்வு செய்ய எனத் தனித்தனியாகக் கட்டணம். நாங்கள் ஒருநாள் நுழைவுச் சீட்டு சூரியோதய வேளைக்குச் சேர்த்து வாங்கினோம். 20 அமெரிக்க டாலர் வழக்கம்போல்.

    நுழைவுச் சீட்டு ஒவ்வொருவராக, தனித்தனியேதான் எடுக்க வேண்டும். அங்கேயே உள்ள கேமராவை நம்மைப் பார்க்கச் சொல்லிப் படமெடுத்து அதை நுழைவுச் சீட்டில் பதித்து விடுகிறார்கள். ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. “கோளாறுக்காரப் பயபுள்ளைக”தான் என்று நினைத்துக் கொண்டேன். சிங்கப்பூரில் கூட இந்தப் பழக்கமில்லை. பதியப்பட்ட படத்தைப் பார்த்து எனக்கே பயமாகிவிட்டது. குளிக்காமல் கொள்ளாமல் ஙே என்று முழித்துக் கொண்டிருந்தேன் படத்தில்.

    சியாம் ரீப்பில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆலய வளாகத்திற்கு நம்ம ஊர் ஆட்டோபோல சின்னச் சின்ன வாகனங்கள் அழைத்துச் செல்கின்றன. எங்களிடம் வேன் இருந்ததால் அதிலேயே சென்றோம். எனக்கு மனம் திக்திக்கென அடிக்கத் தொடங்கியது. கடவுளே ! நிஜமாகவே நான் அங்கோர் வாட்டைப் பார்க்கப் போகிறேனா ? இது நிஜம்தானா ? வேன் செல்லும் வேகத்தைத் தாண்டி என் ஆவல் பறந்தது.

    வாழ்நாள் கனவு ஒன்று இன்னும் சில நிமிடங்களில் நிறைவேறப் போகிறது என்ற பதற்றம் என்னை நிலையழியச் செய்தது. நண்பர்களோடு அதிகம் பேசவில்லை. எனக்குள் மூழ்கிப் போனேன். எத்தனை ஆண்டுகள் நினைத்து நினைத்து ஏங்கிய இடம் ?

    சிங்கப்பூருக்கு வந்திருக்காவிட்டால் இங்கே என்னால் வந்திருக்க முடியுமா? அதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா? அதற்கான பொருளாதார வசதி இருந்திருக்குமா? நான் சிங்கப்பூர் வருவதற்குக் காரணமாக இருந்த ஆருயிர்த் தோழன் அசோகன், சம்பத், வீரமணி உள்ளிட்ட நண்பர்களை மனத்துக்குள் நினைத்துப் பார்த்து நன்றி சொன்னேன். அசோகன் இந்த பூமியிலேயே இல்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் காசநோயால் காலமாகிவிட்டான். அசோகா நீ எங்காவது பக்கத்தில் இருக்கிறாயாடா ? இருந்தால் உன்னைத் தழுவிக் கொள்கிறேனடா..

    இதோ உன் தோழன் அங்கோர் வாட் பார்க்கப் போகிறான் ! காரைக்காலில் நீ எடுத்துக் கொடுத்த விசா மூலம் சிங்கப்பூர் வந்தவன், சிறுவயதிலிருந்து கனவு கண்ட இடத்தை நேரில் பார்க்கப் போகிறான். மானசீகமாக உன்னோடு இந்த இடத்தைப் பார்க்கப் போகிறேனடா..

    வெளியே இன்னும் விடிந்திருக்கவில்லை. ஆலயத்திற்கு எதிரே எங்களை இறக்கிவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் அதே இடத்துக்கு வரும்படி சொல்லிவிட்டு ரா போய்விட்டார். நாங்கள் ஓட்டமும் நடையுமாய், அகழியைக் கடப்பதற்காக உள்ள பாதையில் சென்றோம். நன்கு மழை பெய்து வெறித்திருந்ததால், பாசி படிந்த சுவர்கள் மழைநீரில் ஊறிப் பேரழகோடு திகழ்ந்தன. ஆலயங்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்துக் கொண்டிருந்தனர்.

    ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் படிகள் வழக்கத்தை விடச் சற்றே உயரமான படிகள். வெளிச்சம் லேசாகத்தான் வரத் தொடங்கியிருந்தது என்றாலும், நன்கு வியர்த்தது.

    அகழியைக் கடக்குமிடத்திலிருந்து உள்ளே இருக்கும் ஆலய முகடுகள் தெரியவில்லை. முதலில் உள்ள மூன்று மொட்டைக் கோபுரங்கள்தான் தெரிந்தன. அதற்குப் பின்னால் வெகுதொலைவில் இருக்கின்றன ஐந்து மேருக்களும். அகழிப் பாதையின் இரண்டு பக்கத்திலும் நீண்ட வாலுடைய ஏழு தலை நாகங்களும் அவற்றின் முடிவில், கலிங்கப் பேரரசின் சின்னமான சிங்கமும் இருந்தன.

    பல இடங்களில் ஏழு தலை நாகங்களின் தலை உடைந்து அதை சிமெண்ட்டால் மாற்றிக் கட்டியிருந்ததைக் கண்டோம். நடைபாதைக் கற்களின்மீது ஆங்காங்கே மழைநீர் தேங்கிக் கிடந்தது. முதல் படிக்கட்டை ஏறி மொட்டைக் கோபுரத்தைக் கடந்ததும் புலரத் தொடங்கியிருந்த நீலவானப் பின்னணியில் ஆலய முகடுகள் விளிம்பு ரூபமாய்த் தெரிந்தன. படிக்கட்டில் ஏறி கல்நிலைச் சட்டத்துக்குள் அந்த முகடுகளை ஓர் ஓவியம்போலப் பார்த்தபோது மெல்லிய இசை கேட்பது போலிருந்தது எனக்கு. தாஜ்மகாலைப் பார்த்த போதும் இப்படித்தான் உணர்ந்தேன்.

