Author: சக்தி ஆன்லைன் டீம்

  • 14

    சிறுவயதில் கடலில் குளிக்கும்போது கொஞ்ச நேரம் கழிந்ததுமே எங்களை அப்பா விரட்டத் தொடங்கி விடுவார். “போதும்.. போதும் வாங்க வெளியில..” என்று கடலில் இறங்கிய பத்தாவது நிமிடத்திலிருந்தே அதட்டத் தொடங்கி விடுவார். ஆனால், அவரும் எங்களோடு சேர்ந்து குளித்தால் அவ்வளவு சீக்கிரமாகக் கூப்பிட மாட்டார். ஆகவே, அம்மா கரையில் உட்கார்ந்திருக்க நான், இரண்டு அண்ணன்கள், அக்கா நால்வரும் எப்படியாவது அப்பாவைக் கடலுக்குள் இழுத்துப் போட முயல்வோம்.

    இல்லாவிட்டால் இந்த மனுசன் நம்மளைக் குளிக்க விடமாட்டார் என்று எங்கள் அனைவருக்குமே தெரியும். கடலுக்குள் இறங்கிவிட்டால் அப்பா வேற்று மனிதர். கரையில் சட்டை, கால்சட்டையோடு அதிகாரத்தையும் கழற்றி வைத்து விடுவார். கால்களையும் கைகளையும் மல்லாக்கப் பரப்பிக் கடல்பரப்பில் ஒரு சடலம் போல அவரால் மிதக்க முடியும். மூச்சை சீராக மெல்ல விட்டுக் கொண்டே அசையாமல் அலையின் தாளத்திற்கேற்ப ஏறி இறங்கிக் கொண்டிருப்பார். ஊரே வேடிக்கை பார்க்கும். நான் சிறுவயதில் செய்ய முயன்று தோற்ற கலை.

    பதின்ம வயதில் என்னாலும் அதைச் செய்ய முடிந்தது. ஆனால் காதுக்குள் கடல்நீர் போகாமல் இலாகவமாய்ச் செய்ய வேண்டும். உப்புநீரின் அடர்த்தி காரணமாக அவ்வாறு கடலில் எளிதில் மிதக்க முடியும். நன்னீர்க் குளங்களிலும் நகர்ப்புற நீச்சல் குளங்களிலும் அவ்வாறு மிதப்பது கடினம். கடலுக்குள் அப்பாவின் தோள் மீது ஏறிக் குதித்துக் கும்மாளம் போடுவது எங்களுக்குப் பிடித்தமான ஆட்டம். ஆனால், அப்படி அதிக சந்தர்ப்பங்கள் வாய்த்தது இல்லை.

    வருவாய்த் துறையில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து, நினைவு தெரிந்த காலம் முதலே மற்றவர்களை ஏவல் செய்து பழக்கப்பட்டவர் என் தந்தை. துளி எதிர்ப்பையும் அவரால் ஏற்றுக் கொள்ளவோ தாங்கிக் கொள்ளவோ ஒருக்காலும் முடியாது. விவரம் தெரிந்ததும் அடிக்கடி அப்பாவிடம் சொல்வோம்.. “அப்பா நாங்க ஒங்க பியூன் இல்லப்பா” என்று. அப்போதும் அவர் அதைப் பொருட்படுத்த மாட்டார். ( இப்போது 85 வயதில் முதுமையும் தாத்தா பதவியும் அவரைக் கனிய வைத்திருக்கிறது. இருந்தாலும் அதிகாரமுகம் அவ்வப்போது எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது..J)

    ஆகவே, கடலை விட்டு “வெளியே வாங்கடா” என்றதும் வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தமுறை கடற்கரைக்கு அழைத்துப் போகமாட்டார். இந்த அச்சத்தின் காரணமாக அப்பாவின் அதிகாரத்துக்கு உடனே பணிந்து விடுவோம். இருந்தாலும் கடல் எங்களைப் பின்னாலிருந்து அலைகள் மூலம் அறைந்து கூப்பிட்டுக் கொண்டே இருக்கும். பிரிய முடியாமல் பிரிந்து வருவோம். “இவர் கூட வந்ததுக்கு ஒரு தாசில்தார் கூட வந்திருந்தாக்கூட இன்னும் கொஞ்ச நேரம் கடல்ல ஆடவிட்ருப்பாரு..” என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டே கரையேறுவோம்.

    ஒருவகையில்,அந்த மனநிலையில்தான் இருந்தோம் நானும் பரணியும் அங்கோர் வாட்டின் உச்சியில்… உலக அதிசயங்களில் ஒன்றை நேரில் காணும் வாய்ப்பு எல்லாருக்குமா வாய்த்து விடுகிறது? ஏதோ எங்களுடைய நல்லூழோ.. எங்கள் மூதாதையர் நல்லூழோ.. எங்களுக்கு வாய்த்தது. ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இங்கிருந்து புறப்பட வேண்டுமா என்ற ஏக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை எங்களால்.

    பரணிக்குக் கோபமே வந்துவிட்டது. “இது என்ன இம்புட்டு அழகா இருக்கு இந்த இடம் !.. இதை விட்டுட்டு எப்படிங்க அரை நாள்ல கெளம்புறது ? ஒரு வாரம் இதுக்கு மட்டும் போட்ருக்கணும் மகா” என்று புலம்பிக் கொண்டே இருந்தார். என் நிலைப்பாடும் அதுதான்.

    ஆனால் என்ன செய்யமுடியும் ? புறப்பட்டே ஆக வேண்டும். நாளை மாலையில் எங்களுக்கு சிங்கப்பூருக்கு விமானம். இங்கிருந்து புறப்பட்டுப் பின்னிரவுக்குள் புனோம் பென் போனால்தான் தூங்கி எழுந்து நாளைக் காலையில் அரண்மனை, அரும்பொருளகம் எல்லாம் பார்த்துவிட்டு மாலை நாலு மணிக்கு விமானத்தைப் பிடிக்கலாம். புனோம் பென் இங்கிருந்து ஏழெட்டு மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது. பாயோன் கோயில் வேறு அடுத்துப் பார்க்க வேண்டும். மனமின்றிக் கீழே இறங்கத் தொடங்கினோம்.

    செங்குத்தான படிகளைக் கவனமாகக் கடந்து கீழிறங்கினோம். ராஜூ, மகாதேவன், நவீன் கீழே எங்களுக்காகக் காத்திருந்தனர். ஐவரும் அப்படியே மூன்றாமடுக்கை மட்டும் ஒரு சுற்று சுற்றி வந்தோம். எங்கள் வலக்கைப் பக்கம் சின்னக் குன்றுபோல் ஆலயம் அமர்ந்திருந்தது. ஆங்காங்கே மேலே ஏறிச் செல்லப் படிக்கட்டுகள். கற்களுக்கு அடியில் கட்டுமானம் எப்படியிருக்கும் என்பதைக் காணும் வகையில் சில இடங்கள் தெரிந்தன. வெளித் தெரிந்த கற்களுக்குக் கீழே சில இடங்களில் கான்கிரீட் தூணால் முட்டுக்கொடுத்துள்ளனர்.

    தஞ்சைப் பெரிய கோயிலைப் போல் இதையும் எவ்விதக் கலவையும் வைத்து இணைக்காமல் கற்களை ஒன்றுக்கொன்று முட்டுக் கொடுத்தே கட்டியிருக்கிறார்கள். அகழியில் வெட்டியெடுத்த மண்ணை நடுவில் கொட்டி மேட்டை உருவாக்கி அதன் பக்கங்களில் கற்களை அடுக்கிக் கரைகட்டி மேலே மேருக்களை உருவாக்கியுள்ளனர்.

    பல்லாயிரம் டன் எடையுள்ள மண் சரிந்து போகாமலும், கல் கட்டுமானத்தின் எடையைத் தாங்கும் விதமாகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அங்கோர் வாட் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் அருகில் நிற்கும்போதுதான் இதன் பிரமாண்டத்தையும் இதன் அருமையையும் தெளிவாக உணர முடியும். மற்றபடி எவ்வளவு வருணித்தாலும் அதை வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லிவிட முடியாது.

    எங்களுக்கு இடப்பக்கம் இரண்டாம் அடுக்கின் தாழ்வாரங்கள் வந்து கொண்டேயிருந்தன. நம்ம ஊர் தொட்டில் கம்பு போன்ற உருளைத் தூண்களோடு சாளரத்தின் பலகணிகள்… தில்லைப் பொன்னம்பலத்தை நினைவுறுத்தும் வளைந்த கூரைகள். ஆலயக் கட்டுமானத்தின் இடுக்குகளில் ஆங்காங்கே சில செடிகள் துளிர்த்திருந்தன. பெரும்பாலும் அரச மரச் செடிகள். பளீரெனச் சிரித்தன அரசிலைகள். இந்தச் சின்னச் சின்னச் செடிகள்தான் நாளை பெரிய விருட்சமாகி ஆலயத்தையே பிளந்துவிடும். உழவாரப் பணி செய்ய எந்த நாவுக்கரசர் கம்போடியாவில் இருக்கிறாரோ தெரியவில்லை.

    வெளிநாட்டுக்காரர்கள் வியந்து வியந்து பார்த்து மாய்ந்து மாய்ந்து நிழற்படம் எடுத்துக் கொண்டிருக்க, உள்நாட்டுப் பயணிகள் சிரித்துக் கும்மாளமிட்டு உள்ளே ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அடிக்கடி வந்து சென்ற இடமாக இருக்கலாம். இதுபோன்ற வேறு பல ஆலயங்கள் இவர்கள் வீட்டுக்கு அருகிலேயேகூட இருக்கலாம். தோட்டத்து மூலிகைக்கு எப்போதுமே மவுசு கம்மிதானே ?

    ஐந்து மேருக்களையும் சுற்றிப் புறப்பட்ட இடத்துக்கே வந்தோம். வழியில் தென்பட்ட நான்கு திசை மேருக்களையும் கீழிருந்து பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு மேருவுக்கும் திசைக்கொன்றாக நான்கு வாயில்கள். அதன் இருபுறமும் துவாரபாலகர்களைப் போல அப்சரஸ்கள். அங்கிருந்து வெளியேறி வந்தால் ஆலயத்தின் நேர் பின்புறம் வந்துவிடும். இது கிழக்குப் பகுதி. ஆளரவமின்றி ஓய்ந்து கிடந்தது இந்த இடம். நடுவில் ஒன்றும் பக்கத்து ஒன்றுமாக மொத்தம் மூன்று நுழைவாயில்கள். நாங்கள் வலப்பக்கமாக உள்ள வாயிலின் வழியாக வெளியே வந்திருந்தோம்.

    இது சிவன் கோயிலாக இருந்திருந்தால் இது முக்கிய நுழைவாயிலாக இருந்திருக்கும். வெளியேறும் வாயில் பகுதி படிப்படியாக உயரம் குறைந்து வருகிறது. கடைசிப் படிக்கட்டை உள்நோக்கித் தள்ளினால், படிகளும் அவற்றை மூடியிருக்கும் மாடங்களும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து ரஷ்ய மட்ரியோஷ்க பொம்மைகள் போல் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கி மடங்கிக் கொள்ளும் போலிருந்தன.

    இந்தப் பக்கத்திலிருந்த பலகணிகள் பலவும் சிமெண்ட் வைத்து அடைக்கப்பட்டிருந்தன. ஆலய வெளிப்பிரகாரத்தில் வலப்பக்க வாயிலின் அருகே வட்டக் கூம்பு வடிவத்தில் ஓர் அமைப்பு சின்னதாக இருந்தது. மேலே எல்லாம் புல் முளைத்துப் போயிருந்தது. அது என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஏதோ பௌத்தத் தூபி போலிருந்தது பார்க்க. கவிழ்த்த மணி போலவும் காம்புள்ள ஊமத்தம் பூவைப் போலவும் இருந்தது அதன் மேல்பகுதி.

    அதைக் கடந்து வந்தால், சுற்றுச்சுவர் போன்ற உயரம் குறைந்த நீண்ட சுவர். அதன் நடுவே ஏழு தலை நாகம் படம் எடுப்பது போல் இரண்டு வரவேற்பு அலங்காரங்கள். அகழியைத் தூர்த்து வெளிப்புறச் சாலையோடு இணைக்கப்பட்டுள்ளது இந்த இடம். அங்கோர் வாட்டைப் பின்னணியாக வைத்து ஐந்து பேரும் ஒரு படம் எடுத்துக் கொண்டோம். இதைத் தாண்டிவந்து வாகனத்தில் ஏறப்போகும் முன்னால் மற்றொரு பழமையான கட்டடம். அங்கோர் வாட் ஆலயத்தின் ஒரு பகுதியைக் கன கச்சிதமாக அறுத்துப் புல்தரையில் வைத்ததுபோலிருந்தது அந்தக் கட்டடம்.

    அதே கட்டுமான பாணி. அதே போன்ற அப்சரஸ்கள். கைவிடப்பட்டுக் கிடந்தாலும் களையாக இருந்தது கட்டடம். முன்மண்டபத் தூண் சரிந்து மிக விரைவில் விழுந்து விடும் போலிருந்தது. கட்டடத்தின் பக்கவாட்டில் சுற்றுச் சுவர் தெரிந்தது. சந்தடியின்றி அமைதியாகக் காணப்பட்ட அந்த இடமே ஓர் அமானுஷ்யத்தன்மையோடு இருந்தது. நெடிதுயர்ந்த மரங்களுக்கு நடுவே அது நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருக்கிறது. இங்கேயே உறைந்து போய்விட மாட்டோமா என்றிருந்தது.

    வேறு வழியின்றி என் காலை நிலத்திலிருந்து பிடுங்கிக் கொண்டு வெளியே வந்து வாகனத்தில் ஏறினோம். வயிறு கடிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை பசி தெரியவில்லை. பிற்பகல் மணி மூன்றைத் தாண்டி விட்டிருந்தது. காலை ஹோட்டலில் சாப்பிட்ட ஆம்லெட், ரொட்டி, பிரட்டிய சோறு, பழம், காஃபி எல்லாம் கரைந்து விட்டன. வாகனத்தில் அகழியின் அழகைப் பார்த்துக் கொண்டே ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள உணவகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

    நம் கிராமத்து உணவகம் போன்ற சூழல். ஆனால் பெரியது. மெனு கார்ட் எல்லாம் இருந்தது. முதலில் எல்லாரும் இளநீர் கேட்டு வாங்கிக் குடித்தோம். பெரிய கொப்பரைத் தேங்காய் போலிருந்தது இளநீர். ஒரு காயிலேயே இரண்டு, மூன்று குவளை இளநீர் இருந்தது. நல்ல இனிப்பு என்று சொல்லிவிட முடியாது. அதேவேளையில் உப்பு நீரென்று தள்ளவும் முடியாது. ஆனால், அப்போது எங்களுக்கு இருந்த தாகத்துக்கு அந்த இளநீர் தேனாய் இனித்தது. ஓர் அமெரிக்க டாலர் விலை. இங்கே உள்ளூர்க்காரர்களுக்கு ஒரு விலை. வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒரு விலை. அவர்களுக்குள் கம்போடிய நாணயத்தில் புழங்கிக் கொள்கிறார்கள். நமக்குத்தான் ஒன்றுமே புரிவதில்லை.

    சாப்பாட்டு மேசையில், நடுநாயகமாக அங்கோர் வாட் வந்து எங்களுக்கு முன் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டது. அவரவர் அனுபவத்தை விவரிக்கத் தொடங்கிப் பேசிக் கொண்டே இருந்தோம். இடையிடையே உணவு உள்ளே போய்க் கொண்டிருந்தது. இப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தைப் பார்க்க அரை நாளை மட்டுமே ஒதுக்கிய எங்கள் அறியாமையை நாங்களே நொந்து கொண்டோம்.

    அவரவர் குடும்பத்தோடு வந்து ஆற அமர இருந்து அங்கோர் வாட்டை அணுவணுவாய் ரசிப்பதென ஜமாத்தில் முடிவானது. அதன்பிறகுதான் பரணி ஒரு நிலைக்கு வந்தார். அவித்த கோழி சேர்த்துப் பிரட்டிய சோற்றை ஒரு வாய் அள்ளிப் போட்ட கையோடு “அந்தக் குதிரை வீரனைப் பாத்தீங்களா ? ஈட்டியை ஒரு கையில வைச்சிக்கிட்டு என்னவொரு ஆக்ரோஷமாப் பாயத் தயாரா இருந்தான்னுட்டு?” என்று ராஜூ ஆரம்பிப்பார். உடனே, மகாதேவன் “சான்ஸே இல்லை ராஜூ” என்பார். உடனே பரணி இணைந்து கொள்வார், “அந்த அப்சரஸ் முகத்தைப் பாத்தீங்களா ? எல்லாம் ஒரே போல ஒண்ணாசெஞ்சி வைச்சிருக்காய்ங்க” என்பார். உடனே ஏதோ நினைவு வந்ததுபோல், “ஏங்க இதை எப்புடீங்க பிளான் பண்ணிருப்பான் ஒருத்தன் ? எவ்வளவு மண்டை இருக்கணும் அவனுக்கு ?” என்பார்.

