Author: சக்தி ஆன்லைன் டீம்

  • 2016-08-14-10-44-44

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு 450 உற்சவங்கள் நடக்கின்றன.

    விழாக்களில் பூஜைகளை செய்யும் அர்ச்சகர்கள், அதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படும் தோ‌ஷ நிவர்த்திக்காக ஆண்டுக்கு ஒரு முறை பவித்ரோற்சவம் நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் 14 ஆம் தேதி தொடங்கியது. தொடர்து 3 நாட்கள் இந்த பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பவித்ரமாக இருக்கவும், புனித தன்மையை பேணி காக்கவும் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
    காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா வருதல் நடைபெறும். 15-ந்தேதி பவித்ர சமர்ப்பணமும், 16-ந்தேதி பூர்ணாஹூதியும் நடக்கிறது.

    பவித்ரோற்சவத்தையொட்டி மேற்கண்ட 3 நாட்களுக்கு கோவிலில் நடக்கும் விசே‌ஷ பூஜை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சனை சேவை, தோமால சேவை ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

  • 2016-08-14-10-27-52

    நான்கு நாள் தொடர் விடுமுறையை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    வாரத்தின் 2–வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திர தின விடுமுறை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் அதிகாலை முதலே தரிசன வரிசைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் 21 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வந்தனர். ஒரேநாளில் மொத்தம் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 9 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 7 மணிநேரமும், பிரத்யேக பிரவேச தரிசனத்துக்கு 3 மணிநேரமும் ஆனது. ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 14 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • 2016-08-13-11-19-20

    ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் கிருஷ்ணா ஆற்றில் தொடங்கி உள்ள புஷ்கர மேளா விழாவில் ஜயேந்திரர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    புஷ்கர மேளா விழாவை விஜயவாடாவில் உள்ள துர்கா காட் அருகில் காஞ்சி மடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி தொடங்கி வைத்தனர்.

    அதன் பின் திருமலை தேவஸ்தானம் சார்பில் திருமலையிலிருந்து கொண்டு சென்ற மஞ்சள், குங்குமம், பட்டுப் புடவை, மலர்கள், பழங்கள் உள்ளிட்ட ஏழுமலையானின் சீர்வரிசைகளைக் கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர் கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற உள்ள இந்த புஷ்கரத்தில் சுமார் 5 கோடி பேர் புனித நீராடுவர் என ஆந்திர அரசு கணக்கிட்டுள்ளது.

  • 2016-08-13-11-19-20

    ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் கிருஷ்ணா ஆற்றில் தொடங்கி உள்ள புஷ்கர மேளா விழாவில் ஜயேந்திரர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    புஷ்கர மேளா விழாவை விஜயவாடாவில் உள்ள துர்கா காட் அருகில் காஞ்சி மடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி தொடங்கி வைத்தனர்.

    அதன் பின் திருமலை தேவஸ்தானம் சார்பில் திருமலையிலிருந்து கொண்டு சென்ற மஞ்சள், குங்குமம், பட்டுப் புடவை, மலர்கள், பழங்கள் உள்ளிட்ட ஏழுமலையானின் சீர்வரிசைகளைக் கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர் கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற உள்ள இந்த புஷ்கரத்தில் சுமார் 5 கோடி பேர் புனித நீராடுவர் என ஆந்திர அரசு கணக்கிட்டுள்ளது.

  • 2016-08-13-11-01-09

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்டு 16ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 8ஆம் தேதி ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை மிக விமரிசையாக நடைபெற்றது. ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்டு 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது. 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து, 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    17-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் நடைபெறும். தினமும், சிறப்பு பூஜைகளான படிபூஜை, உதயாஸ்தமான பூஜை ஆகியவை நடத்தப்படும். 21-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு ஆவணி மாத பூஜை நிறைவுபெறும்.

    மீண்டும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 13-ந் தேதி முதல் ஓணம், 14-ந் தேதி திருவோண தின சிறப்பு பூஜையும் நடக்கிறது.

  • 2016-08-13-11-01-09

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்டு 16ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 8ஆம் தேதி ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை மிக விமரிசையாக நடைபெற்றது. ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்டு 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது. 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து, 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    17-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் நடைபெறும். தினமும், சிறப்பு பூஜைகளான படிபூஜை, உதயாஸ்தமான பூஜை ஆகியவை நடத்தப்படும். 21-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு ஆவணி மாத பூஜை நிறைவுபெறும்.

    மீண்டும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 13-ந் தேதி முதல் ஓணம், 14-ந் தேதி திருவோண தின சிறப்பு பூஜையும் நடக்கிறது.