    மொட்டைக் கோபுரத் தளத்திலேயே நின்று சற்று நேரம் ஆலயத்தை ரசித்தோம். கேமராவில் படம் எடுத்துப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சமாக இருப்பது போலிருந்தது. ஆனால் உண்மையில் அவ்வளவாக வெளிச்சம் வரவில்லை. ஆலயத்துக்கு உள்ளேயும் வெளியிலும் ஏராளமான பனைமரங்கள் நின்றிருந்தன. ஐந்து மேருக்களும் அடங்கக்கூடிய படங்களில் முகடுகளின் இருபக்கங்களிலும், கேரளக் கோயில் திருவிழாக்களில் யானை மேல் அமர்ந்து பிடிப்பார்களே.. அலங்கார வேலைப்பாடு மிக்க இரண்டு பெரிய வட்டங்கள்.. அதுபோல் உயரமான இரண்டு பனைமரங்கள் நிற்பதைப் பார்க்கலாம்.

    நாங்கள் ஆலயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பயணிகள் சாரி சாரியாக உள்ளே செல்லத் தொடங்கினர். நாங்கள் நின்றிருந்த இடத்தைச் சுற்றிப் பெரிதாக சிற்ப வேலைப்பாடுகள் இல்லை. தூண்களில் அப்சரஸ் நடனமணிகள் பல நிலைகளில் இருந்தனர். சில படங்கள் எடுத்துவிட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினோம். மேரு நாங்கள் நெருங்க நெருங்க எங்களை விட்டு விலகிச் சென்று கொண்டே பெரிதாகத் தொடங்கியது.

    இணைப்புப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் இடிந்த இரண்டு மண்டபங்கள் இருந்தன. அவை முழுமையாக இருந்தால் கூட இவ்வளவு அழகும் அமானுஷ்யமும் அவற்றுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அவை அக்கால நூலகங்களாம். பின்னர் வந்த வழிகாட்டி சொன்னார். ஆலய வளாகத்துக்குள் நூலகத்துக்கும் இடமளித்த மன்னன் இரண்டாம் சூரியவர்மனுக்கு ஒரு ஜே !..

    இப்போது நன்கு விடிந்து விட்டிருந்தது. ஆலயம் மேற்குப் பார்த்தது என்பதால், சூரியக் கிரணங்கள் மேருக்களுக்குப் பின்னாலிருந்து எழும். மசமசவெனப் பரவிய வெளிச்சம் மஞ்சள் நிறத்தை அடைந்தது. மேருவை நோக்கிய பாதையின் இரண்டு புறங்களிலும் சின்னக் குளங்கள் உள்ளன. அவற்றில் இடப்பக்கமாக உள்ள குளத்தில் தண்ணீர் நிறையவே இருந்தது. அதன் கரையில்போய் நாங்கள் நின்று கொண்டோம்.

    ஆலயத்தின் ஐந்து முகடுகளும் சுற்றியிருந்த மதில் சுவரோடு சேர்ந்திருந்த மொட்டைக் கோபுரங்களோடு குளத்து நீரில் எதிரொளித்தன. ஆலயத்தையும் அதன் பிரதிபலிப்பையும் ஒருசேரக் காண்பது இனிமையாக இருந்தது. சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் இப்படித்தான் வடக்குக் கோபுரம் அழகாகப் பிரதிபலிக்கும். காணத் திகட்டாத காட்சி.

    கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் ஏறியது. அங்கே அந்த அனுபவத்தைச் சிதைப்பதற்கென்றே சிறு வியாபாரிகள் கூட்டமொன்று இருக்கிறது. காஃபி, தேநீர், நொறுக்குத் தீனி, காலை பசியாற என்று என்னென்னவோ விற்கிறார்கள். ஆனால் நம்மை வற்புறுத்தவில்லை வாங்கச் சொல்லி. அதுவரை பரவாயில்லை. இருந்தாலும் சளசளவெனப் பேசிக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் அவர்கள் அலைவது அந்த இடத்தின் அமைதியைக் குலைப்பதாகவே பட்டது எனக்கு.

    எத்தனை ஆண்டுகளாக இந்த ஆலயம் நிற்கிறது? என்னென்ன அரசியல் மாற்றங்களையும் இயற்கைச் சீற்றங்களையும் இது மௌன சாட்சியாய்ப் பார்த்திருக்கும்? ஆலயத்தின் முன்புறத்திலிருந்து சூரியக் கிரணங்கள் விழுந்து கோபுரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் துலக்கம் பெறுவது ஒருவகை. ஆனால் இங்கோ ஒளி பின்னால் இருந்து எழுவது ஆலய விளிம்புகளை ஒளிரச் செய்து ஒரு வசீகரத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

    தாஜ்மகாலில் அதன் நுணுக்கமான வேலைப்பாடும் எழிலும் நம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் இங்கே முதலில் கண்ணுக்குத் தெரிவது இதன் பிரமாண்டமும் ஒத்திசைவும்தான். வரிசை வரிசையாக அணிவகுக்கும் தூண்கள். ஆங்காங்கே கோபுரங்கள். எல்லாவற்றையும் சரடுபோல் இணைக்கும் சாளரங்கள். அவற்றை மூடிய கற்பாளங்கள். அங்கோர் குழும நினைவுச் சின்னங்களில் இதுவே தலையாயது. ஆகப் பெரியது. முழுமையாக இன்று கிடைக்கக் கூடியது.

    அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிக்குச் சென்றுவிட்டு அங்கு எடுத்த படங்களை, ஓவியரான நண்பர் பாஸ்கரிடம் காட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு ஓவிய ஞானமெல்லாம் கிடையாது.    

    பிக்காசோ ஓவியம் வந்திருக்கிறதே என்று பார்க்கப் போனேன். அப்போது பாஸ்கர் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கிருந்த ஓர் ஐரோப்பிய ஓவியத்தில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட காட்சி என்னைப் பெரிதும் கவர்ந்தது. அது அழகாய் இருப்பதாக நான் சொன்னபோது பாஸ்கர் அந்த ஓவியரின் திறமையை உணரச் செய்யும் மற்ற அம்சங்களை எடுத்துக் காட்டினார். ஒவ்வொன்றையும் சமன்படுத்தும் வகையில், வண்ணச் சேர்க்கை ஆங்காங்கே தீட்டப்பட்டிருந்ததைச் சுட்டினார்.

    ஓர் ஓவியராக அவர் அந்தப் படைப்பைச் சிலாகித்தது அதன் சமநிலையை. அதேபோல், அங்கோர் வாட் ஆலயம் எல்லாக் கோணத்திலும் சமநிலைப்படுத்தப்பட்டிருந்தது. இடப்பக்கம் ஒன்றிருந்தால் உடனே வலப்பக்கமும் அதே போன்ற ஒன்று சமன்படுத்துகிறது. இது விரிந்து விரிந்து மிகப் பெரிய ஒத்திசைவை உண்டாக்குகிறது. இதன் பிரமாண்டம், பேரழகு எல்லாவற்றுக்கும் இதுதான் அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும்.

    இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் உள்ள புகழ்பெற்ற நீண்ட மூன்றாம் பிரகாரத் தூண்களை நினைத்துக் கொள்ளுங்கள். அதுபோன்ற ஒத்திசைவு எப்போதுமே அழகுதான் கட்டடக் கலையில். வரிசை வரிசையாக நிற்கும் தூண்களுக்கு இடையே ஒருவரை நிற்க வைத்துப் படம் எடுத்தால் அதில் ஓர் அழகு கூடிவரும். அது இதனால்தான்.

    இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கண்களைத் திருப்பித் திருப்பி ஆசை தீர அங்கோர் வாட்டின் அழகை அள்ளிப் பருகினோம். இந்தக் காலை நேர இதமான சூழலை நினைவுக்குள் பொதிந்து வைக்கப் படமும் எடுத்துக் கொண்டோம். விடுதிக்குச் சென்று குளித்து, பசியாறித் திரும்புவோம் என்று புறப்பட்டோம். வழியில் அவ்வப்போது நின்று ஆலயத்தைத் திரும்பிப் பார்ப்போம். இன்னும் பல இடங்களில் சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. மதில்களுக்கு மேல், மொட்டைக் கோபுரங்களுக்கு மேல் என்று பிளாஸ்டிக் கூரையமைத்துப் பல நிபுணர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அது இப்போதைக்கு முடியாத செயலாக இருக்க வேண்டும்.

    ஆங்காங்கே கற்கள் குவியல் குவியலாகக் கிடக்கின்றன. அவற்றை எடுத்து அடையாளங்கண்டு உரிய இடத்தில் பொருத்த வேண்டும். எப்படி அந்தந்தக் கற்களுக்கு உரிய இடத்தைக் கண்டுபிடிப்பார்கள்? ஆச்சர்யம்தான். ஆனால், அவர்கள் அதற்கெனப் பயிற்சி எடுத்திருப்பார்களாக இருக்கும். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலை, இந்தியத் தொல்லியல் துறை இப்படித்தான் புதுப்பித்தது. ஒவ்வொரு கல்லையும் திசை, வரிசை, மேலிருந்து கீழ் எனக் கணக்கிட்டுப் பிரித்து உரிய முறையில் மீண்டும் அடுக்கியிருந்ததைக் கண்ணால் பார்த்தேன். இப்போதும் தாராசுரம் மதில் சுவரில் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.

     அதுபோல் அங்கோர் வாட் ஆலயம் 20, 30 ஆண்டுகள் கழித்து சீரமைப்புப் பணிகள் முடியும்போது புதுக் கோணத்தில் வடிவத்தில் இருக்கலாம். யார் கண்டது? மனித மூளையின் ஆற்றலுக்கு ஏது இணை?

     

    – பொன். மகாலிங்கம்

     

     

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com   

  • 9

    உணவகத்தை விட்டு வெளியே வந்து, அமெரிக்கரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு எங்கள் விடுதிக்குத் திரும்பினோம். அமெரிக்கருக்கு அமெரிக்காவில் மனைவியும் வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்களாம். ஆண்டுக்குச் சில மாதங்கள் மட்டும் விடுப்பில் கம்போடியா வந்து இந்த ஊர் மனைவியோடு குடும்பம் நடத்தி விட்டுச் செல்கிறாராம். இது கம்போடியாவில் பரவலாகப் புழக்கத்தில் இருக்கிறது. கம்போடியாவில் மட்டுமல்ல, தாய்லந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருக்கிறது.

    இந்தோனேசியாவின் பாலித் தீவுக்குச் சென்றிருந்தபோதும் இதுபோன்ற கதைகளைக் கேள்விப்பட்டோம். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பேங்காக் சென்றிருந்தபோது, விமான நிலையத்திலேயே வெள்ளைக்காரர்கள் (பெரும்பாலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்) உள்ளூர்ப் பெண்களோடு அறிமுகமாகி ஊர் சுற்றுவதை சகஜமாகக் காண முடிந்தது. அந்த நாட்டுக்குத் தனியாக வருபவர்கள், உள்ளூரில் துணையைத் தேடிக் கொண்டு உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டுப் போகிறார்கள் என்றுதான் அப்போது புரிந்து கொண்டேன். பெரும்பாலும் அப்படித்தான்.

    ஆனால், வெள்ளைக்காரக் கணவருக்காகவே இந்த நாடுகளில் காத்திருக்கும் பருவகால மனைவிகளும் இருக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். புதிய இளம் மனைவிக்கான முழுச் செலவையும் வெளிநாட்டுக் கணவர் ஏற்றுக் கொள்கிறார். மிகப் பெரும்பாலோர் தரமான வீடும் வாங்கிக் கொடுத்து விடுவார்களாம்.

    இளம் மனைவிக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்துக்கே இந்த வெள்ளைக்கார முதிர் மாப்பிள்ளைகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்களாம். தாத்தா, பாட்டி உட்பட… இவ்வாறு வயதான வெள்ளைக்கார மாப்பிள்ளைக்கு வாழ்க்கப்படுவது குறித்து இளம்பெண்களுக்கு எந்த மனக்குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. மகிழ்ச்சியாகவே அதை ஏற்றுக் கொள்கிறார்கள் போலும்.

    அந்த நாட்டு வறுமைச் சூழல் அவர்களை அதை ஏற்றுக் கொள்ளச் செய்திருக்க வேண்டும். இந்தக் கதை தெரிந்த பின் கண்ணில் தென்படும் பொருத்தமற்ற ஜோடிகள் பற்றிய எங்கள் மனப்போக்கு மாறியது. அவரவர் வாழ்க்கை அவரவர் முடிவு. இதில் நாம் யார் அதுபற்றித் தீர்மானிக்க ?