    ராஜூ ரத்தினச் சுருக்கமாய்ப் பேசி நிறுத்திவிடுவார். மகாதேவன் அதை ஆமோதிப்பதோடு சரி. நவீன் எல்லாத்துக்கும் மையமாய் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார். ஆனால், நானும் பரணியும்தான் ஓட்டைவாய்கள். லொட லொடவென்று எதையாவது பேசிக் கொண்டே இருப்போம். ஒருவர் பேசும்போது மற்றவர் குறுக்கே புகுந்தால், பேச்சின் ஓட்டம் தடைபடும் என்பதால் குறுக்கே புகமாட்டோம். எதையாவது ஒன்றை வருணிக்க வேண்டி வந்தால், படித்த பழைய புத்தகங்கள் ஞாபகத்துக்கு வந்துவிடும் பரணிக்கு. பிரபஞ்சனின் அந்தியந்த தாசர் பரணி.

    இலக்கியம் படிப்பது வாழ்க்கையின் பல தருணங்களை அழகாக்கி விடுவதை நாங்கள் இருவருமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம். கண்ணில் காணும் காட்சியை உடனே மனம் பழைய புத்தக இடுக்கில் தேடி எடுத்த வார்த்தைகளோடு கோத்துப் பரிணமிக்கச் செய்துவிடுகிறது. அடுத்தடுத்து வரும் சந்திப்புகளில் அங்கோர் வாட் பெரும்பகுதி இடத்தைப் பிடிக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் அரட்டை நீள்வதைப் பார்த்து ஓட்டுநர் ரா, எச்சரிக்கை மணி அடித்தார். இன்னும் நாம் பாயோன் கோயில் பார்க்க வேண்டும். இருட்டுவதற்குள் சியாம் ரீப்பிலிருந்து புறப்பட வேண்டுமென்று.

    காலையில் எங்கள் அறையைக் காலி செய்து மூட்டைகளையெல்லாம் ஹோட்டலிலேயே விட்டுவந்திருந்தோம். நாங்கள் அங்கோர் வாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடி சென்று எல்லாப் பெட்டிகளையும் ரா எடுத்து வந்து வாகனத்தில் வைத்திருந்தார். சாப்பிட்டு முடித்து தெம்புடன் வேனில் ஏறி பாயோன் கோயிலை நோக்கிச் சென்றோம். அங்கோர் வாட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவுதான். அங்கோர் தாம் என்ற பழம்பெரும் நகரக் கட்டமைப்பின் மையத்தில் உள்ளது பாயோன் ஆலயம்.

    பூமியும் சுவர்க்கமும் சந்திக்கும் இடத்தில் அந்தக் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறது வரலாறு. அங்கோர் வாட் ஆலயம் கட்டி முடிந்த சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் இந்த பாயோன் ஆலயம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. முதன்மையாக இது ஒரு பௌத்த ஆலயம்தான் என்றாலும் இந்து சமய அம்சங்களும் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    தஞ்சையில் எனக்கு சைவத்தில் பற்றுடைய புலவர் ஐயா ஒருவர் அறிமுகம் உண்டு. அவர் பெயர் புலவர் சொக்கலிங்கம். பாரதி பனியன் ஸ்டோர் இரத்தினம் மாமா மூலமாக அறிமுகமான பழுத்த சிவப்பழம். அவரோடு ஒருமுறை தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு கதை சொல்வார். தஞ்சை, நாயக்க மன்னர்கள் வசம் வந்த பிறகு, அந்த ராசாவுக்கு மதுரையிலிருந்து பெண் கட்டி வந்தார்களாம்.

    பாண்டியகுமாரிக்குத் தஞ்சாவூர் அரண்மனையைச் சுற்றிக் காட்டிய மன்னர், “பார்த்தாயா நீ வாழப் போகும் அரண்மனை எவ்வளவு பெரியதென்று ?” எனச் சவடால் விட்டிருக்கிறார். உடனே மதுரைக்கார மகாராணி, இடுப்பில் ஒரு கையை வைத்து முகத்தில் ஏளனம் தொனிக்கச் சொன்னாளாம், “ஹூம், இதெல்லாம் ஒரு அரமணை ? எங்கப்பன் வீட்டுச் சலதாரைக்குக் காணாது ஓய் ஒம்ம மொத்த அரமணையும் !”

    ங்ஙொப்புரானே ! அதே மாதிரி ஒரு சம்பவம் எங்களுக்கு நடக்கப் போகிறது என்று நானோ, பரணியோ, மற்ற மூவருமோ கற்பனையும் செய்திருக்கவில்லை. எங்கள் ஐந்து பேரையும் வரவேற்க, எண்ணற்ற அவலோகிதேஸ்வரர்கள் இதழ்க் கடையில் உறைந்த புன்னகையோடு பாயோன் கோயில் கோபுரங்களில் காத்துக் கிடப்பது தெரியாமல், உண்ட மயக்கத்தில் கண்கள் செருக, இலேசான இளமழைக்கு இடையே வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம்…

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • 14

    சிறுவயதில் கடலில் குளிக்கும்போது கொஞ்ச நேரம் கழிந்ததுமே எங்களை அப்பா விரட்டத் தொடங்கி விடுவார். “போதும்.. போதும் வாங்க வெளியில..” என்று கடலில் இறங்கிய பத்தாவது நிமிடத்திலிருந்தே அதட்டத் தொடங்கி விடுவார். ஆனால், அவரும் எங்களோடு சேர்ந்து குளித்தால் அவ்வளவு சீக்கிரமாகக் கூப்பிட மாட்டார். ஆகவே, அம்மா கரையில் உட்கார்ந்திருக்க நான், இரண்டு அண்ணன்கள், அக்கா நால்வரும் எப்படியாவது அப்பாவைக் கடலுக்குள் இழுத்துப் போட முயல்வோம்.

    இல்லாவிட்டால் இந்த மனுசன் நம்மளைக் குளிக்க விடமாட்டார் என்று எங்கள் அனைவருக்குமே தெரியும். கடலுக்குள் இறங்கிவிட்டால் அப்பா வேற்று மனிதர். கரையில் சட்டை, கால்சட்டையோடு அதிகாரத்தையும் கழற்றி வைத்து விடுவார். கால்களையும் கைகளையும் மல்லாக்கப் பரப்பிக் கடல்பரப்பில் ஒரு சடலம் போல அவரால் மிதக்க முடியும். மூச்சை சீராக மெல்ல விட்டுக் கொண்டே அசையாமல் அலையின் தாளத்திற்கேற்ப ஏறி இறங்கிக் கொண்டிருப்பார். ஊரே வேடிக்கை பார்க்கும். நான் சிறுவயதில் செய்ய முயன்று தோற்ற கலை.

    பதின்ம வயதில் என்னாலும் அதைச் செய்ய முடிந்தது. ஆனால் காதுக்குள் கடல்நீர் போகாமல் இலாகவமாய்ச் செய்ய வேண்டும். உப்புநீரின் அடர்த்தி காரணமாக அவ்வாறு கடலில் எளிதில் மிதக்க முடியும். நன்னீர்க் குளங்களிலும் நகர்ப்புற நீச்சல் குளங்களிலும் அவ்வாறு மிதப்பது கடினம். கடலுக்குள் அப்பாவின் தோள் மீது ஏறிக் குதித்துக் கும்மாளம் போடுவது எங்களுக்குப் பிடித்தமான ஆட்டம். ஆனால், அப்படி அதிக சந்தர்ப்பங்கள் வாய்த்தது இல்லை.

    வருவாய்த் துறையில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து, நினைவு தெரிந்த காலம் முதலே மற்றவர்களை ஏவல் செய்து பழக்கப்பட்டவர் என் தந்தை. துளி எதிர்ப்பையும் அவரால் ஏற்றுக் கொள்ளவோ தாங்கிக் கொள்ளவோ ஒருக்காலும் முடியாது. விவரம் தெரிந்ததும் அடிக்கடி அப்பாவிடம் சொல்வோம்.. “அப்பா நாங்க ஒங்க பியூன் இல்லப்பா” என்று. அப்போதும் அவர் அதைப் பொருட்படுத்த மாட்டார். ( இப்போது 85 வயதில் முதுமையும் தாத்தா பதவியும் அவரைக் கனிய வைத்திருக்கிறது. இருந்தாலும் அதிகாரமுகம் அவ்வப்போது எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது..J)

    ஆகவே, கடலை விட்டு “வெளியே வாங்கடா” என்றதும் வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தமுறை கடற்கரைக்கு அழைத்துப் போகமாட்டார். இந்த அச்சத்தின் காரணமாக அப்பாவின் அதிகாரத்துக்கு உடனே பணிந்து விடுவோம். இருந்தாலும் கடல் எங்களைப் பின்னாலிருந்து அலைகள் மூலம் அறைந்து கூப்பிட்டுக் கொண்டே இருக்கும். பிரிய முடியாமல் பிரிந்து வருவோம். “இவர் கூட வந்ததுக்கு ஒரு தாசில்தார் கூட வந்திருந்தாக்கூட இன்னும் கொஞ்ச நேரம் கடல்ல ஆடவிட்ருப்பாரு..” என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டே கரையேறுவோம்.

    ஒருவகையில்,அந்த மனநிலையில்தான் இருந்தோம் நானும் பரணியும் அங்கோர் வாட்டின் உச்சியில்… உலக அதிசயங்களில் ஒன்றை நேரில் காணும் வாய்ப்பு எல்லாருக்குமா வாய்த்து விடுகிறது? ஏதோ எங்களுடைய நல்லூழோ.. எங்கள் மூதாதையர் நல்லூழோ.. எங்களுக்கு வாய்த்தது. ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இங்கிருந்து புறப்பட வேண்டுமா என்ற ஏக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை எங்களால்.

    பரணிக்குக் கோபமே வந்துவிட்டது. “இது என்ன இம்புட்டு அழகா இருக்கு இந்த இடம் !.. இதை விட்டுட்டு எப்படிங்க அரை நாள்ல கெளம்புறது ? ஒரு வாரம் இதுக்கு மட்டும் போட்ருக்கணும் மகா” என்று புலம்பிக் கொண்டே இருந்தார். என் நிலைப்பாடும் அதுதான்.

    ஆனால் என்ன செய்யமுடியும் ? புறப்பட்டே ஆக வேண்டும். நாளை மாலையில் எங்களுக்கு சிங்கப்பூருக்கு விமானம். இங்கிருந்து புறப்பட்டுப் பின்னிரவுக்குள் புனோம் பென் போனால்தான் தூங்கி எழுந்து நாளைக் காலையில் அரண்மனை, அரும்பொருளகம் எல்லாம் பார்த்துவிட்டு மாலை நாலு மணிக்கு விமானத்தைப் பிடிக்கலாம். புனோம் பென் இங்கிருந்து ஏழெட்டு மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது. பாயோன் கோயில் வேறு அடுத்துப் பார்க்க வேண்டும். மனமின்றிக் கீழே இறங்கத் தொடங்கினோம்.

    செங்குத்தான படிகளைக் கவனமாகக் கடந்து கீழிறங்கினோம். ராஜூ, மகாதேவன், நவீன் கீழே எங்களுக்காகக் காத்திருந்தனர். ஐவரும் அப்படியே மூன்றாமடுக்கை மட்டும் ஒரு சுற்று சுற்றி வந்தோம். எங்கள் வலக்கைப் பக்கம் சின்னக் குன்றுபோல் ஆலயம் அமர்ந்திருந்தது. ஆங்காங்கே மேலே ஏறிச் செல்லப் படிக்கட்டுகள். கற்களுக்கு அடியில் கட்டுமானம் எப்படியிருக்கும் என்பதைக் காணும் வகையில் சில இடங்கள் தெரிந்தன. வெளித் தெரிந்த கற்களுக்குக் கீழே சில இடங்களில் கான்கிரீட் தூணால் முட்டுக்கொடுத்துள்ளனர்.

    தஞ்சைப் பெரிய கோயிலைப் போல் இதையும் எவ்விதக் கலவையும் வைத்து இணைக்காமல் கற்களை ஒன்றுக்கொன்று முட்டுக் கொடுத்தே கட்டியிருக்கிறார்கள். அகழியில் வெட்டியெடுத்த மண்ணை நடுவில் கொட்டி மேட்டை உருவாக்கி அதன் பக்கங்களில் கற்களை அடுக்கிக் கரைகட்டி மேலே மேருக்களை உருவாக்கியுள்ளனர்.

    பல்லாயிரம் டன் எடையுள்ள மண் சரிந்து போகாமலும், கல் கட்டுமானத்தின் எடையைத் தாங்கும் விதமாகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அங்கோர் வாட் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் அருகில் நிற்கும்போதுதான் இதன் பிரமாண்டத்தையும் இதன் அருமையையும் தெளிவாக உணர முடியும். மற்றபடி எவ்வளவு வருணித்தாலும் அதை வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லிவிட முடியாது.

    எங்களுக்கு இடப்பக்கம் இரண்டாம் அடுக்கின் தாழ்வாரங்கள் வந்து கொண்டேயிருந்தன. நம்ம ஊர் தொட்டில் கம்பு போன்ற உருளைத் தூண்களோடு சாளரத்தின் பலகணிகள்… தில்லைப் பொன்னம்பலத்தை நினைவுறுத்தும் வளைந்த கூரைகள். ஆலயக் கட்டுமானத்தின் இடுக்குகளில் ஆங்காங்கே சில செடிகள் துளிர்த்திருந்தன. பெரும்பாலும் அரச மரச் செடிகள். பளீரெனச் சிரித்தன அரசிலைகள். இந்தச் சின்னச் சின்னச் செடிகள்தான் நாளை பெரிய விருட்சமாகி ஆலயத்தையே பிளந்துவிடும். உழவாரப் பணி செய்ய எந்த நாவுக்கரசர் கம்போடியாவில் இருக்கிறாரோ தெரியவில்லை.

    வெளிநாட்டுக்காரர்கள் வியந்து வியந்து பார்த்து மாய்ந்து மாய்ந்து நிழற்படம் எடுத்துக் கொண்டிருக்க, உள்நாட்டுப் பயணிகள் சிரித்துக் கும்மாளமிட்டு உள்ளே ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அடிக்கடி வந்து சென்ற இடமாக இருக்கலாம். இதுபோன்ற வேறு பல ஆலயங்கள் இவர்கள் வீட்டுக்கு அருகிலேயேகூட இருக்கலாம். தோட்டத்து மூலிகைக்கு எப்போதுமே மவுசு கம்மிதானே ?

    ஐந்து மேருக்களையும் சுற்றிப் புறப்பட்ட இடத்துக்கே வந்தோம். வழியில் தென்பட்ட நான்கு திசை மேருக்களையும் கீழிருந்து பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு மேருவுக்கும் திசைக்கொன்றாக நான்கு வாயில்கள். அதன் இருபுறமும் துவாரபாலகர்களைப் போல அப்சரஸ்கள். அங்கிருந்து வெளியேறி வந்தால் ஆலயத்தின் நேர் பின்புறம் வந்துவிடும். இது கிழக்குப் பகுதி. ஆளரவமின்றி ஓய்ந்து கிடந்தது இந்த இடம். நடுவில் ஒன்றும் பக்கத்து ஒன்றுமாக மொத்தம் மூன்று நுழைவாயில்கள். நாங்கள் வலப்பக்கமாக உள்ள வாயிலின் வழியாக வெளியே வந்திருந்தோம்.

    இது சிவன் கோயிலாக இருந்திருந்தால் இது முக்கிய நுழைவாயிலாக இருந்திருக்கும். வெளியேறும் வாயில் பகுதி படிப்படியாக உயரம் குறைந்து வருகிறது. கடைசிப் படிக்கட்டை உள்நோக்கித் தள்ளினால், படிகளும் அவற்றை மூடியிருக்கும் மாடங்களும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து ரஷ்ய மட்ரியோஷ்க பொம்மைகள் போல் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கி மடங்கிக் கொள்ளும் போலிருந்தன.

    இந்தப் பக்கத்திலிருந்த பலகணிகள் பலவும் சிமெண்ட் வைத்து அடைக்கப்பட்டிருந்தன. ஆலய வெளிப்பிரகாரத்தில் வலப்பக்க வாயிலின் அருகே வட்டக் கூம்பு வடிவத்தில் ஓர் அமைப்பு சின்னதாக இருந்தது. மேலே எல்லாம் புல் முளைத்துப் போயிருந்தது. அது என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஏதோ பௌத்தத் தூபி போலிருந்தது பார்க்க. கவிழ்த்த மணி போலவும் காம்புள்ள ஊமத்தம் பூவைப் போலவும் இருந்தது அதன் மேல்பகுதி.

    அதைக் கடந்து வந்தால், சுற்றுச்சுவர் போன்ற உயரம் குறைந்த நீண்ட சுவர். அதன் நடுவே ஏழு தலை நாகம் படம் எடுப்பது போல் இரண்டு வரவேற்பு அலங்காரங்கள். அகழியைத் தூர்த்து வெளிப்புறச் சாலையோடு இணைக்கப்பட்டுள்ளது இந்த இடம். அங்கோர் வாட்டைப் பின்னணியாக வைத்து ஐந்து பேரும் ஒரு படம் எடுத்துக் கொண்டோம். இதைத் தாண்டிவந்து வாகனத்தில் ஏறப்போகும் முன்னால் மற்றொரு பழமையான கட்டடம். அங்கோர் வாட் ஆலயத்தின் ஒரு பகுதியைக் கன கச்சிதமாக அறுத்துப் புல்தரையில் வைத்ததுபோலிருந்தது அந்தக் கட்டடம்.