  • 2016-08-13-10-53-03

    தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    குறிப்பாக ராமேஸ்வரம் தீவுப் பகுதி, இலங்கை கடல் பகுதியின் அருகாமையில் அமைந்திருப்பதால் ராமேஸ்வரம் தீவு முழுவதற்கும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பன்மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள்ளும், வெளியிலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயிலுக்குள் செல்போன், கேமரா, கைப்பை என எந்த பொருளும் எடுத்து செல்ல கூடாது என பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கம்பெனி ஆயுதப்படை போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • 2016-08-12-08-55-50

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா ஆகஸ்டு 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 22-ஆம் தேதி அதிகாலை தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு, 22 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. மாலையில் அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி செய்தல், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதியுலா வருதல் நடைபெறும்.
    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 26-ஆம் தேதி 5-ஆம் திருவிழாவை முன்னிட்டு, மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வருவர்.

    6-ஆம் திருவிழாவான 27-ஆம் தேதி காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதியுலா வரும். 7-ஆம் திருவிழாவான 28-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, 8.30 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சப்பரம் சேரும். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்று, மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    8-ஆம் திருவிழாவான 29-ஆம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்ந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்று, பகல் 12.05 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து கோயில் சேர்தல் நடைபெறும். 30-ஆம் தேதி இரவு சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வருதல் நடைபெறும்.
    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர் வீதி வலம் வந்து நிலையைச் சேரும்.

  • 2016-08-12-08-23-01

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் உள்ள நரசிம்மர் சுவாமி சன்னதி உள்ளிட்ட திருப்பணிகள் நடக்கும் சன்னதிகள் மற்றும் கோபுரங்களுக்கு ஆகஸ்டு 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்….
    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், புராதன மிக்க பார்த்தசாரதி சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார் மற்றும் குளக் கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கும், அதன் விமானங்களுக்கும், பின்கோபுரவாசல் விமானம், பாண்டிகோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம், நரசிம்மர் மண்டபத்தின் மேல்தளம், கீழ்தளங்கள், குளக்கரை ஆஞ்சநேயர் விமானம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் திருப்பணிகள் கடந்த ஜூலை 10-ந் தேதி தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி ஆகஸ்டு 18ஆம தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இத்திருப்பணிகள் பழமை மாறாமல் தொல்லியல் துறை வல்லுனர்களின் ஆலோசனைப்படி, ரூ.95 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.55 லட்சம் மதிப்பில் சுவாமி கிரீடம், கர்ணபத்திரம், ஸ்ரீசடகோபம், கவசங்களுக்கு தங்க ரேக் பதிக்கும் பணியும், கோபுர கலசங்களுக்கு தங்கநீர் தோய்க்கும் பணியும் மற்றும் முதல் முறையாக நரசிம்ம சுவாமிக்கு சொர்ணபந்தனமும், கஜேந்திரவரதராஜ சுவாமிக்கு ரஜதபந்தனமும் பொருத்தப்பட உள்ளது.

    இந்த திருப்பணிகள் ஏற்பாடுகளை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி மற்றும் துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • 2016-08-12-08-23-01

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் உள்ள நரசிம்மர் சுவாமி சன்னதி உள்ளிட்ட திருப்பணிகள் நடக்கும் சன்னதிகள் மற்றும் கோபுரங்களுக்கு ஆகஸ்டு 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்….
    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், புராதன மிக்க பார்த்தசாரதி சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார் மற்றும் குளக் கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கும், அதன் விமானங்களுக்கும், பின்கோபுரவாசல் விமானம், பாண்டிகோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம், நரசிம்மர் மண்டபத்தின் மேல்தளம், கீழ்தளங்கள், குளக்கரை ஆஞ்சநேயர் விமானம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் திருப்பணிகள் கடந்த ஜூலை 10-ந் தேதி தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி ஆகஸ்டு 18ஆம தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இத்திருப்பணிகள் பழமை மாறாமல் தொல்லியல் துறை வல்லுனர்களின் ஆலோசனைப்படி, ரூ.95 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.55 லட்சம் மதிப்பில் சுவாமி கிரீடம், கர்ணபத்திரம், ஸ்ரீசடகோபம், கவசங்களுக்கு தங்க ரேக் பதிக்கும் பணியும், கோபுர கலசங்களுக்கு தங்கநீர் தோய்க்கும் பணியும் மற்றும் முதல் முறையாக நரசிம்ம சுவாமிக்கு சொர்ணபந்தனமும், கஜேந்திரவரதராஜ சுவாமிக்கு ரஜதபந்தனமும் பொருத்தப்பட உள்ளது.

    இந்த திருப்பணிகள் ஏற்பாடுகளை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி மற்றும் துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.