    உணவகத்துக்கு அருகிலிருந்த ஒரு பெரிய பேரங்காடியில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு விடுதிக்கு வந்து உடனே தூங்கி விட்டோம். நாளைக் காலையில், கருக்கலில் சென்று அங்கோர் வாட் ஆலயத்தைக் காணத் தீர்மானித்திருந்தோம். ஒரு நாள்தான் இருக்கிறது. முழுமையாகப் பார்த்துவிட முடியுமா என்று தெரியவில்லை. பார்ப்போம். அங்கோர் வாட்டுக்குப் பிறகு பாயோன் கோயில் பார்த்துவிட்டு மாலையே புனோம்பென் புறப்படுவதாகத் திட்டம்.

    அதிகாலையில் பல்விளக்கித் தயாராக இருந்தோம். குளிக்கவில்லை. புலரியில் ஆலயத்தைப் பார்த்துப் படங்கள் கொஞ்சம் எடுத்துவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்து குளித்துக் கிளம்பிக் கோயிலை விஸ்தாரமாய்ப் பார்ப்பதாக ஏற்பாடு. டாண் எனக் காலை ஐந்து மணிக்கு ஓட்டுநர் ரா வந்துவிட்டார். பொழுது விடியும் நேரத்தில் எந்த ஊரும் அழகுதான்.

    எங்களைப் போன்ற சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாய் வண்டிகளில் வந்து கொண்டிருந்தார்கள். அங்கோர் வாட் ஆலய வளாகத்துக்குச் செல்ல சியாம் ரீப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நுழைவுச் சீட்டு கொடுக்கிறார்கள். ஒரு நாள் சுற்றிப் பார்க்க, இரண்டு நாள் பார்க்க, ஒரு வாரம், ஒரு மாதம், ஆறு மாதம் தங்கி ஆய்வு செய்ய எனத் தனித்தனியாகக் கட்டணம். நாங்கள் ஒருநாள் நுழைவுச் சீட்டு சூரியோதய வேளைக்குச் சேர்த்து வாங்கினோம். 20 அமெரிக்க டாலர் வழக்கம்போல்.

    நுழைவுச் சீட்டு ஒவ்வொருவராக, தனித்தனியேதான் எடுக்க வேண்டும். அங்கேயே உள்ள கேமராவை நம்மைப் பார்க்கச் சொல்லிப் படமெடுத்து அதை நுழைவுச் சீட்டில் பதித்து விடுகிறார்கள். ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. “கோளாறுக்காரப் பயபுள்ளைக”தான் என்று நினைத்துக் கொண்டேன். சிங்கப்பூரில் கூட இந்தப் பழக்கமில்லை. பதியப்பட்ட படத்தைப் பார்த்து எனக்கே பயமாகிவிட்டது. குளிக்காமல் கொள்ளாமல் ஙே என்று முழித்துக் கொண்டிருந்தேன் படத்தில்.

    சியாம் ரீப்பில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆலய வளாகத்திற்கு நம்ம ஊர் ஆட்டோபோல சின்னச் சின்ன வாகனங்கள் அழைத்துச் செல்கின்றன. எங்களிடம் வேன் இருந்ததால் அதிலேயே சென்றோம். எனக்கு மனம் திக்திக்கென அடிக்கத் தொடங்கியது. கடவுளே ! நிஜமாகவே நான் அங்கோர் வாட்டைப் பார்க்கப் போகிறேனா ? இது நிஜம்தானா ? வேன் செல்லும் வேகத்தைத் தாண்டி என் ஆவல் பறந்தது.

    வாழ்நாள் கனவு ஒன்று இன்னும் சில நிமிடங்களில் நிறைவேறப் போகிறது என்ற பதற்றம் என்னை நிலையழியச் செய்தது. நண்பர்களோடு அதிகம் பேசவில்லை. எனக்குள் மூழ்கிப் போனேன். எத்தனை ஆண்டுகள் நினைத்து நினைத்து ஏங்கிய இடம் ?

    சிங்கப்பூருக்கு வந்திருக்காவிட்டால் இங்கே என்னால் வந்திருக்க முடியுமா? அதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா? அதற்கான பொருளாதார வசதி இருந்திருக்குமா? நான் சிங்கப்பூர் வருவதற்குக் காரணமாக இருந்த ஆருயிர்த் தோழன் அசோகன், சம்பத், வீரமணி உள்ளிட்ட நண்பர்களை மனத்துக்குள் நினைத்துப் பார்த்து நன்றி சொன்னேன். அசோகன் இந்த பூமியிலேயே இல்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் காசநோயால் காலமாகிவிட்டான். அசோகா நீ எங்காவது பக்கத்தில் இருக்கிறாயாடா ? இருந்தால் உன்னைத் தழுவிக் கொள்கிறேனடா..

    இதோ உன் தோழன் அங்கோர் வாட் பார்க்கப் போகிறான் ! காரைக்காலில் நீ எடுத்துக் கொடுத்த விசா மூலம் சிங்கப்பூர் வந்தவன், சிறுவயதிலிருந்து கனவு கண்ட இடத்தை நேரில் பார்க்கப் போகிறான். மானசீகமாக உன்னோடு இந்த இடத்தைப் பார்க்கப் போகிறேனடா..

    வெளியே இன்னும் விடிந்திருக்கவில்லை. ஆலயத்திற்கு எதிரே எங்களை இறக்கிவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் அதே இடத்துக்கு வரும்படி சொல்லிவிட்டு ரா போய்விட்டார். நாங்கள் ஓட்டமும் நடையுமாய், அகழியைக் கடப்பதற்காக உள்ள பாதையில் சென்றோம். நன்கு மழை பெய்து வெறித்திருந்ததால், பாசி படிந்த சுவர்கள் மழைநீரில் ஊறிப் பேரழகோடு திகழ்ந்தன. ஆலயங்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்துக் கொண்டிருந்தனர்.

    ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் படிகள் வழக்கத்தை விடச் சற்றே உயரமான படிகள். வெளிச்சம் லேசாகத்தான் வரத் தொடங்கியிருந்தது என்றாலும், நன்கு வியர்த்தது.

    அகழியைக் கடக்குமிடத்திலிருந்து உள்ளே இருக்கும் ஆலய முகடுகள் தெரியவில்லை. முதலில் உள்ள மூன்று மொட்டைக் கோபுரங்கள்தான் தெரிந்தன. அதற்குப் பின்னால் வெகுதொலைவில் இருக்கின்றன ஐந்து மேருக்களும். அகழிப் பாதையின் இரண்டு பக்கத்திலும் நீண்ட வாலுடைய ஏழு தலை நாகங்களும் அவற்றின் முடிவில், கலிங்கப் பேரரசின் சின்னமான சிங்கமும் இருந்தன.