    அதே கட்டுமான பாணி. அதே போன்ற அப்சரஸ்கள். கைவிடப்பட்டுக் கிடந்தாலும் களையாக இருந்தது கட்டடம். முன்மண்டபத் தூண் சரிந்து மிக விரைவில் விழுந்து விடும் போலிருந்தது. கட்டடத்தின் பக்கவாட்டில் சுற்றுச் சுவர் தெரிந்தது. சந்தடியின்றி அமைதியாகக் காணப்பட்ட அந்த இடமே ஓர் அமானுஷ்யத்தன்மையோடு இருந்தது. நெடிதுயர்ந்த மரங்களுக்கு நடுவே அது நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருக்கிறது. இங்கேயே உறைந்து போய்விட மாட்டோமா என்றிருந்தது.

    வேறு வழியின்றி என் காலை நிலத்திலிருந்து பிடுங்கிக் கொண்டு வெளியே வந்து வாகனத்தில் ஏறினோம். வயிறு கடிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை பசி தெரியவில்லை. பிற்பகல் மணி மூன்றைத் தாண்டி விட்டிருந்தது. காலை ஹோட்டலில் சாப்பிட்ட ஆம்லெட், ரொட்டி, பிரட்டிய சோறு, பழம், காஃபி எல்லாம் கரைந்து விட்டன. வாகனத்தில் அகழியின் அழகைப் பார்த்துக் கொண்டே ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள உணவகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

    நம் கிராமத்து உணவகம் போன்ற சூழல். ஆனால் பெரியது. மெனு கார்ட் எல்லாம் இருந்தது. முதலில் எல்லாரும் இளநீர் கேட்டு வாங்கிக் குடித்தோம். பெரிய கொப்பரைத் தேங்காய் போலிருந்தது இளநீர். ஒரு காயிலேயே இரண்டு, மூன்று குவளை இளநீர் இருந்தது. நல்ல இனிப்பு என்று சொல்லிவிட முடியாது. அதேவேளையில் உப்பு நீரென்று தள்ளவும் முடியாது. ஆனால், அப்போது எங்களுக்கு இருந்த தாகத்துக்கு அந்த இளநீர் தேனாய் இனித்தது. ஓர் அமெரிக்க டாலர் விலை. இங்கே உள்ளூர்க்காரர்களுக்கு ஒரு விலை. வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒரு விலை. அவர்களுக்குள் கம்போடிய நாணயத்தில் புழங்கிக் கொள்கிறார்கள். நமக்குத்தான் ஒன்றுமே புரிவதில்லை.

    சாப்பாட்டு மேசையில், நடுநாயகமாக அங்கோர் வாட் வந்து எங்களுக்கு முன் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டது. அவரவர் அனுபவத்தை விவரிக்கத் தொடங்கிப் பேசிக் கொண்டே இருந்தோம். இடையிடையே உணவு உள்ளே போய்க் கொண்டிருந்தது. இப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தைப் பார்க்க அரை நாளை மட்டுமே ஒதுக்கிய எங்கள் அறியாமையை நாங்களே நொந்து கொண்டோம்.

    அவரவர் குடும்பத்தோடு வந்து ஆற அமர இருந்து அங்கோர் வாட்டை அணுவணுவாய் ரசிப்பதென ஜமாத்தில் முடிவானது. அதன்பிறகுதான் பரணி ஒரு நிலைக்கு வந்தார். அவித்த கோழி சேர்த்துப் பிரட்டிய சோற்றை ஒரு வாய் அள்ளிப் போட்ட கையோடு “அந்தக் குதிரை வீரனைப் பாத்தீங்களா ? ஈட்டியை ஒரு கையில வைச்சிக்கிட்டு என்னவொரு ஆக்ரோஷமாப் பாயத் தயாரா இருந்தான்னுட்டு?” என்று ராஜூ ஆரம்பிப்பார். உடனே, மகாதேவன் “சான்ஸே இல்லை ராஜூ” என்பார். உடனே பரணி இணைந்து கொள்வார், “அந்த அப்சரஸ் முகத்தைப் பாத்தீங்களா ? எல்லாம் ஒரே போல ஒண்ணாசெஞ்சி வைச்சிருக்காய்ங்க” என்பார். உடனே ஏதோ நினைவு வந்ததுபோல், “ஏங்க இதை எப்புடீங்க பிளான் பண்ணிருப்பான் ஒருத்தன் ? எவ்வளவு மண்டை இருக்கணும் அவனுக்கு ?” என்பார்.

    ராஜூ ரத்தினச் சுருக்கமாய்ப் பேசி நிறுத்திவிடுவார். மகாதேவன் அதை ஆமோதிப்பதோடு சரி. நவீன் எல்லாத்துக்கும் மையமாய் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார். ஆனால், நானும் பரணியும்தான் ஓட்டைவாய்கள். லொட லொடவென்று எதையாவது பேசிக் கொண்டே இருப்போம். ஒருவர் பேசும்போது மற்றவர் குறுக்கே புகுந்தால், பேச்சின் ஓட்டம் தடைபடும் என்பதால் குறுக்கே புகமாட்டோம். எதையாவது ஒன்றை வருணிக்க வேண்டி வந்தால், படித்த பழைய புத்தகங்கள் ஞாபகத்துக்கு வந்துவிடும் பரணிக்கு. பிரபஞ்சனின் அந்தியந்த தாசர் பரணி.

    இலக்கியம் படிப்பது வாழ்க்கையின் பல தருணங்களை அழகாக்கி விடுவதை நாங்கள் இருவருமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம். கண்ணில் காணும் காட்சியை உடனே மனம் பழைய புத்தக இடுக்கில் தேடி எடுத்த வார்த்தைகளோடு கோத்துப் பரிணமிக்கச் செய்துவிடுகிறது. அடுத்தடுத்து வரும் சந்திப்புகளில் அங்கோர் வாட் பெரும்பகுதி இடத்தைப் பிடிக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் அரட்டை நீள்வதைப் பார்த்து ஓட்டுநர் ரா, எச்சரிக்கை மணி அடித்தார். இன்னும் நாம் பாயோன் கோயில் பார்க்க வேண்டும். இருட்டுவதற்குள் சியாம் ரீப்பிலிருந்து புறப்பட வேண்டுமென்று.

    காலையில் எங்கள் அறையைக் காலி செய்து மூட்டைகளையெல்லாம் ஹோட்டலிலேயே விட்டுவந்திருந்தோம். நாங்கள் அங்கோர் வாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடி சென்று எல்லாப் பெட்டிகளையும் ரா எடுத்து வந்து வாகனத்தில் வைத்திருந்தார். சாப்பிட்டு முடித்து தெம்புடன் வேனில் ஏறி பாயோன் கோயிலை நோக்கிச் சென்றோம். அங்கோர் வாட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவுதான். அங்கோர் தாம் என்ற பழம்பெரும் நகரக் கட்டமைப்பின் மையத்தில் உள்ளது பாயோன் ஆலயம்.

    பூமியும் சுவர்க்கமும் சந்திக்கும் இடத்தில் அந்தக் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறது வரலாறு. அங்கோர் வாட் ஆலயம் கட்டி முடிந்த சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் இந்த பாயோன் ஆலயம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. முதன்மையாக இது ஒரு பௌத்த ஆலயம்தான் என்றாலும் இந்து சமய அம்சங்களும் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    தஞ்சையில் எனக்கு சைவத்தில் பற்றுடைய புலவர் ஐயா ஒருவர் அறிமுகம் உண்டு. அவர் பெயர் புலவர் சொக்கலிங்கம். பாரதி பனியன் ஸ்டோர் இரத்தினம் மாமா மூலமாக அறிமுகமான பழுத்த சிவப்பழம். அவரோடு ஒருமுறை தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு கதை சொல்வார். தஞ்சை, நாயக்க மன்னர்கள் வசம் வந்த பிறகு, அந்த ராசாவுக்கு மதுரையிலிருந்து பெண் கட்டி வந்தார்களாம்.

    பாண்டியகுமாரிக்குத் தஞ்சாவூர் அரண்மனையைச் சுற்றிக் காட்டிய மன்னர், “பார்த்தாயா நீ வாழப் போகும் அரண்மனை எவ்வளவு பெரியதென்று ?” எனச் சவடால் விட்டிருக்கிறார். உடனே மதுரைக்கார மகாராணி, இடுப்பில் ஒரு கையை வைத்து முகத்தில் ஏளனம் தொனிக்கச் சொன்னாளாம், “ஹூம், இதெல்லாம் ஒரு அரமணை ? எங்கப்பன் வீட்டுச் சலதாரைக்குக் காணாது ஓய் ஒம்ம மொத்த அரமணையும் !”

    ங்ஙொப்புரானே ! அதே மாதிரி ஒரு சம்பவம் எங்களுக்கு நடக்கப் போகிறது என்று நானோ, பரணியோ, மற்ற மூவருமோ கற்பனையும் செய்திருக்கவில்லை. எங்கள் ஐந்து பேரையும் வரவேற்க, எண்ணற்ற அவலோகிதேஸ்வரர்கள் இதழ்க் கடையில் உறைந்த புன்னகையோடு பாயோன் கோயில் கோபுரங்களில் காத்துக் கிடப்பது தெரியாமல், உண்ட மயக்கத்தில் கண்கள் செருக, இலேசான இளமழைக்கு இடையே வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம்…

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • 13

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகம் எப்படி இருந்திருக்கும் என்று நேரில் பார்க்க ஆசையா ? விமானம் ஏறி கம்போடியாவுக்கு வந்துவிடலாம். காலம் உறைந்து போயிருக்கிறது இங்கே. அங்கோர் வாட்டின் உச்சியில் இருந்து பார்த்தாலும்கூட நவநாகரிக உலகின் எந்தச் சுவடும் நம்முடைய கண்ணில் படுவதில்லை. இது ஒரு முக்கியமான அம்சம் எனத் தோன்றியது எனக்கு. ஆலயத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதி வானம் பார்க்கக் காடாகப் பரந்து விரிந்து கிடக்கிறது.

    நான் இதுவரை பார்த்த வரலாற்றுத் தலங்களில் பெரும்பாலானவை பரபரப்பான ஊருக்குள் இருக்கும். அல்லது அது ஒரு காட்சிப் பொருளாகி விட்டபடியால் அதைச் சுற்றி ஒரு வாழ்க்கை உருவாகி அதன் அங்கமாக நவீன வசதிகளும் உருவாகி விட்டிருக்கும். ஆனால், அங்கோர் வாட் விதிவிலக்கு. மிக நுணுக்கமாகப் பார்த்தால் தவிர மேலோட்டமான பார்வைக்கு வாகனங்களோ மனித சஞ்சாரமோ தெரிவதில்லை.

    இது நமக்கு ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது மனத்துக்குள். எனக்கு மட்டும்தான் இப்படியா என்று தெரியவில்லை. ஆளில்லாத பழைய ஆலயங்களிலும் கோட்டைகளிலும் கூட இப்படிப்பட்ட உணர்வை அடைந்திருக்கிறேன். ஆக்ரா கோட்டைக்கு ஈராயிரமாம் ஆண்டில் போனபோதும் இப்படித்தான் இருந்தது.      மாபெரும் கோட்டை மதில் சுவர்கள் எழுந்து புற உலகைத் துண்டித்து விட்டன. மொகலாய மன்னர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அந்தப் பயணம் உதவியாக இருந்தது.

    பிரமாண்டம் என்றால் என்னவென்பதை உணர வைத்த இடங்கள் இவையெல்லாம். வடகிழக்கு மூலையில் படியேறி அங்கோர் வாட்டின் உச்சிப் பகுதிக்கு வந்தபோது கலவையான உணர்வுகள்.

    இந்தக் கட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டி தேவையற்றவராகிப் போயிருந்தார். எங்களை வியக்க வைக்கும் தகவல் எதுவும் அவரிடம் இல்லை. நிலக் காட்சியின் அழகில் நாங்கள் மூழ்கிப் போயிருந்தோம். இவ்வளவு பெரிய வளாகமும் இந்த உச்சிப் பகுதியை நோக்கித்தான்…. இதற்காகத்தான் என்று நினைக்கும்போது பிரமிப்பு ஏற்பட்டது. ஆனால், கருவறை இருக்க வேண்டிய இடத்தில் மொண்ணையான புத்தர் சிலைகளைப் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது.

    நான்கு பக்கங்களையும் மறித்துச் சுவர் எழுப்பி அவ்வளவு லட்சணமில்லாத புத்தர் சிலைகளை வைத்திருந்தனர். அதிலும் சில புத்தர் சிலைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருந்தன. தலையற்ற முண்டமாக புத்தரின் சிலையைத் தரிசிக்கவே மனம் நடுங்கியது. நல்லவேளை.. இந்தக் கொடுமையை இரண்டாம் சூரியவர்மன் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

    உண்மையில், அங்கோர் வாட்டைக் கட்டிய மன்னர் இரண்டாம் சூரியவர்மன் இந்த ஆலயத்தின் முதற்கட்டப் பணிகளின்போதே மறைந்துவிட்டிருக்க வேண்டுமென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். சூரியவர்மன் 32 வயது வரையிலும்தான் உயிர் வாழ்ந்திருக்கிறார். அவரது காலம், கி.பி 1113-1145 என்கிறது கம்போடியத் தலைநகர் புனோம் பென் அரும்பொருளகத்தில் நாங்கள் வாங்கிய கையேடு. 32 வயது வரை மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதனின் சாதனைதான் இந்த ஆலயம்.

    மலைப்பாக இருந்தது. தாம் உயிரோடு இருக்கும்போதே ஆலயம் முழுமையும் எப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டுக் கட்டத் தொடங்கிய மன்னர் அந்தப் பணிகள் முழுமை பெறும்போது அதைப் பார்க்க உயிரோடு இல்லை. மிகுந்த வேதனை தரக்கூடிய தகவல் இது.

    இந்தக் கட்டுரைக்குத் தேவையான தகவல்களைத் தேடிப் படிக்கும்போதுதான் இது எனக்குத் தெரியவந்தது. எகிப்தியப் பேரரசர்கள், அவர்கள் அரியணை ஏறியதுமே அவர்களுக்கான கல்லறைப் பிரமிடுகளைக் கட்டத் தொடங்கிவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன். அதுபோல், அங்கோர் வாட் சூரியவர்மனின் கல்லறைக் கோயில்தான் என்றால், அவர் அரியணை ஏறியதுமே கட்டட வேலைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.                                   

    சூரியவர்மன் எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார் என்று தெரியவில்லை. 20 வயது என்று வைத்துக் கொண்டால்கூட 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள் பாதி வேலை கூட முடிந்திருக்காது. அப்படியானால், மனக்கண்ணில் மட்டும்தான் மன்னர், முழுமையான ஆலயத்தைப் பார்த்திருக்க முடியும்.

    வடகிழக்கில் ஏறி உள்ளே சென்றபோது பரணி மட்டும்தான் என்னோடு இருந்தார். ராஜூ, நவீன், மகாதேவன் மூவரும் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போய்விட்டார்கள். நாங்கள் இருவரும் படம் எடுத்துக் கொண்டே வந்ததால் பின்தங்கிப் போனோம். மேருவின் கீழிருந்து உள்ளே போய் இடப்பக்கமாகத் திரும்பினால், கருவறையின் வடக்குமுக வாயிலைக் காணமுடியும். அங்கே சயன நிலையில் ஒரு புத்தர் கிடத்தப்பட்டிருந்தார். வாசல் நிலையை அடைத்த மாதிரி நின்ற கோலத்தில் ஒரு புத்தர்.

    பெரிய பெரிய கற்பாளங்களை வைத்து வாசலை அடைத்துவிட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கியிருக்கிறார்கள். சயன புத்தருக்கு முன்னால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.

    கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏற்றப்படுவதுபோன்ற தடிமனான மெழுகுவர்த்தி. பல மணி நேரத்திற்கு நின்று எரியக்கூடியது. வாழைத் தண்டை வெட்டி அடிப்பகுதியாகக் கொண்ட ஓர் அலங்காரம். மேலே வாழை இலையைக் கூம்பு வடிவத்தில் சுருட்டி, பக்கவாட்டில் கதிர்கள் விரிவது போல் இலைகளைச் சுருட்டி விட்டிருந்தனர்.         

             

    அச்சு அசப்பில், அய்யர் வீட்டுத் திருமணங்களில் வைக்கப்படும் பருப்புத் தேங்காயைப் போலவே இருந்தது. பருப்புத் தேங்காய் பெரும்பாலும் மஞ்சள் ஜிகினா தாளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இது பச்சை வாழை இலை. அவ்வளவுதான் வித்தியாசம். அவை தவிர, வெள்ளை நுரைப்பஞ்சுத் தட்டில் வாழைப் பழங்களும் லைச்சீ பழங்களும் படைக்கப்பட்டிருந்தன. ஒரு பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர். அது படைக்கப்பட்ட தீர்த்தமா இல்லை சுற்றுப் பயணிகள் விட்டுச் சென்றதா தெரியவில்லை.