    பல இடங்களில் ஏழு தலை நாகங்களின் தலை உடைந்து அதை சிமெண்ட்டால் மாற்றிக் கட்டியிருந்ததைக் கண்டோம். நடைபாதைக் கற்களின்மீது ஆங்காங்கே மழைநீர் தேங்கிக் கிடந்தது. முதல் படிக்கட்டை ஏறி மொட்டைக் கோபுரத்தைக் கடந்ததும் புலரத் தொடங்கியிருந்த நீலவானப் பின்னணியில் ஆலய முகடுகள் விளிம்பு ரூபமாய்த் தெரிந்தன. படிக்கட்டில் ஏறி கல்நிலைச் சட்டத்துக்குள் அந்த முகடுகளை ஓர் ஓவியம்போலப் பார்த்தபோது மெல்லிய இசை கேட்பது போலிருந்தது எனக்கு. தாஜ்மகாலைப் பார்த்த போதும் இப்படித்தான் உணர்ந்தேன்.

    மொட்டைக் கோபுரத் தளத்திலேயே நின்று சற்று நேரம் ஆலயத்தை ரசித்தோம். கேமராவில் படம் எடுத்துப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சமாக இருப்பது போலிருந்தது. ஆனால் உண்மையில் அவ்வளவாக வெளிச்சம் வரவில்லை. ஆலயத்துக்கு உள்ளேயும் வெளியிலும் ஏராளமான பனைமரங்கள் நின்றிருந்தன. ஐந்து மேருக்களும் அடங்கக்கூடிய படங்களில் முகடுகளின் இருபக்கங்களிலும், கேரளக் கோயில் திருவிழாக்களில் யானை மேல் அமர்ந்து பிடிப்பார்களே.. அலங்கார வேலைப்பாடு மிக்க இரண்டு பெரிய வட்டங்கள்.. அதுபோல் உயரமான இரண்டு பனைமரங்கள் நிற்பதைப் பார்க்கலாம்.

    நாங்கள் ஆலயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பயணிகள் சாரி சாரியாக உள்ளே செல்லத் தொடங்கினர். நாங்கள் நின்றிருந்த இடத்தைச் சுற்றிப் பெரிதாக சிற்ப வேலைப்பாடுகள் இல்லை. தூண்களில் அப்சரஸ் நடனமணிகள் பல நிலைகளில் இருந்தனர். சில படங்கள் எடுத்துவிட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினோம். மேரு நாங்கள் நெருங்க நெருங்க எங்களை விட்டு விலகிச் சென்று கொண்டே பெரிதாகத் தொடங்கியது.

    இணைப்புப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் இடிந்த இரண்டு மண்டபங்கள் இருந்தன. அவை முழுமையாக இருந்தால் கூட இவ்வளவு அழகும் அமானுஷ்யமும் அவற்றுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அவை அக்கால நூலகங்களாம். பின்னர் வந்த வழிகாட்டி சொன்னார். ஆலய வளாகத்துக்குள் நூலகத்துக்கும் இடமளித்த மன்னன் இரண்டாம் சூரியவர்மனுக்கு ஒரு ஜே !..

    இப்போது நன்கு விடிந்து விட்டிருந்தது. ஆலயம் மேற்குப் பார்த்தது என்பதால், சூரியக் கிரணங்கள் மேருக்களுக்குப் பின்னாலிருந்து எழும். மசமசவெனப் பரவிய வெளிச்சம் மஞ்சள் நிறத்தை அடைந்தது. மேருவை நோக்கிய பாதையின் இரண்டு புறங்களிலும் சின்னக் குளங்கள் உள்ளன. அவற்றில் இடப்பக்கமாக உள்ள குளத்தில் தண்ணீர் நிறையவே இருந்தது. அதன் கரையில்போய் நாங்கள் நின்று கொண்டோம்.

    ஆலயத்தின் ஐந்து முகடுகளும் சுற்றியிருந்த மதில் சுவரோடு சேர்ந்திருந்த மொட்டைக் கோபுரங்களோடு குளத்து நீரில் எதிரொளித்தன. ஆலயத்தையும் அதன் பிரதிபலிப்பையும் ஒருசேரக் காண்பது இனிமையாக இருந்தது. சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் இப்படித்தான் வடக்குக் கோபுரம் அழகாகப் பிரதிபலிக்கும். காணத் திகட்டாத காட்சி.

    கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் ஏறியது. அங்கே அந்த அனுபவத்தைச் சிதைப்பதற்கென்றே சிறு வியாபாரிகள் கூட்டமொன்று இருக்கிறது. காஃபி, தேநீர், நொறுக்குத் தீனி, காலை பசியாற என்று என்னென்னவோ விற்கிறார்கள். ஆனால் நம்மை வற்புறுத்தவில்லை வாங்கச் சொல்லி. அதுவரை பரவாயில்லை. இருந்தாலும் சளசளவெனப் பேசிக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் அவர்கள் அலைவது அந்த இடத்தின் அமைதியைக் குலைப்பதாகவே பட்டது எனக்கு.

    எத்தனை ஆண்டுகளாக இந்த ஆலயம் நிற்கிறது? என்னென்ன அரசியல் மாற்றங்களையும் இயற்கைச் சீற்றங்களையும் இது மௌன சாட்சியாய்ப் பார்த்திருக்கும்? ஆலயத்தின் முன்புறத்திலிருந்து சூரியக் கிரணங்கள் விழுந்து கோபுரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் துலக்கம் பெறுவது ஒருவகை. ஆனால் இங்கோ ஒளி பின்னால் இருந்து எழுவது ஆலய விளிம்புகளை ஒளிரச் செய்து ஒரு வசீகரத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

    தாஜ்மகாலில் அதன் நுணுக்கமான வேலைப்பாடும் எழிலும் நம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் இங்கே முதலில் கண்ணுக்குத் தெரிவது இதன் பிரமாண்டமும் ஒத்திசைவும்தான். வரிசை வரிசையாக அணிவகுக்கும் தூண்கள். ஆங்காங்கே கோபுரங்கள். எல்லாவற்றையும் சரடுபோல் இணைக்கும் சாளரங்கள். அவற்றை மூடிய கற்பாளங்கள். அங்கோர் குழும நினைவுச் சின்னங்களில் இதுவே தலையாயது. ஆகப் பெரியது. முழுமையாக இன்று கிடைக்கக் கூடியது.

    அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிக்குச் சென்றுவிட்டு அங்கு எடுத்த படங்களை, ஓவியரான நண்பர் பாஸ்கரிடம் காட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு ஓவிய ஞானமெல்லாம் கிடையாது.    

    பிக்காசோ ஓவியம் வந்திருக்கிறதே என்று பார்க்கப் போனேன். அப்போது பாஸ்கர் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கிருந்த ஓர் ஐரோப்பிய ஓவியத்தில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட காட்சி என்னைப் பெரிதும் கவர்ந்தது. அது அழகாய் இருப்பதாக நான் சொன்னபோது பாஸ்கர் அந்த ஓவியரின் திறமையை உணரச் செய்யும் மற்ற அம்சங்களை எடுத்துக் காட்டினார். ஒவ்வொன்றையும் சமன்படுத்தும் வகையில், வண்ணச் சேர்க்கை ஆங்காங்கே தீட்டப்பட்டிருந்ததைச் சுட்டினார்.

    ஓர் ஓவியராக அவர் அந்தப் படைப்பைச் சிலாகித்தது அதன் சமநிலையை. அதேபோல், அங்கோர் வாட் ஆலயம் எல்லாக் கோணத்திலும் சமநிலைப்படுத்தப்பட்டிருந்தது. இடப்பக்கம் ஒன்றிருந்தால் உடனே வலப்பக்கமும் அதே போன்ற ஒன்று சமன்படுத்துகிறது. இது விரிந்து விரிந்து மிகப் பெரிய ஒத்திசைவை உண்டாக்குகிறது. இதன் பிரமாண்டம், பேரழகு எல்லாவற்றுக்கும் இதுதான் அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும்.

    இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் உள்ள புகழ்பெற்ற நீண்ட மூன்றாம் பிரகாரத் தூண்களை நினைத்துக் கொள்ளுங்கள். அதுபோன்ற ஒத்திசைவு எப்போதுமே அழகுதான் கட்டடக் கலையில். வரிசை வரிசையாக நிற்கும் தூண்களுக்கு இடையே ஒருவரை நிற்க வைத்துப் படம் எடுத்தால் அதில் ஓர் அழகு கூடிவரும். அது இதனால்தான்.

    இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கண்களைத் திருப்பித் திருப்பி ஆசை தீர அங்கோர் வாட்டின் அழகை அள்ளிப் பருகினோம். இந்தக் காலை நேர இதமான சூழலை நினைவுக்குள் பொதிந்து வைக்கப் படமும் எடுத்துக் கொண்டோம். விடுதிக்குச் சென்று குளித்து, பசியாறித் திரும்புவோம் என்று புறப்பட்டோம். வழியில் அவ்வப்போது நின்று ஆலயத்தைத் திரும்பிப் பார்ப்போம். இன்னும் பல இடங்களில் சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. மதில்களுக்கு மேல், மொட்டைக் கோபுரங்களுக்கு மேல் என்று பிளாஸ்டிக் கூரையமைத்துப் பல நிபுணர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அது இப்போதைக்கு முடியாத செயலாக இருக்க வேண்டும்.

    ஆங்காங்கே கற்கள் குவியல் குவியலாகக் கிடக்கின்றன. அவற்றை எடுத்து அடையாளங்கண்டு உரிய இடத்தில் பொருத்த வேண்டும். எப்படி அந்தந்தக் கற்களுக்கு உரிய இடத்தைக் கண்டுபிடிப்பார்கள்? ஆச்சர்யம்தான். ஆனால், அவர்கள் அதற்கெனப் பயிற்சி எடுத்திருப்பார்களாக இருக்கும். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலை, இந்தியத் தொல்லியல் துறை இப்படித்தான் புதுப்பித்தது. ஒவ்வொரு கல்லையும் திசை, வரிசை, மேலிருந்து கீழ் எனக் கணக்கிட்டுப் பிரித்து உரிய முறையில் மீண்டும் அடுக்கியிருந்ததைக் கண்ணால் பார்த்தேன். இப்போதும் தாராசுரம் மதில் சுவரில் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.

     அதுபோல் அங்கோர் வாட் ஆலயம் 20, 30 ஆண்டுகள் கழித்து சீரமைப்புப் பணிகள் முடியும்போது புதுக் கோணத்தில் வடிவத்தில் இருக்கலாம். யார் கண்டது? மனித மூளையின் ஆற்றலுக்கு ஏது இணை?

     

    – பொன். மகாலிங்கம்

     

     

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com   

  • 2016-08-11-14-36-49

    வாழும் கலையின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதன்முறையாக இணையதளத்தின் மூலம் தனித்துவம் வாய்ந்த சுதர்சனக் கிரியா கற்றுத் தரவிருக்கின்றார். இந்தியா முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு மேல், இந்த பயிற்சியினை மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகஸ்ட் 19 முதல் 21 வரை ஆனந்த அனுபவம் என்றழைக்கப்படும் இந்த பயிற்சி நடைபெறும்.

    இந்தியா முழுவதிலும் –  ஷில்லாங் முதல் மும்பை வரை, ஜம்மு முதல் சென்னை வரை 2000 க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து தோற்ற நிலையில் பங்கேற்பவர்கள் ஒன்று கூடுவர். பயிற்சி நடைபெறும் அனைத்து  இணைய தள இடங்களிலும் வாழும் கலையின் ஆசிரியர் களும் தன்னார்வத் தொண்டர்களும் உடனிருப்பர்.

    இணைய தளம் தவிர ஸ்ரீ ஸ்ரீயிடமிருந்து இந்த நுட்பத்தை நேரிடையாகப் பயில சுமார் 3000 பேர் பெங்களூருவிலுள்ள வாழும் கலையின் சர்வ தேச மையத்திற்கு பயணம் செய்ய இருக்கின்றனர்.

    “அதிகப் பணி, குறைவான நேரம், ஆற்றலில்லாத நிலை ஆகியவையே மன அழுத்தம் ஏற்படக் காரணமாகின்றன” என்று கூறும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் “ஆனால் உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். பிராணாயாமம், தியானம் மற்றும் சுதர்சனக் கிரியா ஓர் நாளுக்குத் தேவையான ஆற்றலை அதிக அளவில் அளித்து, உங்களை மேலும் ஆக்க வளம் கொண்டவராக ஆக்குகிறது” என்கிறார்.