    புத்தரின் மேல் போர்த்தப்பட்டிருந்த ஜிகினாத் துணியும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மாலையும் அந்தப் பழமையான சூழலுக்குப் பொருந்தவே இல்லை. அதன் செயற்கைத் தன்மை துருத்திக் கொண்டு தெரிந்தது. நின்ற கோலத்திலிருந்த புத்தர் மீது ஏதோ ஒருவித மஞ்சள் பூச்சு இலேசாகத் தெரிந்தது. தங்க முலாமா என்று தெரியவில்லை. இருக்க முடியாது. ஆலயம் கைவிடப்பட்ட காலத்தில் கண்டிப்பாக அது சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டிருக்கும்.

    வடக்கு வாயிலைப் பார்த்துவிட்டு இப்போது மேற்குப்புற வாயிலுக்கு வந்தோம். இங்கே குட்டி குட்டியாய்க் கழுத்து அறுக்கப்பட்ட நாலைந்து புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. பின்னால் அதேபோல நின்ற கோலத்தில் பெரிய புத்தர். இங்கும் மெழுகுவர்த்திகள்.     

    ஆனால் இந்த மெழுகுவர்த்திகள் சின்னவை. வரிசையாக ஒரு வாழை மட்டையில் செருகப்பட்டிருந்தன. இந்த பிரமாண்ட பேராலயத்தின் நடுவே இருக்கக் கொஞ்சமும் தகுதியற்ற உருவச் சிலைகள். கழுத்து அறுபட்ட புத்தர் சிலைகள் என்றால் மிகப் பெரும்பாலும் களையான முகம் கொண்ட பழைய புத்தர் சிலைகளாகத்தான் இருக்க வேண்டும். முகம்தான் இல்லை. மற்ற உடல் பகுதிகளையாவது பார்க்கலாம் என்றால், புத்தரின் வலப்புறத் தோள்பட்டை மட்டும்தான் தெரிகிறது. மற்ற பகுதிகளை வழக்கம்போல ஜிகினாத் துணியால் மூடிவிட்டனர். ஐயோ.. கடவுளே !

    இந்த மேற்குப்புற வாயிலுக்கு எதிரில்தான் அங்கோர் வாட் வளாகத்தின் முக்கிய நுழைவாயில் வருகிறது. அது நீண்டு கிடப்பதைப் பார்க்க புத்தருக்கு இப்போது முடியாது. தலை இல்லையே !

    கருவறைக்கு முன்னால் உள்ள தாழ்வாரம் 20, 30 அடி நீண்டு பெரிய சுற்றுத் தாழ்வாரத்தோடு இணைந்து கொள்கிறது. ஓங்கி மழை பெய்தால், சாரல் அடிக்கும் அளவுக்கு அகலம் குறைந்த தாழ்வாரம். எந்தத் திக்கில் திரும்பினாலும் பழமை. பசுமை.. நம் வாழ்வில் எளிதில் கிடைக்காத காட்சி இது. வரலாற்றுப் பிரியர்களால் பிரிந்து வர இயலாத இடம்.

    சுற்றிலுமுள்ள கற்கள் பேச முடிந்தால் எப்படி இருக்கும் ? என்னென்ன கதை சொல்லும் நம்மிடம் ? காலம் கற்களை மழுங்கச் செய்துவிட்டிருக்கிறது. மழையும் தன்பங்குக்கு மணற்கல் சிற்பங்களைக் கரைத்துவிட்டிருக்கிறது. ஆனாலும் எஞ்சியிருக்கும் சிற்பங்கள் கல்லை விட்டு வெளியே வரத் துடிப்பதைப் போலிருந்தன.

    ஒவ்வோர் இடத்தையும் கண்களால் அள்ளி அள்ளி விழுங்கினோம் நானும் பரணியும். இனியொரு முறை இதைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கம் எழுந்து கொண்டே வந்தது. “இதுக்கு ஒரு நாள்லாம் பத்தாதுண்ணா” என்று பரணி புலம்பிக் கொண்டே வந்தார். அதிலென்ன சந்தேகம் ? ஒரு மாதம் கூடப் போதாதுதான். படப்போட திங்கிற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டாக் காணுமா ? ஹும்.

    இப்போது நாங்கள் மேற்கிலிருந்து தென்திசை வாயிலுக்கு வந்திருந்தோம். ஆலய முகப்பில் இருந்த விஷ்ணு சிலை இங்கே இருந்தது உண்மையானால், அந்த விஷ்ணுவின் தாழ்ந்த கண்மலர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கே விரியும் இந்தக் காட்சியைத்தான் கண்டிருக்க வேண்டும். இங்கே ஓர் ஆச்சர்யம் எங்களுக்குக் காத்திருந்தது. இந்தக் கருவறை வாயில் மற்ற வாயில்களைப் போல் மூடப்படாமல் கதவு வைத்து சாத்தப்பட்டிருந்தது. முன்னால் புடைப்புச் சிற்பமாக இல்லாமல் முப்பரிமாணத்தில் புத்தர். நின்றகோலம். அதற்குக் கீழே கழுத்து அறுக்கப்பட்ட அமர்ந்த கோல புத்தர் சிலைகள் சில..

    தொல்பொருள் ஆய்வுக்காக இந்த வாயில் உடைத்துத் திறக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இது மட்டும் மூடப்படாமலேயே விடப்பட்டிருக்க வேண்டும். சில பூட்டுகள் தொங்கின கதவுக்கு வெளியே. உள்ளே போய் விளக்கு வைத்து என்ன இருக்கிறது என்று பார்க்க கொள்ளை ஆசையாக இருந்தது. அதற்கு அனுமதி இல்லை. உள்ளே எவ்வளவு ஆழம் இருக்கும் ? சில வெள்ளைக்கார ஆய்வாளர்கள் இதனுள்ளே போய்ப் பார்த்திருப்பதாகக் குறிப்புகள் உள்ளன.

    ஒரு பெரிய சதுரத் துளை கீழே வரை செல்வதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதில் என்னென்ன இருந்திருக்கும் ? நமது ஆலயங்களில் கருவறை மூர்த்தங்களுக்குக் கீழே நவமணிகளைப் புதைக்கும் வழக்கம் இருக்கிறதே.. அதுபோல் இங்கும் கண்டிப்பாகப் புதைக்கப்பட்டிருக்கும்.       

    இது விஷ்ணு ஆலயம்தான் என்பதற்குரிய தெளிவான தடயமொன்றை நிலைவாயிலின் மேலே காணமுடிந்தது. அதை இந்த அத்தியாயம் எழுதும்போதுதான் என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வோர் அத்தியாயம் எழுதும்போதும் அதற்குரிய படங்களை முழுமையாகப் பார்த்துவிட்டே எழுதுவேன். அது எழுதுவதற்கான மனநிலையை எனக்குத் தரும். மறந்த பல அம்சங்களைப் படங்கள் எனக்கு நினைவுபடுத்தும்.

    அதுபோல, கருவறை புத்தர் சிலைகளைப் பார்த்துக் கொண்டே வந்தபோது வாயில்படி மேலே செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்க்கும்போது நேரில் புலப்படாத சில அம்சங்கள் புலப்படுகின்றன. ஒவ்வொரு வாயிலின் மேலும் பிரபாவளியுடன் கூடிய ஒன்பது உருவங்கள் அமர்ந்த கோலத்தில் உள்ளன. நடுவிலுள்ள உருவத்தை நோக்கி இடப்பக்கம் உள்ள நான்கு உருவங்களும் வலப்பக்கமுள்ள நான்கு உருவங்களும் வணங்கும் நிலையில் அவை வடிக்கப்பட்டுள்ளன.

    ஆக நடுவிலுள்ள உருவம் ஒரு தெய்வ மூர்த்தமாக இருக்க வேண்டும். பக்கத்துக்கு நாலுபேர் வீதம் அந்த இறையுருவை வணங்குவதுபோல் வடிக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்துக்குக் கீழே, சண்டேஸ்வரர் சந்நிதிக்கு அருகிலுள்ள வடக்கு வாயிலின் நிலை மேலே, அஷ்ட மங்கலச் சின்னங்கள் என்னும் எட்டு மங்கலப் பொருட்கள் பொறிக்கப்பட்டிருக்கும். குத்துவிளக்கு, ஆனை, சிம்மம், கவரி, ரிஷபம், கொடிமரம், சங்கநிதி என எட்டுப் பொருட்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். அதுதான் மன்னர் இராஜராஜன் பெருவுடையாரை வணங்க வரும்போது பயன்படுத்தும் நுழைவாயில்.

    பெரிய கோயிலுக்கு வடக்கே இப்போதுள்ள சீனிவாசபுரத்தில்தான் இராஜராஜனின் அரண்மனை இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து மன்னர் வழிபாட்டுக்கு வரும் நுழைவாயிலில் இப்படி மங்கலச் சின்னங்கள் பொறிப்பது வழக்கம் என்று அதைக் காட்டி, குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா சொன்னார். இது மன்னர் வழிபட வரும் வாயில் என்பதால் இங்கு மெய்க்காவலர்கள் பலர் நிறுத்தப்பட்டிருந்ததாக சாசனம் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் குடவாயில் ஐயா எழுதியிருக்கிறார்.

    தஞ்சைக் கோயிலின் வடபுற மதில் சுவரின் வடமேற்கே, இராஜராஜன் வருவதற்கு ஒரு வாயில் இருக்கிறது. அதற்கு அணுக்கன் திருவாயில் என்று பெயர். பிற்காலத்தில் அதன் புழக்கம் நின்றுவிட்டது. அதன் மேல்புத்திலும் மங்கலச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்துவிளக்குகள், பூரணகலசம் ஆகியவை அங்கே காட்டப்பட்டுள்ளன.

    படம் நன்றி – முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியம்

    குடவாயில் ஐயா அவற்றைக் காட்டினார். அந்த வாயிலில் துளைகள் காணப்படுகின்றன. அந்தத் துளைகளுக்குள் மரச் சட்டங்களைச் செருகி, அதன் மேல் மர வேலைப்பாடு மிக்க அலங்கார வாயில் அமைந்திருக்க வேண்டும்.

    தஞ்சைக் கோயில் உட்புற சுவரோவியங்களில், மாமன்னர் தமது பட்டத்து மகிஷிகளோடு வணங்கும் தில்லை நடராஜர் ஆலய ஓவியத்தில் இதுபோன்ற வாயில்கள் இருந்ததை இன்றும் பார்க்க முடியும். 1980-களின் முற்பகுதியில் என் தந்தை தஞ்சையில் உயர் அதிகாரியாக வேலை பார்த்தபோது அந்த ஓவியங்களைப் பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது அவற்றின் அருமை பெருமை எனக்கு அதிகம் தெரியாது. அதன் பின்னர் பலமுறை முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.

    படம் நன்றி – தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

    வடமேற்கில் உள்ளதைப் போல் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மதில் சுவரில் மேலும் இரண்டு சிறுவாயில்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளன. அவை தமிழக பாணியில் இல்லாமல், சேரநாட்டு அதாவது கேரள பாணியில் உள்ளதைக் கவனிக்க வேண்டுமென்றார் குடவாயில் ஐயா. அவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக இருந்திருக்க வேண்டும். மரம், காலத்தால் மட்கி அழிந்து விட்டது. அணுக்கன் திருவாயில் இப்போது மரக்கதவுகளால் அடைபட்டுள்ளது. இருந்தாலும் துளைகள் எஞ்சியுள்ளன.

    குறுவாள்கள், அங்குசம், கோடரி, சங்கு, உடுக்கை, சூரியன் போன்றவைற்றையும் எட்டு மங்கலச் சின்னங்களாகப் பொறிக்கும் பழக்கம் சோழர் காலக் கோயில்களில் இருந்ததாகக் கல்வெட்டு ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அதுபோல, அங்கோர் வாட் கருவறை திசைவாயில் மேலே பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் மங்கலச் சின்னங்களாக இருக்கக் கூடுமோ என்று நினைத்தேன். ஆனால் இதில் ஒன்பது சிற்பங்கள் உள்ளன. வடக்கு, மேற்கிலுள்ள உருவங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. சில உருவங்கள் நான்முகன் போல் தெரிகின்றன.

    வடக்கில், நடுவிலுள்ள ஓர் உருவம், தாமரை மலரைக் கையிலேந்திய அஜந்தா குகை ஓவிய பத்மபாணி போலிருக்கிறது. மேற்கே நடுவிலுள்ள ஓர் உருவம் பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டுவது போலப் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கே நிலைவாயிலின் நடுவே இருப்பது சந்தேகமின்றி, பள்ளிகொண்ட பெருமாள்தான். படத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பெருமாள் கிழக்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார். தாயார் மேற்கே காலடியில் காட்டப்பட்டிருக்கிறார். உந்திச் சுழியிலிருந்து மேலே உயரும் கொடியில், பத்ம பீடத்தில் நான்முகம் அமர்ந்திருக்கிறார். பிரம்மனைச் சுற்றிலும் திருவாசி இருக்கிறது. பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமரையைத் தாங்கிய கொடி தவிர மேலும் ஓரிரு கொடிகள் தெரிகின்றன. இடப்பக்கமும் வலப்பக்கமும் வணங்கிய நிலையில் பக்கத்துக்கு நாலு விகிதம் எட்டு உருவங்கள். ஆக, இது மிக முக்கியமான கருவறை நுழைவாயில்.

    திருவரங்கம், சிதம்பரம் இரண்டு ஆலயக் கருவறை மூர்த்தங்களும் தென்திசை நோக்கியே அமைக்கப்பட்டுள்ளன. தென்திசை கூற்றுவன் திசை. ஆகவே, பக்தர்களின் எமபயம் போக்கும் நோக்கில் சீரங்கம் இரங்கநாதரும் சிதம்பரம் நடராஜரும் தென்திசை நோக்குவதாக ஐதீகம். அதே நோக்கம்தான் இந்த ஆலயத்திலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். ஆக, கீழே நாம் பார்த்த விஷ்ணு சிலை இங்கே தெற்கே பார்த்தவாறுதான் நிறுவப்பட்டிருக்கிறது.

    அது நான்கு திசையிலும் தெரியும் வகையில்தான் முதலில் கருவறை நிலைவாயில்கள் அமைக்கப்பட்டனவா அல்லது தொடக்கத்திலேயே தென்திசை மட்டும் திறந்திருக்க, மற்ற மூன்று திசை வாயில்களும் மூடப்பட்டிருந்தனவா என்பது எனக்குத் தெரியவில்லை. இப்போதுள்ள மூன்று திசைவாயில்களைப் பார்த்தால், அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டதைப் போலத்தான் தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும், இது விஷ்ணு ஆலயக் கருவறைதான். அதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

    சின்னப் புடைப்புச் சிற்பம்தான் என்றாலும் அப்பட்டமான கெமர் பாணியில் அமைந்த அழகிய சிற்பம். திருமகள் அப்சரஸ் போல மூன்று கொண்டை உள்ள தலை அலங்காரத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளார். திருமால் ஏன் கிழக்கே தலைவைத்திருக்க வேண்டுமெனப் புரியவில்லை. திருவரங்கத்தில் மேற்கே அல்லவா தலை வைத்திருப்பார் ? அத்துடன் கம்போடிய விஷ்ணு கிடந்த கோலத்திலேயே ஏதோ ஓர் ஆயுதத்தை இடக்கையில் பிடித்து ஓங்கியவாறு காட்டப்பட்டுள்ளார். இது போர்க்களக் காட்சியை நினைவூட்டுகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? நுணுக்கமான சிற்பம். அருகில் சென்று பார்த்தாலோ சக்தி வாய்ந்த கேமராவில் அருகே சென்று படம் எடுத்துப் பெரிதுபடுத்திப் பார்த்தாலோதான் கண்டுபிடிக்க முடியும்.

    அடுத்து, நிறைவாகக் கிழக்குப்புற வாயிலைக் காணச் சென்றோம். வழியில் சில புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. அவை அங்கே இருந்த சிலைகளாகத் தெரியவில்லை. வேறு எங்கிருந்தோ எடுத்து வரப்பட்டுத் தாழ்வாரங்களில் வைக்கப்பட்டிருந்தவை போல் தெரிந்தன. வழக்கம்போலப் பல சிலைகளுக்குத் தலை இல்லை. இனிமேல் உலகின் எந்த மூலையில் புத்தர் சிலையைப் பார்த்தாலும் அதற்குத் தலை இருந்தால் நான் ஆச்சர்யப்பட்டுப் போவேன் என்று நினைக்கிறேன்.

    கிழக்குப்புற வாயில் மற்ற இரண்டு வாயில்களைப் போல் அடைக்கப்பட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாக புத்தர் நின்றிருந்தார். கீழே அமர்ந்த நிலையில், நாலைந்து புத்தர் சிலைகள். அவற்றுள் சில மரச் சிற்பங்கள். நல்ல களையான முகங்கள். அப்பாடா என்றிருந்தது அந்த முகங்களைப் பார்க்கும்போது. ஆனால் இவை கம்போடிய புத்தர் சிலைகளாகத் தெரியவில்லை. தாய்லந்து புத்தரைப் போல் இருந்தது தலை அலங்காரம்.

    கண்கள் மூடி ஊழ்கத்தில் அமர்ந்த கோலத்தில் இல்லை இவை. பத்து வயது பாலகனின் புன்முறுவலோடு அரைக்கண் திறந்து மலர்ச்சியான கோலத்தில் இருந்தன மர புத்தர் சிலைகள். உண்மையில் அந்தச் சிலைகள் எனக்கு இனந்தெரியாத இன்பத்தை அளித்தன என்று சொல்லலாம். பின்னப்பட்டுப் போன சிலைகளும் தூண்களும் பெருகிக் கிடந்த இடத்தில் முழுமையான இந்தச் சிலைகள் ஏதோ ஒரு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.

    அந்த மரச் சிலைகளுக்கு முன்னால், கிடந்த கோலத்தில் ஒரு கல் புத்தர். அதற்கு முன்னாலும் ஊதுபத்திகள், படையல், மெழுகுவர்த்திகள். இந்த வாயிலுடன் ஆலயச் சுற்று முடிவடைகிறது.                     

    இனி கீழே இறங்க வேண்டியதுதான். நியாயப்படி, உலக அதிசயம் அங்கோர் வாட்டைப் பார்த்தாகி விட்டது என்ற நிறைவு இந்த இடத்தில் வர வேண்டும். ஆனால், எங்களுக்கு வரவில்லை.

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • 13

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகம் எப்படி இருந்திருக்கும் என்று நேரில் பார்க்க ஆசையா ? விமானம் ஏறி கம்போடியாவுக்கு வந்துவிடலாம். காலம் உறைந்து போயிருக்கிறது இங்கே. அங்கோர் வாட்டின் உச்சியில் இருந்து பார்த்தாலும்கூட நவநாகரிக உலகின் எந்தச் சுவடும் நம்முடைய கண்ணில் படுவதில்லை. இது ஒரு முக்கியமான அம்சம் எனத் தோன்றியது எனக்கு. ஆலயத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதி வானம் பார்க்கக் காடாகப் பரந்து விரிந்து கிடக்கிறது.

    நான் இதுவரை பார்த்த வரலாற்றுத் தலங்களில் பெரும்பாலானவை பரபரப்பான ஊருக்குள் இருக்கும். அல்லது அது ஒரு காட்சிப் பொருளாகி விட்டபடியால் அதைச் சுற்றி ஒரு வாழ்க்கை உருவாகி அதன் அங்கமாக நவீன வசதிகளும் உருவாகி விட்டிருக்கும். ஆனால், அங்கோர் வாட் விதிவிலக்கு. மிக நுணுக்கமாகப் பார்த்தால் தவிர மேலோட்டமான பார்வைக்கு வாகனங்களோ மனித சஞ்சாரமோ தெரிவதில்லை.

    இது நமக்கு ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது மனத்துக்குள். எனக்கு மட்டும்தான் இப்படியா என்று தெரியவில்லை. ஆளில்லாத பழைய ஆலயங்களிலும் கோட்டைகளிலும் கூட இப்படிப்பட்ட உணர்வை அடைந்திருக்கிறேன். ஆக்ரா கோட்டைக்கு ஈராயிரமாம் ஆண்டில் போனபோதும் இப்படித்தான் இருந்தது.      மாபெரும் கோட்டை மதில் சுவர்கள் எழுந்து புற உலகைத் துண்டித்து விட்டன. மொகலாய மன்னர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அந்தப் பயணம் உதவியாக இருந்தது.

    பிரமாண்டம் என்றால் என்னவென்பதை உணர வைத்த இடங்கள் இவையெல்லாம். வடகிழக்கு மூலையில் படியேறி அங்கோர் வாட்டின் உச்சிப் பகுதிக்கு வந்தபோது கலவையான உணர்வுகள்.

    இந்தக் கட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டி தேவையற்றவராகிப் போயிருந்தார். எங்களை வியக்க வைக்கும் தகவல் எதுவும் அவரிடம் இல்லை. நிலக் காட்சியின் அழகில் நாங்கள் மூழ்கிப் போயிருந்தோம். இவ்வளவு பெரிய வளாகமும் இந்த உச்சிப் பகுதியை நோக்கித்தான்…. இதற்காகத்தான் என்று நினைக்கும்போது பிரமிப்பு ஏற்பட்டது. ஆனால், கருவறை இருக்க வேண்டிய இடத்தில் மொண்ணையான புத்தர் சிலைகளைப் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது.

    நான்கு பக்கங்களையும் மறித்துச் சுவர் எழுப்பி அவ்வளவு லட்சணமில்லாத புத்தர் சிலைகளை வைத்திருந்தனர். அதிலும் சில புத்தர் சிலைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருந்தன. தலையற்ற முண்டமாக புத்தரின் சிலையைத் தரிசிக்கவே மனம் நடுங்கியது. நல்லவேளை.. இந்தக் கொடுமையை இரண்டாம் சூரியவர்மன் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

    உண்மையில், அங்கோர் வாட்டைக் கட்டிய மன்னர் இரண்டாம் சூரியவர்மன் இந்த ஆலயத்தின் முதற்கட்டப் பணிகளின்போதே மறைந்துவிட்டிருக்க வேண்டுமென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். சூரியவர்மன் 32 வயது வரையிலும்தான் உயிர் வாழ்ந்திருக்கிறார். அவரது காலம், கி.பி 1113-1145 என்கிறது கம்போடியத் தலைநகர் புனோம் பென் அரும்பொருளகத்தில் நாங்கள் வாங்கிய கையேடு. 32 வயது வரை மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதனின் சாதனைதான் இந்த ஆலயம்.

    மலைப்பாக இருந்தது. தாம் உயிரோடு இருக்கும்போதே ஆலயம் முழுமையும் எப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டுக் கட்டத் தொடங்கிய மன்னர் அந்தப் பணிகள் முழுமை பெறும்போது அதைப் பார்க்க உயிரோடு இல்லை. மிகுந்த வேதனை தரக்கூடிய தகவல் இது.

    இந்தக் கட்டுரைக்குத் தேவையான தகவல்களைத் தேடிப் படிக்கும்போதுதான் இது எனக்குத் தெரியவந்தது. எகிப்தியப் பேரரசர்கள், அவர்கள் அரியணை ஏறியதுமே அவர்களுக்கான கல்லறைப் பிரமிடுகளைக் கட்டத் தொடங்கிவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன். அதுபோல், அங்கோர் வாட் சூரியவர்மனின் கல்லறைக் கோயில்தான் என்றால், அவர் அரியணை ஏறியதுமே கட்டட வேலைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.                                   

    சூரியவர்மன் எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார் என்று தெரியவில்லை. 20 வயது என்று வைத்துக் கொண்டால்கூட 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள் பாதி வேலை கூட முடிந்திருக்காது. அப்படியானால், மனக்கண்ணில் மட்டும்தான் மன்னர், முழுமையான ஆலயத்தைப் பார்த்திருக்க முடியும்.

    வடகிழக்கில் ஏறி உள்ளே சென்றபோது பரணி மட்டும்தான் என்னோடு இருந்தார். ராஜூ, நவீன், மகாதேவன் மூவரும் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போய்விட்டார்கள். நாங்கள் இருவரும் படம் எடுத்துக் கொண்டே வந்ததால் பின்தங்கிப் போனோம். மேருவின் கீழிருந்து உள்ளே போய் இடப்பக்கமாகத் திரும்பினால், கருவறையின் வடக்குமுக வாயிலைக் காணமுடியும். அங்கே சயன நிலையில் ஒரு புத்தர் கிடத்தப்பட்டிருந்தார். வாசல் நிலையை அடைத்த மாதிரி நின்ற கோலத்தில் ஒரு புத்தர்.

    பெரிய பெரிய கற்பாளங்களை வைத்து வாசலை அடைத்துவிட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கியிருக்கிறார்கள். சயன புத்தருக்கு முன்னால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.

    கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏற்றப்படுவதுபோன்ற தடிமனான மெழுகுவர்த்தி. பல மணி நேரத்திற்கு நின்று எரியக்கூடியது. வாழைத் தண்டை வெட்டி அடிப்பகுதியாகக் கொண்ட ஓர் அலங்காரம். மேலே வாழை இலையைக் கூம்பு வடிவத்தில் சுருட்டி, பக்கவாட்டில் கதிர்கள் விரிவது போல் இலைகளைச் சுருட்டி விட்டிருந்தனர்.         

             

    அச்சு அசப்பில், அய்யர் வீட்டுத் திருமணங்களில் வைக்கப்படும் பருப்புத் தேங்காயைப் போலவே இருந்தது. பருப்புத் தேங்காய் பெரும்பாலும் மஞ்சள் ஜிகினா தாளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இது பச்சை வாழை இலை. அவ்வளவுதான் வித்தியாசம். அவை தவிர, வெள்ளை நுரைப்பஞ்சுத் தட்டில் வாழைப் பழங்களும் லைச்சீ பழங்களும் படைக்கப்பட்டிருந்தன. ஒரு பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர். அது படைக்கப்பட்ட தீர்த்தமா இல்லை சுற்றுப் பயணிகள் விட்டுச் சென்றதா தெரியவில்லை.

    புத்தரின் மேல் போர்த்தப்பட்டிருந்த ஜிகினாத் துணியும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மாலையும் அந்தப் பழமையான சூழலுக்குப் பொருந்தவே இல்லை. அதன் செயற்கைத் தன்மை துருத்திக் கொண்டு தெரிந்தது. நின்ற கோலத்திலிருந்த புத்தர் மீது ஏதோ ஒருவித மஞ்சள் பூச்சு இலேசாகத் தெரிந்தது. தங்க முலாமா என்று தெரியவில்லை. இருக்க முடியாது. ஆலயம் கைவிடப்பட்ட காலத்தில் கண்டிப்பாக அது சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டிருக்கும்.

    வடக்கு வாயிலைப் பார்த்துவிட்டு இப்போது மேற்குப்புற வாயிலுக்கு வந்தோம். இங்கே குட்டி குட்டியாய்க் கழுத்து அறுக்கப்பட்ட நாலைந்து புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. பின்னால் அதேபோல நின்ற கோலத்தில் பெரிய புத்தர். இங்கும் மெழுகுவர்த்திகள்.     

    ஆனால் இந்த மெழுகுவர்த்திகள் சின்னவை. வரிசையாக ஒரு வாழை மட்டையில் செருகப்பட்டிருந்தன. இந்த பிரமாண்ட பேராலயத்தின் நடுவே இருக்கக் கொஞ்சமும் தகுதியற்ற உருவச் சிலைகள். கழுத்து அறுபட்ட புத்தர் சிலைகள் என்றால் மிகப் பெரும்பாலும் களையான முகம் கொண்ட பழைய புத்தர் சிலைகளாகத்தான் இருக்க வேண்டும். முகம்தான் இல்லை. மற்ற உடல் பகுதிகளையாவது பார்க்கலாம் என்றால், புத்தரின் வலப்புறத் தோள்பட்டை மட்டும்தான் தெரிகிறது. மற்ற பகுதிகளை வழக்கம்போல ஜிகினாத் துணியால் மூடிவிட்டனர். ஐயோ.. கடவுளே !

    இந்த மேற்குப்புற வாயிலுக்கு எதிரில்தான் அங்கோர் வாட் வளாகத்தின் முக்கிய நுழைவாயில் வருகிறது. அது நீண்டு கிடப்பதைப் பார்க்க புத்தருக்கு இப்போது முடியாது. தலை இல்லையே !

    கருவறைக்கு முன்னால் உள்ள தாழ்வாரம் 20, 30 அடி நீண்டு பெரிய சுற்றுத் தாழ்வாரத்தோடு இணைந்து கொள்கிறது. ஓங்கி மழை பெய்தால், சாரல் அடிக்கும் அளவுக்கு அகலம் குறைந்த தாழ்வாரம். எந்தத் திக்கில் திரும்பினாலும் பழமை. பசுமை.. நம் வாழ்வில் எளிதில் கிடைக்காத காட்சி இது. வரலாற்றுப் பிரியர்களால் பிரிந்து வர இயலாத இடம்.

    சுற்றிலுமுள்ள கற்கள் பேச முடிந்தால் எப்படி இருக்கும் ? என்னென்ன கதை சொல்லும் நம்மிடம் ? காலம் கற்களை மழுங்கச் செய்துவிட்டிருக்கிறது. மழையும் தன்பங்குக்கு மணற்கல் சிற்பங்களைக் கரைத்துவிட்டிருக்கிறது. ஆனாலும் எஞ்சியிருக்கும் சிற்பங்கள் கல்லை விட்டு வெளியே வரத் துடிப்பதைப் போலிருந்தன.

    ஒவ்வோர் இடத்தையும் கண்களால் அள்ளி அள்ளி விழுங்கினோம் நானும் பரணியும். இனியொரு முறை இதைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கம் எழுந்து கொண்டே வந்தது. “இதுக்கு ஒரு நாள்லாம் பத்தாதுண்ணா” என்று பரணி புலம்பிக் கொண்டே வந்தார். அதிலென்ன சந்தேகம் ? ஒரு மாதம் கூடப் போதாதுதான். படப்போட திங்கிற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டாக் காணுமா ? ஹும்.

    இப்போது நாங்கள் மேற்கிலிருந்து தென்திசை வாயிலுக்கு வந்திருந்தோம். ஆலய முகப்பில் இருந்த விஷ்ணு சிலை இங்கே இருந்தது உண்மையானால், அந்த விஷ்ணுவின் தாழ்ந்த கண்மலர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கே விரியும் இந்தக் காட்சியைத்தான் கண்டிருக்க வேண்டும். இங்கே ஓர் ஆச்சர்யம் எங்களுக்குக் காத்திருந்தது. இந்தக் கருவறை வாயில் மற்ற வாயில்களைப் போல் மூடப்படாமல் கதவு வைத்து சாத்தப்பட்டிருந்தது. முன்னால் புடைப்புச் சிற்பமாக இல்லாமல் முப்பரிமாணத்தில் புத்தர். நின்றகோலம். அதற்குக் கீழே கழுத்து அறுக்கப்பட்ட அமர்ந்த கோல புத்தர் சிலைகள் சில..

    தொல்பொருள் ஆய்வுக்காக இந்த வாயில் உடைத்துத் திறக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இது மட்டும் மூடப்படாமலேயே விடப்பட்டிருக்க வேண்டும். சில பூட்டுகள் தொங்கின கதவுக்கு வெளியே. உள்ளே போய் விளக்கு வைத்து என்ன இருக்கிறது என்று பார்க்க கொள்ளை ஆசையாக இருந்தது. அதற்கு அனுமதி இல்லை. உள்ளே எவ்வளவு ஆழம் இருக்கும் ? சில வெள்ளைக்கார ஆய்வாளர்கள் இதனுள்ளே போய்ப் பார்த்திருப்பதாகக் குறிப்புகள் உள்ளன.

    ஒரு பெரிய சதுரத் துளை கீழே வரை செல்வதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதில் என்னென்ன இருந்திருக்கும் ? நமது ஆலயங்களில் கருவறை மூர்த்தங்களுக்குக் கீழே நவமணிகளைப் புதைக்கும் வழக்கம் இருக்கிறதே.. அதுபோல் இங்கும் கண்டிப்பாகப் புதைக்கப்பட்டிருக்கும்.       

    இது விஷ்ணு ஆலயம்தான் என்பதற்குரிய தெளிவான தடயமொன்றை நிலைவாயிலின் மேலே காணமுடிந்தது. அதை இந்த அத்தியாயம் எழுதும்போதுதான் என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வோர் அத்தியாயம் எழுதும்போதும் அதற்குரிய படங்களை முழுமையாகப் பார்த்துவிட்டே எழுதுவேன். அது எழுதுவதற்கான மனநிலையை எனக்குத் தரும். மறந்த பல அம்சங்களைப் படங்கள் எனக்கு நினைவுபடுத்தும்.

    அதுபோல, கருவறை புத்தர் சிலைகளைப் பார்த்துக் கொண்டே வந்தபோது வாயில்படி மேலே செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்க்கும்போது நேரில் புலப்படாத சில அம்சங்கள் புலப்படுகின்றன. ஒவ்வொரு வாயிலின் மேலும் பிரபாவளியுடன் கூடிய ஒன்பது உருவங்கள் அமர்ந்த கோலத்தில் உள்ளன. நடுவிலுள்ள உருவத்தை நோக்கி இடப்பக்கம் உள்ள நான்கு உருவங்களும் வலப்பக்கமுள்ள நான்கு உருவங்களும் வணங்கும் நிலையில் அவை வடிக்கப்பட்டுள்ளன.

    ஆக நடுவிலுள்ள உருவம் ஒரு தெய்வ மூர்த்தமாக இருக்க வேண்டும். பக்கத்துக்கு நாலுபேர் வீதம் அந்த இறையுருவை வணங்குவதுபோல் வடிக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்துக்குக் கீழே, சண்டேஸ்வரர் சந்நிதிக்கு அருகிலுள்ள வடக்கு வாயிலின் நிலை மேலே, அஷ்ட மங்கலச் சின்னங்கள் என்னும் எட்டு மங்கலப் பொருட்கள் பொறிக்கப்பட்டிருக்கும். குத்துவிளக்கு, ஆனை, சிம்மம், கவரி, ரிஷபம், கொடிமரம், சங்கநிதி என எட்டுப் பொருட்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். அதுதான் மன்னர் இராஜராஜன் பெருவுடையாரை வணங்க வரும்போது பயன்படுத்தும் நுழைவாயில்.