    ஆனந்த அனுபவப் பயிற்சியின் மைல் கல்லாகிய சுதர்சனக் கிரியா என்பது  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் அறியப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த தாள லயத்துடன் அமைந்த மூச்சுப் பயிற்சியாகும். இந்த தனித்துவம் வாய்ந்த மூச்சுப் பயிற்சி நுட்பம் மன அழுத்தம், களைப்பு, கோபம், விரக்தி, சோர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் அனைத்தையும் அகற்றி சாந்தம், ஆற்றல் கவனம் மற்றும் இளைப்பாறல் ஆகியவற்றைத் தரும்.

    கடந்த 35 ஆண்டுகளாக, இந்த நுட்பத்தால் பல்வேறு தரப்பைச் சேர்ந்த  மக்கள் – மருத்துவர்கள், இல்லதரசிகள், தீவிரவாதிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், போர் வீரர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள், சட்ட வல்லுநர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர், யூதர்கள், சமணர்கள் –  மூச்சு சக்தி மூலம் மனித இனத்தை இணைக்கின்றனர்.

    சுவாச நுட்பம், யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் தவிர,  பயிற்சியில்  வாழ்வில் எத்தகைய சிரமமான நிலையையும் கையாள நடைமுறைக் கருவிகளைக் கற்பிக்கும் ஞான அமர்வுகளும் இருக்கும். பயிற்சியின் இறுதியில் பங்கேற்பவர்கள் சாந்தம், ஸ்திரம் மற்றும் ஆனந்தமான மன நிலையையும், தன்னைச் சுற்றியிருப்பவர்களுடன் நல்ல தொடர்பினையும் அடைவர்.

    பிரசித்தி பெற்ற AIIMS மற்றும் NIMHANS உட்பட பல மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடை பெற்றுள்ள ஆய்வின்படி, சீராகத் தினமும் செய்யப்படும்  சுதர்சனக் கிரியாவின் மூலம் கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது :

    • இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகும்
    • படபடப்பு குறையும். மருத்துவம் மற்றும் உளப்பிணி சிகிச்சைகள் பயனளிக்காத நிலையிலுள்ள தனிநபர்கள்  71 % முதல் 73 % வரையில் குணமடைந்தும், 41 % பிணி குறைந்தும் உள்ளனர்.
    • மன அழுத்தம் நிறைந்த நோயாளிகள் சுதர்சனக் கிரியா பயின்ற பின்னர் ஒரு மாதத்திற்குள்ளாகவே 68 % முதல் 73 % வரையில் நோய் குறைவினை உணர்ந்திருக்கின்றனர்.
    • மூன்று மடங்கு அதிக ஆழ்ந்த ஓய்வு நிறைந்த உறக்க நிலைகளை பெற்றுள்ளனர்.
    • 12 வாரங்களில் நோய் எதிர்ப்பு செல்கள்  மேம்பாட்டினைப் பெற்றுள்ளனர்.

    சென்னை நகரில் இப்பயிற்சி 57 இடங்களில் நடைபெறும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இப்பயிற்சியினை எடுத்துக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு

    8144265265 என்னும் எண்ணிற்கு அழைக்கவும். ஊடகத் தொடர்பான கேள்விகளுக்கு 9884017767 என்ற எண்ணில் ராஜலக்ஷ்மி சுவாமிநாதனை அழைக்கவும். 

  • 2016-08-11-14-36-49

    வாழும் கலையின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதன்முறையாக இணையதளத்தின் மூலம் தனித்துவம் வாய்ந்த சுதர்சனக் கிரியா கற்றுத் தரவிருக்கின்றார். இந்தியா முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு மேல், இந்த பயிற்சியினை மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகஸ்ட் 19 முதல் 21 வரை ஆனந்த அனுபவம் என்றழைக்கப்படும் இந்த பயிற்சி நடைபெறும்.

    இந்தியா முழுவதிலும் –  ஷில்லாங் முதல் மும்பை வரை, ஜம்மு முதல் சென்னை வரை 2000 க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து தோற்ற நிலையில் பங்கேற்பவர்கள் ஒன்று கூடுவர். பயிற்சி நடைபெறும் அனைத்து  இணைய தள இடங்களிலும் வாழும் கலையின் ஆசிரியர் களும் தன்னார்வத் தொண்டர்களும் உடனிருப்பர்.

    இணைய தளம் தவிர ஸ்ரீ ஸ்ரீயிடமிருந்து இந்த நுட்பத்தை நேரிடையாகப் பயில சுமார் 3000 பேர் பெங்களூருவிலுள்ள வாழும் கலையின் சர்வ தேச மையத்திற்கு பயணம் செய்ய இருக்கின்றனர்.

    “அதிகப் பணி, குறைவான நேரம், ஆற்றலில்லாத நிலை ஆகியவையே மன அழுத்தம் ஏற்படக் காரணமாகின்றன” என்று கூறும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் “ஆனால் உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். பிராணாயாமம், தியானம் மற்றும் சுதர்சனக் கிரியா ஓர் நாளுக்குத் தேவையான ஆற்றலை அதிக அளவில் அளித்து, உங்களை மேலும் ஆக்க வளம் கொண்டவராக ஆக்குகிறது” என்கிறார்.

    ஆனந்த அனுபவப் பயிற்சியின் மைல் கல்லாகிய சுதர்சனக் கிரியா என்பது  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் அறியப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த தாள லயத்துடன் அமைந்த மூச்சுப் பயிற்சியாகும். இந்த தனித்துவம் வாய்ந்த மூச்சுப் பயிற்சி நுட்பம் மன அழுத்தம், களைப்பு, கோபம், விரக்தி, சோர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் அனைத்தையும் அகற்றி சாந்தம், ஆற்றல் கவனம் மற்றும் இளைப்பாறல் ஆகியவற்றைத் தரும்.

    கடந்த 35 ஆண்டுகளாக, இந்த நுட்பத்தால் பல்வேறு தரப்பைச் சேர்ந்த  மக்கள் – மருத்துவர்கள், இல்லதரசிகள், தீவிரவாதிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், போர் வீரர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள், சட்ட வல்லுநர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர், யூதர்கள், சமணர்கள் –  மூச்சு சக்தி மூலம் மனித இனத்தை இணைக்கின்றனர்.