    பெரிய கோயிலுக்கு வடக்கே இப்போதுள்ள சீனிவாசபுரத்தில்தான் இராஜராஜனின் அரண்மனை இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து மன்னர் வழிபாட்டுக்கு வரும் நுழைவாயிலில் இப்படி மங்கலச் சின்னங்கள் பொறிப்பது வழக்கம் என்று அதைக் காட்டி, குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா சொன்னார். இது மன்னர் வழிபட வரும் வாயில் என்பதால் இங்கு மெய்க்காவலர்கள் பலர் நிறுத்தப்பட்டிருந்ததாக சாசனம் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் குடவாயில் ஐயா எழுதியிருக்கிறார்.

    தஞ்சைக் கோயிலின் வடபுற மதில் சுவரின் வடமேற்கே, இராஜராஜன் வருவதற்கு ஒரு வாயில் இருக்கிறது. அதற்கு அணுக்கன் திருவாயில் என்று பெயர். பிற்காலத்தில் அதன் புழக்கம் நின்றுவிட்டது. அதன் மேல்புத்திலும் மங்கலச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்துவிளக்குகள், பூரணகலசம் ஆகியவை அங்கே காட்டப்பட்டுள்ளன.

    படம் நன்றி – முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியம்

    குடவாயில் ஐயா அவற்றைக் காட்டினார். அந்த வாயிலில் துளைகள் காணப்படுகின்றன. அந்தத் துளைகளுக்குள் மரச் சட்டங்களைச் செருகி, அதன் மேல் மர வேலைப்பாடு மிக்க அலங்கார வாயில் அமைந்திருக்க வேண்டும்.

    தஞ்சைக் கோயில் உட்புற சுவரோவியங்களில், மாமன்னர் தமது பட்டத்து மகிஷிகளோடு வணங்கும் தில்லை நடராஜர் ஆலய ஓவியத்தில் இதுபோன்ற வாயில்கள் இருந்ததை இன்றும் பார்க்க முடியும். 1980-களின் முற்பகுதியில் என் தந்தை தஞ்சையில் உயர் அதிகாரியாக வேலை பார்த்தபோது அந்த ஓவியங்களைப் பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது அவற்றின் அருமை பெருமை எனக்கு அதிகம் தெரியாது. அதன் பின்னர் பலமுறை முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.

    படம் நன்றி – தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

    வடமேற்கில் உள்ளதைப் போல் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மதில் சுவரில் மேலும் இரண்டு சிறுவாயில்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளன. அவை தமிழக பாணியில் இல்லாமல், சேரநாட்டு அதாவது கேரள பாணியில் உள்ளதைக் கவனிக்க வேண்டுமென்றார் குடவாயில் ஐயா. அவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக இருந்திருக்க வேண்டும். மரம், காலத்தால் மட்கி அழிந்து விட்டது. அணுக்கன் திருவாயில் இப்போது மரக்கதவுகளால் அடைபட்டுள்ளது. இருந்தாலும் துளைகள் எஞ்சியுள்ளன.

    குறுவாள்கள், அங்குசம், கோடரி, சங்கு, உடுக்கை, சூரியன் போன்றவைற்றையும் எட்டு மங்கலச் சின்னங்களாகப் பொறிக்கும் பழக்கம் சோழர் காலக் கோயில்களில் இருந்ததாகக் கல்வெட்டு ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அதுபோல, அங்கோர் வாட் கருவறை திசைவாயில் மேலே பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் மங்கலச் சின்னங்களாக இருக்கக் கூடுமோ என்று நினைத்தேன். ஆனால் இதில் ஒன்பது சிற்பங்கள் உள்ளன. வடக்கு, மேற்கிலுள்ள உருவங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. சில உருவங்கள் நான்முகன் போல் தெரிகின்றன.

    வடக்கில், நடுவிலுள்ள ஓர் உருவம், தாமரை மலரைக் கையிலேந்திய அஜந்தா குகை ஓவிய பத்மபாணி போலிருக்கிறது. மேற்கே நடுவிலுள்ள ஓர் உருவம் பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டுவது போலப் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கே நிலைவாயிலின் நடுவே இருப்பது சந்தேகமின்றி, பள்ளிகொண்ட பெருமாள்தான். படத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பெருமாள் கிழக்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார். தாயார் மேற்கே காலடியில் காட்டப்பட்டிருக்கிறார். உந்திச் சுழியிலிருந்து மேலே உயரும் கொடியில், பத்ம பீடத்தில் நான்முகம் அமர்ந்திருக்கிறார். பிரம்மனைச் சுற்றிலும் திருவாசி இருக்கிறது. பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமரையைத் தாங்கிய கொடி தவிர மேலும் ஓரிரு கொடிகள் தெரிகின்றன. இடப்பக்கமும் வலப்பக்கமும் வணங்கிய நிலையில் பக்கத்துக்கு நாலு விகிதம் எட்டு உருவங்கள். ஆக, இது மிக முக்கியமான கருவறை நுழைவாயில்.

    திருவரங்கம், சிதம்பரம் இரண்டு ஆலயக் கருவறை மூர்த்தங்களும் தென்திசை நோக்கியே அமைக்கப்பட்டுள்ளன. தென்திசை கூற்றுவன் திசை. ஆகவே, பக்தர்களின் எமபயம் போக்கும் நோக்கில் சீரங்கம் இரங்கநாதரும் சிதம்பரம் நடராஜரும் தென்திசை நோக்குவதாக ஐதீகம். அதே நோக்கம்தான் இந்த ஆலயத்திலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். ஆக, கீழே நாம் பார்த்த விஷ்ணு சிலை இங்கே தெற்கே பார்த்தவாறுதான் நிறுவப்பட்டிருக்கிறது.

    அது நான்கு திசையிலும் தெரியும் வகையில்தான் முதலில் கருவறை நிலைவாயில்கள் அமைக்கப்பட்டனவா அல்லது தொடக்கத்திலேயே தென்திசை மட்டும் திறந்திருக்க, மற்ற மூன்று திசை வாயில்களும் மூடப்பட்டிருந்தனவா என்பது எனக்குத் தெரியவில்லை. இப்போதுள்ள மூன்று திசைவாயில்களைப் பார்த்தால், அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டதைப் போலத்தான் தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும், இது விஷ்ணு ஆலயக் கருவறைதான். அதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

    சின்னப் புடைப்புச் சிற்பம்தான் என்றாலும் அப்பட்டமான கெமர் பாணியில் அமைந்த அழகிய சிற்பம். திருமகள் அப்சரஸ் போல மூன்று கொண்டை உள்ள தலை அலங்காரத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளார். திருமால் ஏன் கிழக்கே தலைவைத்திருக்க வேண்டுமெனப் புரியவில்லை. திருவரங்கத்தில் மேற்கே அல்லவா தலை வைத்திருப்பார் ? அத்துடன் கம்போடிய விஷ்ணு கிடந்த கோலத்திலேயே ஏதோ ஓர் ஆயுதத்தை இடக்கையில் பிடித்து ஓங்கியவாறு காட்டப்பட்டுள்ளார். இது போர்க்களக் காட்சியை நினைவூட்டுகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? நுணுக்கமான சிற்பம். அருகில் சென்று பார்த்தாலோ சக்தி வாய்ந்த கேமராவில் அருகே சென்று படம் எடுத்துப் பெரிதுபடுத்திப் பார்த்தாலோதான் கண்டுபிடிக்க முடியும்.

    அடுத்து, நிறைவாகக் கிழக்குப்புற வாயிலைக் காணச் சென்றோம். வழியில் சில புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. அவை அங்கே இருந்த சிலைகளாகத் தெரியவில்லை. வேறு எங்கிருந்தோ எடுத்து வரப்பட்டுத் தாழ்வாரங்களில் வைக்கப்பட்டிருந்தவை போல் தெரிந்தன. வழக்கம்போலப் பல சிலைகளுக்குத் தலை இல்லை. இனிமேல் உலகின் எந்த மூலையில் புத்தர் சிலையைப் பார்த்தாலும் அதற்குத் தலை இருந்தால் நான் ஆச்சர்யப்பட்டுப் போவேன் என்று நினைக்கிறேன்.

    கிழக்குப்புற வாயில் மற்ற இரண்டு வாயில்களைப் போல் அடைக்கப்பட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாக புத்தர் நின்றிருந்தார். கீழே அமர்ந்த நிலையில், நாலைந்து புத்தர் சிலைகள். அவற்றுள் சில மரச் சிற்பங்கள். நல்ல களையான முகங்கள். அப்பாடா என்றிருந்தது அந்த முகங்களைப் பார்க்கும்போது. ஆனால் இவை கம்போடிய புத்தர் சிலைகளாகத் தெரியவில்லை. தாய்லந்து புத்தரைப் போல் இருந்தது தலை அலங்காரம்.

    கண்கள் மூடி ஊழ்கத்தில் அமர்ந்த கோலத்தில் இல்லை இவை. பத்து வயது பாலகனின் புன்முறுவலோடு அரைக்கண் திறந்து மலர்ச்சியான கோலத்தில் இருந்தன மர புத்தர் சிலைகள். உண்மையில் அந்தச் சிலைகள் எனக்கு இனந்தெரியாத இன்பத்தை அளித்தன என்று சொல்லலாம். பின்னப்பட்டுப் போன சிலைகளும் தூண்களும் பெருகிக் கிடந்த இடத்தில் முழுமையான இந்தச் சிலைகள் ஏதோ ஒரு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.

    அந்த மரச் சிலைகளுக்கு முன்னால், கிடந்த கோலத்தில் ஒரு கல் புத்தர். அதற்கு முன்னாலும் ஊதுபத்திகள், படையல், மெழுகுவர்த்திகள். இந்த வாயிலுடன் ஆலயச் சுற்று முடிவடைகிறது.                     

    இனி கீழே இறங்க வேண்டியதுதான். நியாயப்படி, உலக அதிசயம் அங்கோர் வாட்டைப் பார்த்தாகி விட்டது என்ற நிறைவு இந்த இடத்தில் வர வேண்டும். ஆனால், எங்களுக்கு வரவில்லை.

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

     

  • 13

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகம் எப்படி இருந்திருக்கும் என்று நேரில் பார்க்க ஆசையா ? விமானம் ஏறி கம்போடியாவுக்கு வந்துவிடலாம். காலம் உறைந்து போயிருக்கிறது இங்கே. அங்கோர் வாட்டின் உச்சியில் இருந்து பார்த்தாலும்கூட நவநாகரிக உலகின் எந்தச் சுவடும் நம்முடைய கண்ணில் படுவதில்லை. இது ஒரு முக்கியமான அம்சம் எனத் தோன்றியது எனக்கு. ஆலயத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதி வானம் பார்க்கக் காடாகப் பரந்து விரிந்து கிடக்கிறது.

    நான் இதுவரை பார்த்த வரலாற்றுத் தலங்களில் பெரும்பாலானவை பரபரப்பான ஊருக்குள் இருக்கும். அல்லது அது ஒரு காட்சிப் பொருளாகி விட்டபடியால் அதைச் சுற்றி ஒரு வாழ்க்கை உருவாகி அதன் அங்கமாக நவீன வசதிகளும் உருவாகி விட்டிருக்கும். ஆனால், அங்கோர் வாட் விதிவிலக்கு. மிக நுணுக்கமாகப் பார்த்தால் தவிர மேலோட்டமான பார்வைக்கு வாகனங்களோ மனித சஞ்சாரமோ தெரிவதில்லை.

    இது நமக்கு ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது மனத்துக்குள். எனக்கு மட்டும்தான் இப்படியா என்று தெரியவில்லை. ஆளில்லாத பழைய ஆலயங்களிலும் கோட்டைகளிலும் கூட இப்படிப்பட்ட உணர்வை அடைந்திருக்கிறேன். ஆக்ரா கோட்டைக்கு ஈராயிரமாம் ஆண்டில் போனபோதும் இப்படித்தான் இருந்தது.      மாபெரும் கோட்டை மதில் சுவர்கள் எழுந்து புற உலகைத் துண்டித்து விட்டன. மொகலாய மன்னர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அந்தப் பயணம் உதவியாக இருந்தது.

    பிரமாண்டம் என்றால் என்னவென்பதை உணர வைத்த இடங்கள் இவையெல்லாம். வடகிழக்கு மூலையில் படியேறி அங்கோர் வாட்டின் உச்சிப் பகுதிக்கு வந்தபோது கலவையான உணர்வுகள்.

    இந்தக் கட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டி தேவையற்றவராகிப் போயிருந்தார். எங்களை வியக்க வைக்கும் தகவல் எதுவும் அவரிடம் இல்லை. நிலக் காட்சியின் அழகில் நாங்கள் மூழ்கிப் போயிருந்தோம். இவ்வளவு பெரிய வளாகமும் இந்த உச்சிப் பகுதியை நோக்கித்தான்…. இதற்காகத்தான் என்று நினைக்கும்போது பிரமிப்பு ஏற்பட்டது. ஆனால், கருவறை இருக்க வேண்டிய இடத்தில் மொண்ணையான புத்தர் சிலைகளைப் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது.

    நான்கு பக்கங்களையும் மறித்துச் சுவர் எழுப்பி அவ்வளவு லட்சணமில்லாத புத்தர் சிலைகளை வைத்திருந்தனர். அதிலும் சில புத்தர் சிலைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருந்தன. தலையற்ற முண்டமாக புத்தரின் சிலையைத் தரிசிக்கவே மனம் நடுங்கியது. நல்லவேளை.. இந்தக் கொடுமையை இரண்டாம் சூரியவர்மன் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

    உண்மையில், அங்கோர் வாட்டைக் கட்டிய மன்னர் இரண்டாம் சூரியவர்மன் இந்த ஆலயத்தின் முதற்கட்டப் பணிகளின்போதே மறைந்துவிட்டிருக்க வேண்டுமென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். சூரியவர்மன் 32 வயது வரையிலும்தான் உயிர் வாழ்ந்திருக்கிறார். அவரது காலம், கி.பி 1113-1145 என்கிறது கம்போடியத் தலைநகர் புனோம் பென் அரும்பொருளகத்தில் நாங்கள் வாங்கிய கையேடு. 32 வயது வரை மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதனின் சாதனைதான் இந்த ஆலயம்.

    மலைப்பாக இருந்தது. தாம் உயிரோடு இருக்கும்போதே ஆலயம் முழுமையும் எப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டுக் கட்டத் தொடங்கிய மன்னர் அந்தப் பணிகள் முழுமை பெறும்போது அதைப் பார்க்க உயிரோடு இல்லை. மிகுந்த வேதனை தரக்கூடிய தகவல் இது.

    இந்தக் கட்டுரைக்குத் தேவையான தகவல்களைத் தேடிப் படிக்கும்போதுதான் இது எனக்குத் தெரியவந்தது. எகிப்தியப் பேரரசர்கள், அவர்கள் அரியணை ஏறியதுமே அவர்களுக்கான கல்லறைப் பிரமிடுகளைக் கட்டத் தொடங்கிவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன். அதுபோல், அங்கோர் வாட் சூரியவர்மனின் கல்லறைக் கோயில்தான் என்றால், அவர் அரியணை ஏறியதுமே கட்டட வேலைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.                                   

    சூரியவர்மன் எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார் என்று தெரியவில்லை. 20 வயது என்று வைத்துக் கொண்டால்கூட 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள் பாதி வேலை கூட முடிந்திருக்காது. அப்படியானால், மனக்கண்ணில் மட்டும்தான் மன்னர், முழுமையான ஆலயத்தைப் பார்த்திருக்க முடியும்.

    வடகிழக்கில் ஏறி உள்ளே சென்றபோது பரணி மட்டும்தான் என்னோடு இருந்தார். ராஜூ, நவீன், மகாதேவன் மூவரும் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போய்விட்டார்கள். நாங்கள் இருவரும் படம் எடுத்துக் கொண்டே வந்ததால் பின்தங்கிப் போனோம். மேருவின் கீழிருந்து உள்ளே போய் இடப்பக்கமாகத் திரும்பினால், கருவறையின் வடக்குமுக வாயிலைக் காணமுடியும். அங்கே சயன நிலையில் ஒரு புத்தர் கிடத்தப்பட்டிருந்தார். வாசல் நிலையை அடைத்த மாதிரி நின்ற கோலத்தில் ஒரு புத்தர்.

    பெரிய பெரிய கற்பாளங்களை வைத்து வாசலை அடைத்துவிட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கியிருக்கிறார்கள். சயன புத்தருக்கு முன்னால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.

    கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏற்றப்படுவதுபோன்ற தடிமனான மெழுகுவர்த்தி. பல மணி நேரத்திற்கு நின்று எரியக்கூடியது. வாழைத் தண்டை வெட்டி அடிப்பகுதியாகக் கொண்ட ஓர் அலங்காரம். மேலே வாழை இலையைக் கூம்பு வடிவத்தில் சுருட்டி, பக்கவாட்டில் கதிர்கள் விரிவது போல் இலைகளைச் சுருட்டி விட்டிருந்தனர்.         