    சுவாச நுட்பம், யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் தவிர,  பயிற்சியில்  வாழ்வில் எத்தகைய சிரமமான நிலையையும் கையாள நடைமுறைக் கருவிகளைக் கற்பிக்கும் ஞான அமர்வுகளும் இருக்கும். பயிற்சியின் இறுதியில் பங்கேற்பவர்கள் சாந்தம், ஸ்திரம் மற்றும் ஆனந்தமான மன நிலையையும், தன்னைச் சுற்றியிருப்பவர்களுடன் நல்ல தொடர்பினையும் அடைவர்.

    பிரசித்தி பெற்ற AIIMS மற்றும் NIMHANS உட்பட பல மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடை பெற்றுள்ள ஆய்வின்படி, சீராகத் தினமும் செய்யப்படும்  சுதர்சனக் கிரியாவின் மூலம் கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது :

    • இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகும்
    • படபடப்பு குறையும். மருத்துவம் மற்றும் உளப்பிணி சிகிச்சைகள் பயனளிக்காத நிலையிலுள்ள தனிநபர்கள்  71 % முதல் 73 % வரையில் குணமடைந்தும், 41 % பிணி குறைந்தும் உள்ளனர்.
    • மன அழுத்தம் நிறைந்த நோயாளிகள் சுதர்சனக் கிரியா பயின்ற பின்னர் ஒரு மாதத்திற்குள்ளாகவே 68 % முதல் 73 % வரையில் நோய் குறைவினை உணர்ந்திருக்கின்றனர்.
    • மூன்று மடங்கு அதிக ஆழ்ந்த ஓய்வு நிறைந்த உறக்க நிலைகளை பெற்றுள்ளனர்.
    • 12 வாரங்களில் நோய் எதிர்ப்பு செல்கள்  மேம்பாட்டினைப் பெற்றுள்ளனர்.

    சென்னை நகரில் இப்பயிற்சி 57 இடங்களில் நடைபெறும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இப்பயிற்சியினை எடுத்துக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு

    8144265265 என்னும் எண்ணிற்கு அழைக்கவும். ஊடகத் தொடர்பான கேள்விகளுக்கு 9884017767 என்ற எண்ணில் ராஜலக்ஷ்மி சுவாமிநாதனை அழைக்கவும். 

  • 2016-08-11-11-00-54

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரலட்சுமி விரத பூஜை நடக்கிறது.

    வரலட்சுமி விரத பூஜையில் பங்கு கொள்ள விரும்பும் பக்தர்களுக்கென தேவஸ்தானம் 200 டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான இ-தர்ஷன் கவுன்ட்டர்களில் ரூ. 500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இந்த டிக்கெட் மூலம் இருவர் வரலட்சுமி விரதத்தில் கலந்துகொள்ள முடியும். பங்கு கொள்பவருக்கு ஒரு அங்கவஸ்திரம், ஒரு ரவிக்கை துண்டு, ஒரு லட்டு, வடை பிரசாதமாக வழங்கப்படும். வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அன்று மாலை தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் வலம் வர உள்ளார்.

    மேலும் அன்றைய தினம் அபிஷேக சேவைக்கு பின் வழக்கமாக நடைபெறும் திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, லட்சுமி பூஜை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

  • 2016-08-11-10-44-32

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளி பெருவிழா ஆகஸ்டு 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இதையொட்டி, மகா மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுப்பர்; சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பிற்பகலில் அன்னதானமும், மாலையில் சுமங்கலி திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. .
    ஆகஸ்டு 12 ஆம் தேதி காலை 9 மணியளவில் பால்குடமும் மதியம் 12 மணியளவில் அபிஷேக ஆராதனையும் அன்னதானமும் மாலை 5 மணியளவில் சுமங்கலி திருவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. சிறப்பு நாகசுர இன்னிசையுடன் அன்றிரவு அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெறவுள்ளது.
    விழா ஏற்பாடுகளை நீடாமங்கலம் மகாமாரியம்மன் ஆலய நலச் சங்கத்தினர் மற்றும் நகரவாசிகள் செய்துள்ளனர்.

  • 2016-08-11-08-45-19

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுந்தரர் குருபூஜை நடைபெற்றது.

    திருக்கோயிலில் சண்முகர் சன்னதியில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் சன்னதிகள் உள்ளன. ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சுந்தரர் குருபூஜை நடைபெற்றது.

    இதையொட்டி, காலையில் நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுந்தரர் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கம்பத்தடி மண்டபத்தை 3 முறை வலம் வந்து, உற்சவர் சன்னதியில் சேர்த்தியானார். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

  • Ninaitha Kariyam Idera

    சிறுவாபுரி கோயில்களின் பெருமைகள் பல. அதில் முருகம்மையார் கை தழைக்கச் செய்தது, தேவர் இருந்து அமுதுண்டது, தேவேந்திர பட்டணம் கிடைத்தது, இந்திரனுக்கு பதவி உயர்வு கிடைத் தது, லவன், குசன் ராமனின் அசுவத்தை கட்டிய இடம், மரகதப் பச்சை கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் அமைந்த தலம் என 12 சிறப்பம்சங்களை கொண்டது இத்திருத்தலம். 

    சிறுவாபுரிக்கு வரும் பக்தர்கள் வேண்டியபடி வீடு, வாகனம், தொழில், திருமணம் என குடும்பம் சிறக்க சிங்காரவேலன் அருள்பாலிக்கிறார். 6 வாரங்களுக்கு செவ்வாய் தோறும் சிறுவாபுரியில் உள்ள ஆறுமுருகனை வணங்கினால் நினைத்த காரியம் ஈடேறுமென பக்தர்கள் கூறுகின்றனர்.

    சென்னைக்கு வடமேற்கே சென்னை,கொல்கத்தா நெடுஞ்சாலையில் சிறுவாபுரி பாலசுப்ரமணிய பெருமான் ஆலயம் உள்ளது. வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ராமனின் குழந்தைகளான லவனும், குசனும் ராமனின் குதிரையை கட்டிப்போட்டனர். ராமனே நேரில் வந்து சிறுவர்களுடன் போரிட்டு வென்று குதிரையை மீட்டு சென்றதாக ராமாயணம் கூறுகிறது. இப்படி ராமனிடம் லவனும் குசனும் சண்டை செய்த இடமே சிறுவாபுரி என்பது வரலாறு.