             

    அச்சு அசப்பில், அய்யர் வீட்டுத் திருமணங்களில் வைக்கப்படும் பருப்புத் தேங்காயைப் போலவே இருந்தது. பருப்புத் தேங்காய் பெரும்பாலும் மஞ்சள் ஜிகினா தாளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இது பச்சை வாழை இலை. அவ்வளவுதான் வித்தியாசம். அவை தவிர, வெள்ளை நுரைப்பஞ்சுத் தட்டில் வாழைப் பழங்களும் லைச்சீ பழங்களும் படைக்கப்பட்டிருந்தன. ஒரு பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர். அது படைக்கப்பட்ட தீர்த்தமா இல்லை சுற்றுப் பயணிகள் விட்டுச் சென்றதா தெரியவில்லை.

    புத்தரின் மேல் போர்த்தப்பட்டிருந்த ஜிகினாத் துணியும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மாலையும் அந்தப் பழமையான சூழலுக்குப் பொருந்தவே இல்லை. அதன் செயற்கைத் தன்மை துருத்திக் கொண்டு தெரிந்தது. நின்ற கோலத்திலிருந்த புத்தர் மீது ஏதோ ஒருவித மஞ்சள் பூச்சு இலேசாகத் தெரிந்தது. தங்க முலாமா என்று தெரியவில்லை. இருக்க முடியாது. ஆலயம் கைவிடப்பட்ட காலத்தில் கண்டிப்பாக அது சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டிருக்கும்.

    வடக்கு வாயிலைப் பார்த்துவிட்டு இப்போது மேற்குப்புற வாயிலுக்கு வந்தோம். இங்கே குட்டி குட்டியாய்க் கழுத்து அறுக்கப்பட்ட நாலைந்து புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. பின்னால் அதேபோல நின்ற கோலத்தில் பெரிய புத்தர். இங்கும் மெழுகுவர்த்திகள்.     

    ஆனால் இந்த மெழுகுவர்த்திகள் சின்னவை. வரிசையாக ஒரு வாழை மட்டையில் செருகப்பட்டிருந்தன. இந்த பிரமாண்ட பேராலயத்தின் நடுவே இருக்கக் கொஞ்சமும் தகுதியற்ற உருவச் சிலைகள். கழுத்து அறுபட்ட புத்தர் சிலைகள் என்றால் மிகப் பெரும்பாலும் களையான முகம் கொண்ட பழைய புத்தர் சிலைகளாகத்தான் இருக்க வேண்டும். முகம்தான் இல்லை. மற்ற உடல் பகுதிகளையாவது பார்க்கலாம் என்றால், புத்தரின் வலப்புறத் தோள்பட்டை மட்டும்தான் தெரிகிறது. மற்ற பகுதிகளை வழக்கம்போல ஜிகினாத் துணியால் மூடிவிட்டனர். ஐயோ.. கடவுளே !

    இந்த மேற்குப்புற வாயிலுக்கு எதிரில்தான் அங்கோர் வாட் வளாகத்தின் முக்கிய நுழைவாயில் வருகிறது. அது நீண்டு கிடப்பதைப் பார்க்க புத்தருக்கு இப்போது முடியாது. தலை இல்லையே !

    கருவறைக்கு முன்னால் உள்ள தாழ்வாரம் 20, 30 அடி நீண்டு பெரிய சுற்றுத் தாழ்வாரத்தோடு இணைந்து கொள்கிறது. ஓங்கி மழை பெய்தால், சாரல் அடிக்கும் அளவுக்கு அகலம் குறைந்த தாழ்வாரம். எந்தத் திக்கில் திரும்பினாலும் பழமை. பசுமை.. நம் வாழ்வில் எளிதில் கிடைக்காத காட்சி இது. வரலாற்றுப் பிரியர்களால் பிரிந்து வர இயலாத இடம்.

    சுற்றிலுமுள்ள கற்கள் பேச முடிந்தால் எப்படி இருக்கும் ? என்னென்ன கதை சொல்லும் நம்மிடம் ? காலம் கற்களை மழுங்கச் செய்துவிட்டிருக்கிறது. மழையும் தன்பங்குக்கு மணற்கல் சிற்பங்களைக் கரைத்துவிட்டிருக்கிறது. ஆனாலும் எஞ்சியிருக்கும் சிற்பங்கள் கல்லை விட்டு வெளியே வரத் துடிப்பதைப் போலிருந்தன.

    ஒவ்வோர் இடத்தையும் கண்களால் அள்ளி அள்ளி விழுங்கினோம் நானும் பரணியும். இனியொரு முறை இதைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கம் எழுந்து கொண்டே வந்தது. “இதுக்கு ஒரு நாள்லாம் பத்தாதுண்ணா” என்று பரணி புலம்பிக் கொண்டே வந்தார். அதிலென்ன சந்தேகம் ? ஒரு மாதம் கூடப் போதாதுதான். படப்போட திங்கிற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டாக் காணுமா ? ஹும்.

    இப்போது நாங்கள் மேற்கிலிருந்து தென்திசை வாயிலுக்கு வந்திருந்தோம். ஆலய முகப்பில் இருந்த விஷ்ணு சிலை இங்கே இருந்தது உண்மையானால், அந்த விஷ்ணுவின் தாழ்ந்த கண்மலர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கே விரியும் இந்தக் காட்சியைத்தான் கண்டிருக்க வேண்டும். இங்கே ஓர் ஆச்சர்யம் எங்களுக்குக் காத்திருந்தது. இந்தக் கருவறை வாயில் மற்ற வாயில்களைப் போல் மூடப்படாமல் கதவு வைத்து சாத்தப்பட்டிருந்தது. முன்னால் புடைப்புச் சிற்பமாக இல்லாமல் முப்பரிமாணத்தில் புத்தர். நின்றகோலம். அதற்குக் கீழே கழுத்து அறுக்கப்பட்ட அமர்ந்த கோல புத்தர் சிலைகள் சில..

    தொல்பொருள் ஆய்வுக்காக இந்த வாயில் உடைத்துத் திறக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இது மட்டும் மூடப்படாமலேயே விடப்பட்டிருக்க வேண்டும். சில பூட்டுகள் தொங்கின கதவுக்கு வெளியே. உள்ளே போய் விளக்கு வைத்து என்ன இருக்கிறது என்று பார்க்க கொள்ளை ஆசையாக இருந்தது. அதற்கு அனுமதி இல்லை. உள்ளே எவ்வளவு ஆழம் இருக்கும் ? சில வெள்ளைக்கார ஆய்வாளர்கள் இதனுள்ளே போய்ப் பார்த்திருப்பதாகக் குறிப்புகள் உள்ளன.

    ஒரு பெரிய சதுரத் துளை கீழே வரை செல்வதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதில் என்னென்ன இருந்திருக்கும் ? நமது ஆலயங்களில் கருவறை மூர்த்தங்களுக்குக் கீழே நவமணிகளைப் புதைக்கும் வழக்கம் இருக்கிறதே.. அதுபோல் இங்கும் கண்டிப்பாகப் புதைக்கப்பட்டிருக்கும்.       

    இது விஷ்ணு ஆலயம்தான் என்பதற்குரிய தெளிவான தடயமொன்றை நிலைவாயிலின் மேலே காணமுடிந்தது. அதை இந்த அத்தியாயம் எழுதும்போதுதான் என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வோர் அத்தியாயம் எழுதும்போதும் அதற்குரிய படங்களை முழுமையாகப் பார்த்துவிட்டே எழுதுவேன். அது எழுதுவதற்கான மனநிலையை எனக்குத் தரும். மறந்த பல அம்சங்களைப் படங்கள் எனக்கு நினைவுபடுத்தும்.

    அதுபோல, கருவறை புத்தர் சிலைகளைப் பார்த்துக் கொண்டே வந்தபோது வாயில்படி மேலே செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்க்கும்போது நேரில் புலப்படாத சில அம்சங்கள் புலப்படுகின்றன. ஒவ்வொரு வாயிலின் மேலும் பிரபாவளியுடன் கூடிய ஒன்பது உருவங்கள் அமர்ந்த கோலத்தில் உள்ளன. நடுவிலுள்ள உருவத்தை நோக்கி இடப்பக்கம் உள்ள நான்கு உருவங்களும் வலப்பக்கமுள்ள நான்கு உருவங்களும் வணங்கும் நிலையில் அவை வடிக்கப்பட்டுள்ளன.

    ஆக நடுவிலுள்ள உருவம் ஒரு தெய்வ மூர்த்தமாக இருக்க வேண்டும். பக்கத்துக்கு நாலுபேர் வீதம் அந்த இறையுருவை வணங்குவதுபோல் வடிக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்துக்குக் கீழே, சண்டேஸ்வரர் சந்நிதிக்கு அருகிலுள்ள வடக்கு வாயிலின் நிலை மேலே, அஷ்ட மங்கலச் சின்னங்கள் என்னும் எட்டு மங்கலப் பொருட்கள் பொறிக்கப்பட்டிருக்கும். குத்துவிளக்கு, ஆனை, சிம்மம், கவரி, ரிஷபம், கொடிமரம், சங்கநிதி என எட்டுப் பொருட்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். அதுதான் மன்னர் இராஜராஜன் பெருவுடையாரை வணங்க வரும்போது பயன்படுத்தும் நுழைவாயில்.

    பெரிய கோயிலுக்கு வடக்கே இப்போதுள்ள சீனிவாசபுரத்தில்தான் இராஜராஜனின் அரண்மனை இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து மன்னர் வழிபாட்டுக்கு வரும் நுழைவாயிலில் இப்படி மங்கலச் சின்னங்கள் பொறிப்பது வழக்கம் என்று அதைக் காட்டி, குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா சொன்னார். இது மன்னர் வழிபட வரும் வாயில் என்பதால் இங்கு மெய்க்காவலர்கள் பலர் நிறுத்தப்பட்டிருந்ததாக சாசனம் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் குடவாயில் ஐயா எழுதியிருக்கிறார்.

    தஞ்சைக் கோயிலின் வடபுற மதில் சுவரின் வடமேற்கே, இராஜராஜன் வருவதற்கு ஒரு வாயில் இருக்கிறது. அதற்கு அணுக்கன் திருவாயில் என்று பெயர். பிற்காலத்தில் அதன் புழக்கம் நின்றுவிட்டது. அதன் மேல்புத்திலும் மங்கலச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்துவிளக்குகள், பூரணகலசம் ஆகியவை அங்கே காட்டப்பட்டுள்ளன.

    பட உதவி – முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியன்

    குடவாயில் ஐயா அவற்றைக் காட்டினார். அந்த வாயிலில் துளைகள் காணப்படுகின்றன. அந்தத் துளைகளுக்குள் மரச் சட்டங்களைச் செருகி, அதன் மேல் மர வேலைப்பாடு மிக்க அலங்கார வாயில் அமைந்திருக்க வேண்டும்.

    தஞ்சைக் கோயில் உட்புற சுவரோவியங்களில், மாமன்னர் தமது பட்டத்து மகிஷிகளோடு வணங்கும் தில்லை நடராஜர் ஆலய ஓவியத்தில் இதுபோன்ற வாயில்கள் இருந்ததை இன்றும் பார்க்க முடியும். 1980-களின் முற்பகுதியில் என் தந்தை தஞ்சையில் உயர் அதிகாரியாக வேலை பார்த்தபோது அந்த ஓவியங்களைப் பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது அவற்றின் அருமை பெருமை எனக்கு அதிகம் தெரியாது. அதன் பின்னர் பலமுறை முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.

    பட உதவி – தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

    வடமேற்கில் உள்ளதைப் போல் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மதில் சுவரில் மேலும் இரண்டு சிறுவாயில்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளன. அவை தமிழக பாணியில் இல்லாமல், சேரநாட்டு அதாவது கேரள பாணியில் உள்ளதைக் கவனிக்க வேண்டுமென்றார் குடவாயில் ஐயா. அவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக இருந்திருக்க வேண்டும். மரம், காலத்தால் மட்கி அழிந்து விட்டது. அணுக்கன் திருவாயில் இப்போது மரக்கதவுகளால் அடைபட்டுள்ளது. இருந்தாலும் துளைகள் எஞ்சியுள்ளன.

    குறுவாள்கள், அங்குசம், கோடரி, சங்கு, உடுக்கை, சூரியன் போன்றவைற்றையும் எட்டு மங்கலச் சின்னங்களாகப் பொறிக்கும் பழக்கம் சோழர் காலக் கோயில்களில் இருந்ததாகக் கல்வெட்டு ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அதுபோல, அங்கோர் வாட் கருவறை திசைவாயில் மேலே பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் மங்கலச் சின்னங்களாக இருக்கக் கூடுமோ என்று நினைத்தேன். ஆனால் இதில் ஒன்பது சிற்பங்கள் உள்ளன. வடக்கு, மேற்கிலுள்ள உருவங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. சில உருவங்கள் நான்முகன் போல் தெரிகின்றன.

    வடக்கில், நடுவிலுள்ள ஓர் உருவம், தாமரை மலரைக் கையிலேந்திய அஜந்தா குகை ஓவிய பத்மபாணி போலிருக்கிறது. மேற்கே நடுவிலுள்ள ஓர் உருவம் பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டுவது போலப் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கே நிலைவாயிலின் நடுவே இருப்பது சந்தேகமின்றி, பள்ளிகொண்ட பெருமாள்தான். படத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பெருமாள் கிழக்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார். தாயார் மேற்கே காலடியில் காட்டப்பட்டிருக்கிறார். உந்திச் சுழியிலிருந்து மேலே உயரும் கொடியில், பத்ம பீடத்தில் நான்முகம் அமர்ந்திருக்கிறார். பிரம்மனைச் சுற்றிலும் திருவாசி இருக்கிறது. பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமரையைத் தாங்கிய கொடி தவிர மேலும் ஓரிரு கொடிகள் தெரிகின்றன. இடப்பக்கமும் வலப்பக்கமும் வணங்கிய நிலையில் பக்கத்துக்கு நாலு விகிதம் எட்டு உருவங்கள். ஆக, இது மிக முக்கியமான கருவறை நுழைவாயில்.

    திருவரங்கம், சிதம்பரம் இரண்டு ஆலயக் கருவறை மூர்த்தங்களும் தென்திசை நோக்கியே அமைக்கப்பட்டுள்ளன. தென்திசை கூற்றுவன் திசை. ஆகவே, பக்தர்களின் எமபயம் போக்கும் நோக்கில் சீரங்கம் இரங்கநாதரும் சிதம்பரம் நடராஜரும் தென்திசை நோக்குவதாக ஐதீகம். அதே நோக்கம்தான் இந்த ஆலயத்திலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். ஆக, கீழே நாம் பார்த்த விஷ்ணு சிலை இங்கே தெற்கே பார்த்தவாறுதான் நிறுவப்பட்டிருக்கிறது.

    அது நான்கு திசையிலும் தெரியும் வகையில்தான் முதலில் கருவறை நிலைவாயில்கள் அமைக்கப்பட்டனவா அல்லது தொடக்கத்திலேயே தென்திசை மட்டும் திறந்திருக்க, மற்ற மூன்று திசை வாயில்களும் மூடப்பட்டிருந்தனவா என்பது எனக்குத் தெரியவில்லை. இப்போதுள்ள மூன்று திசைவாயில்களைப் பார்த்தால், அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டதைப் போலத்தான் தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும், இது விஷ்ணு ஆலயக் கருவறைதான். அதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

    சின்னப் புடைப்புச் சிற்பம்தான் என்றாலும் அப்பட்டமான கெமர் பாணியில் அமைந்த அழகிய சிற்பம். திருமகள் அப்சரஸ் போல மூன்று கொண்டை உள்ள தலை அலங்காரத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளார். திருமால் ஏன் கிழக்கே தலைவைத்திருக்க வேண்டுமெனப் புரியவில்லை. திருவரங்கத்தில் மேற்கே அல்லவா தலை வைத்திருப்பார் ? அத்துடன் கம்போடிய விஷ்ணு கிடந்த கோலத்திலேயே ஏதோ ஓர் ஆயுதத்தை இடக்கையில் பிடித்து ஓங்கியவாறு காட்டப்பட்டுள்ளார். இது போர்க்களக் காட்சியை நினைவூட்டுகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? நுணுக்கமான சிற்பம். அருகில் சென்று பார்த்தாலோ சக்தி வாய்ந்த கேமராவில் அருகே சென்று படம் எடுத்துப் பெரிதுபடுத்திப் பார்த்தாலோதான் கண்டுபிடிக்க முடியும்.

    அடுத்து, நிறைவாகக் கிழக்குப்புற வாயிலைக் காணச் சென்றோம். வழியில் சில புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. அவை அங்கே இருந்த சிலைகளாகத் தெரியவில்லை. வேறு எங்கிருந்தோ எடுத்து வரப்பட்டுத் தாழ்வாரங்களில் வைக்கப்பட்டிருந்தவை போல் தெரிந்தன. வழக்கம்போலப் பல சிலைகளுக்குத் தலை இல்லை. இனிமேல் உலகின் எந்த மூலையில் புத்தர் சிலையைப் பார்த்தாலும் அதற்குத் தலை இருந்தால் நான் ஆச்சர்யப்பட்டுப் போவேன் என்று நினைக்கிறேன்.

    கிழக்குப்புற வாயில் மற்ற இரண்டு வாயில்களைப் போல் அடைக்கப்பட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாக புத்தர் நின்றிருந்தார். கீழே அமர்ந்த நிலையில், நாலைந்து புத்தர் சிலைகள். அவற்றுள் சில மரச் சிற்பங்கள். நல்ல களையான முகங்கள். அப்பாடா என்றிருந்தது அந்த முகங்களைப் பார்க்கும்போது. ஆனால் இவை கம்போடிய புத்தர் சிலைகளாகத் தெரியவில்லை. தாய்லந்து புத்தரைப் போல் இருந்தது தலை அலங்காரம்.

    கண்கள் மூடி ஊழ்கத்தில் அமர்ந்த கோலத்தில் இல்லை இவை. பத்து வயது பாலகனின் புன்முறுவலோடு அரைக்கண் திறந்து மலர்ச்சியான கோலத்தில் இருந்தன மர புத்தர் சிலைகள். உண்மையில் அந்தச் சிலைகள் எனக்கு இனந்தெரியாத இன்பத்தை அளித்தன என்று சொல்லலாம். பின்னப்பட்டுப் போன சிலைகளும் தூண்களும் பெருகிக் கிடந்த இடத்தில் முழுமையான இந்தச் சிலைகள் ஏதோ ஒரு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.

    அந்த மரச் சிலைகளுக்கு முன்னால், கிடந்த கோலத்தில் ஒரு கல் புத்தர். அதற்கு முன்னாலும் ஊதுபத்திகள், படையல், மெழுகுவர்த்திகள். இந்த வாயிலுடன் ஆலயச் சுற்று முடிவடைகிறது.                     

    இனி கீழே இறங்க வேண்டியதுதான். நியாயப்படி, உலக அதிசயம் அங்கோர் வாட்டைப் பார்த்தாகி விட்டது என்ற நிறைவு இந்த இடத்தில் வர வேண்டும். ஆனால், எங்களுக்கு வரவில்லை.

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

     

  • 13

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகம் எப்படி இருந்திருக்கும் என்று நேரில் பார்க்க ஆசையா ? விமானம் ஏறி கம்போடியாவுக்கு வந்துவிடலாம். காலம் உறைந்து போயிருக்கிறது இங்கே. அங்கோர் வாட்டின் உச்சியில் இருந்து பார்த்தாலும்கூட நவநாகரிக உலகின் எந்தச் சுவடும் நம்முடைய கண்ணில் படுவதில்லை. இது ஒரு முக்கியமான அம்சம் எனத் தோன்றியது எனக்கு. ஆலயத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதி வானம் பார்க்கக் காடாகப் பரந்து விரிந்து கிடக்கிறது.

    நான் இதுவரை பார்த்த வரலாற்றுத் தலங்களில் பெரும்பாலானவை பரபரப்பான ஊருக்குள் இருக்கும். அல்லது அது ஒரு காட்சிப் பொருளாகி விட்டபடியால் அதைச் சுற்றி ஒரு வாழ்க்கை உருவாகி அதன் அங்கமாக நவீன வசதிகளும் உருவாகி விட்டிருக்கும். ஆனால், அங்கோர் வாட் விதிவிலக்கு. மிக நுணுக்கமாகப் பார்த்தால் தவிர மேலோட்டமான பார்வைக்கு வாகனங்களோ மனித சஞ்சாரமோ தெரிவதில்லை.

    இது நமக்கு ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது மனத்துக்குள். எனக்கு மட்டும்தான் இப்படியா என்று தெரியவில்லை. ஆளில்லாத பழைய ஆலயங்களிலும் கோட்டைகளிலும் கூட இப்படிப்பட்ட உணர்வை அடைந்திருக்கிறேன். ஆக்ரா கோட்டைக்கு ஈராயிரமாம் ஆண்டில் போனபோதும் இப்படித்தான் இருந்தது.      மாபெரும் கோட்டை மதில் சுவர்கள் எழுந்து புற உலகைத் துண்டித்து விட்டன. மொகலாய மன்னர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அந்தப் பயணம் உதவியாக இருந்தது.

    பிரமாண்டம் என்றால் என்னவென்பதை உணர வைத்த இடங்கள் இவையெல்லாம். வடகிழக்கு மூலையில் படியேறி அங்கோர் வாட்டின் உச்சிப் பகுதிக்கு வந்தபோது கலவையான உணர்வுகள்.

    இந்தக் கட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டி தேவையற்றவராகிப் போயிருந்தார். எங்களை வியக்க வைக்கும் தகவல் எதுவும் அவரிடம் இல்லை. நிலக் காட்சியின் அழகில் நாங்கள் மூழ்கிப் போயிருந்தோம். இவ்வளவு பெரிய வளாகமும் இந்த உச்சிப் பகுதியை நோக்கித்தான்…. இதற்காகத்தான் என்று நினைக்கும்போது பிரமிப்பு ஏற்பட்டது. ஆனால், கருவறை இருக்க வேண்டிய இடத்தில் மொண்ணையான புத்தர் சிலைகளைப் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது.

    நான்கு பக்கங்களையும் மறித்துச் சுவர் எழுப்பி அவ்வளவு லட்சணமில்லாத புத்தர் சிலைகளை வைத்திருந்தனர். அதிலும் சில புத்தர் சிலைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருந்தன. தலையற்ற முண்டமாக புத்தரின் சிலையைத் தரிசிக்கவே மனம் நடுங்கியது. நல்லவேளை.. இந்தக் கொடுமையை இரண்டாம் சூரியவர்மன் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

    உண்மையில், அங்கோர் வாட்டைக் கட்டிய மன்னர் இரண்டாம் சூரியவர்மன் இந்த ஆலயத்தின் முதற்கட்டப் பணிகளின்போதே மறைந்துவிட்டிருக்க வேண்டுமென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். சூரியவர்மன் 32 வயது வரையிலும்தான் உயிர் வாழ்ந்திருக்கிறார். அவரது காலம், கி.பி 1113-1145 என்கிறது கம்போடியத் தலைநகர் புனோம் பென் அரும்பொருளகத்தில் நாங்கள் வாங்கிய கையேடு. 32 வயது வரை மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதனின் சாதனைதான் இந்த ஆலயம்.

    மலைப்பாக இருந்தது. தாம் உயிரோடு இருக்கும்போதே ஆலயம் முழுமையும் எப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டுக் கட்டத் தொடங்கிய மன்னர் அந்தப் பணிகள் முழுமை பெறும்போது அதைப் பார்க்க உயிரோடு இல்லை. மிகுந்த வேதனை தரக்கூடிய தகவல் இது.

    இந்தக் கட்டுரைக்குத் தேவையான தகவல்களைத் தேடிப் படிக்கும்போதுதான் இது எனக்குத் தெரியவந்தது. எகிப்தியப் பேரரசர்கள், அவர்கள் அரியணை ஏறியதுமே அவர்களுக்கான கல்லறைப் பிரமிடுகளைக் கட்டத் தொடங்கிவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன். அதுபோல், அங்கோர் வாட் சூரியவர்மனின் கல்லறைக் கோயில்தான் என்றால், அவர் அரியணை ஏறியதுமே கட்டட வேலைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.                                   

    சூரியவர்மன் எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார் என்று தெரியவில்லை. 20 வயது என்று வைத்துக் கொண்டால்கூட 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள் பாதி வேலை கூட முடிந்திருக்காது. அப்படியானால், மனக்கண்ணில் மட்டும்தான் மன்னர், முழுமையான ஆலயத்தைப் பார்த்திருக்க முடியும்.

    வடகிழக்கில் ஏறி உள்ளே சென்றபோது பரணி மட்டும்தான் என்னோடு இருந்தார். ராஜூ, நவீன், மகாதேவன் மூவரும் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போய்விட்டார்கள். நாங்கள் இருவரும் படம் எடுத்துக் கொண்டே வந்ததால் பின்தங்கிப் போனோம். மேருவின் கீழிருந்து உள்ளே போய் இடப்பக்கமாகத் திரும்பினால், கருவறையின் வடக்குமுக வாயிலைக் காணமுடியும். அங்கே சயன நிலையில் ஒரு புத்தர் கிடத்தப்பட்டிருந்தார். வாசல் நிலையை அடைத்த மாதிரி நின்ற கோலத்தில் ஒரு புத்தர்.

    பெரிய பெரிய கற்பாளங்களை வைத்து வாசலை அடைத்துவிட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கியிருக்கிறார்கள். சயன புத்தருக்கு முன்னால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.

    கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏற்றப்படுவதுபோன்ற தடிமனான மெழுகுவர்த்தி. பல மணி நேரத்திற்கு நின்று எரியக்கூடியது. வாழைத் தண்டை வெட்டி அடிப்பகுதியாகக் கொண்ட ஓர் அலங்காரம். மேலே வாழை இலையைக் கூம்பு வடிவத்தில் சுருட்டி, பக்கவாட்டில் கதிர்கள் விரிவது போல் இலைகளைச் சுருட்டி விட்டிருந்தனர்.         

             

    அச்சு அசப்பில், அய்யர் வீட்டுத் திருமணங்களில் வைக்கப்படும் பருப்புத் தேங்காயைப் போலவே இருந்தது. பருப்புத் தேங்காய் பெரும்பாலும் மஞ்சள் ஜிகினா தாளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இது பச்சை வாழை இலை. அவ்வளவுதான் வித்தியாசம். அவை தவிர, வெள்ளை நுரைப்பஞ்சுத் தட்டில் வாழைப் பழங்களும் லைச்சீ பழங்களும் படைக்கப்பட்டிருந்தன. ஒரு பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர். அது படைக்கப்பட்ட தீர்த்தமா இல்லை சுற்றுப் பயணிகள் விட்டுச் சென்றதா தெரியவில்லை.

    புத்தரின் மேல் போர்த்தப்பட்டிருந்த ஜிகினாத் துணியும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மாலையும் அந்தப் பழமையான சூழலுக்குப் பொருந்தவே இல்லை. அதன் செயற்கைத் தன்மை துருத்திக் கொண்டு தெரிந்தது. நின்ற கோலத்திலிருந்த புத்தர் மீது ஏதோ ஒருவித மஞ்சள் பூச்சு இலேசாகத் தெரிந்தது. தங்க முலாமா என்று தெரியவில்லை. இருக்க முடியாது. ஆலயம் கைவிடப்பட்ட காலத்தில் கண்டிப்பாக அது சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டிருக்கும்.

    வடக்கு வாயிலைப் பார்த்துவிட்டு இப்போது மேற்குப்புற வாயிலுக்கு வந்தோம். இங்கே குட்டி குட்டியாய்க் கழுத்து அறுக்கப்பட்ட நாலைந்து புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. பின்னால் அதேபோல நின்ற கோலத்தில் பெரிய புத்தர். இங்கும் மெழுகுவர்த்திகள்.     

    ஆனால் இந்த மெழுகுவர்த்திகள் சின்னவை. வரிசையாக ஒரு வாழை மட்டையில் செருகப்பட்டிருந்தன. இந்த பிரமாண்ட பேராலயத்தின் நடுவே இருக்கக் கொஞ்சமும் தகுதியற்ற உருவச் சிலைகள். கழுத்து அறுபட்ட புத்தர் சிலைகள் என்றால் மிகப் பெரும்பாலும் களையான முகம் கொண்ட பழைய புத்தர் சிலைகளாகத்தான் இருக்க வேண்டும். முகம்தான் இல்லை. மற்ற உடல் பகுதிகளையாவது பார்க்கலாம் என்றால், புத்தரின் வலப்புறத் தோள்பட்டை மட்டும்தான் தெரிகிறது. மற்ற பகுதிகளை வழக்கம்போல ஜிகினாத் துணியால் மூடிவிட்டனர். ஐயோ.. கடவுளே !

    இந்த மேற்குப்புற வாயிலுக்கு எதிரில்தான் அங்கோர் வாட் வளாகத்தின் முக்கிய நுழைவாயில் வருகிறது. அது நீண்டு கிடப்பதைப் பார்க்க புத்தருக்கு இப்போது முடியாது. தலை இல்லையே !

    கருவறைக்கு முன்னால் உள்ள தாழ்வாரம் 20, 30 அடி நீண்டு பெரிய சுற்றுத் தாழ்வாரத்தோடு இணைந்து கொள்கிறது. ஓங்கி மழை பெய்தால், சாரல் அடிக்கும் அளவுக்கு அகலம் குறைந்த தாழ்வாரம். எந்தத் திக்கில் திரும்பினாலும் பழமை. பசுமை.. நம் வாழ்வில் எளிதில் கிடைக்காத காட்சி இது. வரலாற்றுப் பிரியர்களால் பிரிந்து வர இயலாத இடம்.

    சுற்றிலுமுள்ள கற்கள் பேச முடிந்தால் எப்படி இருக்கும் ? என்னென்ன கதை சொல்லும் நம்மிடம் ? காலம் கற்களை மழுங்கச் செய்துவிட்டிருக்கிறது. மழையும் தன்பங்குக்கு மணற்கல் சிற்பங்களைக் கரைத்துவிட்டிருக்கிறது. ஆனாலும் எஞ்சியிருக்கும் சிற்பங்கள் கல்லை விட்டு வெளியே வரத் துடிப்பதைப் போலிருந்தன.

    ஒவ்வோர் இடத்தையும் கண்களால் அள்ளி அள்ளி விழுங்கினோம் நானும் பரணியும். இனியொரு முறை இதைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கம் எழுந்து கொண்டே வந்தது. “இதுக்கு ஒரு நாள்லாம் பத்தாதுண்ணா” என்று பரணி புலம்பிக் கொண்டே வந்தார். அதிலென்ன சந்தேகம் ? ஒரு மாதம் கூடப் போதாதுதான். படப்போட திங்கிற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டாக் காணுமா ? ஹும்.

    இப்போது நாங்கள் மேற்கிலிருந்து தென்திசை வாயிலுக்கு வந்திருந்தோம். ஆலய முகப்பில் இருந்த விஷ்ணு சிலை இங்கே இருந்தது உண்மையானால், அந்த விஷ்ணுவின் தாழ்ந்த கண்மலர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கே விரியும் இந்தக் காட்சியைத்தான் கண்டிருக்க வேண்டும். இங்கே ஓர் ஆச்சர்யம் எங்களுக்குக் காத்திருந்தது. இந்தக் கருவறை வாயில் மற்ற வாயில்களைப் போல் மூடப்படாமல் கதவு வைத்து சாத்தப்பட்டிருந்தது. முன்னால் புடைப்புச் சிற்பமாக இல்லாமல் முப்பரிமாணத்தில் புத்தர். நின்றகோலம். அதற்குக் கீழே கழுத்து அறுக்கப்பட்ட அமர்ந்த கோல புத்தர் சிலைகள் சில..

    தொல்பொருள் ஆய்வுக்காக இந்த வாயில் உடைத்துத் திறக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இது மட்டும் மூடப்படாமலேயே விடப்பட்டிருக்க வேண்டும். சில பூட்டுகள் தொங்கின கதவுக்கு வெளியே. உள்ளே போய் விளக்கு வைத்து என்ன இருக்கிறது என்று பார்க்க கொள்ளை ஆசையாக இருந்தது. அதற்கு அனுமதி இல்லை. உள்ளே எவ்வளவு ஆழம் இருக்கும் ? சில வெள்ளைக்கார ஆய்வாளர்கள் இதனுள்ளே போய்ப் பார்த்திருப்பதாகக் குறிப்புகள் உள்ளன.

    ஒரு பெரிய சதுரத் துளை கீழே வரை செல்வதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதில் என்னென்ன இருந்திருக்கும் ? நமது ஆலயங்களில் கருவறை மூர்த்தங்களுக்குக் கீழே நவமணிகளைப் புதைக்கும் வழக்கம் இருக்கிறதே.. அதுபோல் இங்கும் கண்டிப்பாகப் புதைக்கப்பட்டிருக்கும்.       

    இது விஷ்ணு ஆலயம்தான் என்பதற்குரிய தெளிவான தடயமொன்றை நிலைவாயிலின் மேலே காணமுடிந்தது. அதை இந்த அத்தியாயம் எழுதும்போதுதான் என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வோர் அத்தியாயம் எழுதும்போதும் அதற்குரிய படங்களை முழுமையாகப் பார்த்துவிட்டே எழுதுவேன். அது எழுதுவதற்கான மனநிலையை எனக்குத் தரும். மறந்த பல அம்சங்களைப் படங்கள் எனக்கு நினைவுபடுத்தும்.

    அதுபோல, கருவறை புத்தர் சிலைகளைப் பார்த்துக் கொண்டே வந்தபோது வாயில்படி மேலே செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்க்கும்போது நேரில் புலப்படாத சில அம்சங்கள் புலப்படுகின்றன. ஒவ்வொரு வாயிலின் மேலும் பிரபாவளியுடன் கூடிய ஒன்பது உருவங்கள் அமர்ந்த கோலத்தில் உள்ளன. நடுவிலுள்ள உருவத்தை நோக்கி இடப்பக்கம் உள்ள நான்கு உருவங்களும் வலப்பக்கமுள்ள நான்கு உருவங்களும் வணங்கும் நிலையில் அவை வடிக்கப்பட்டுள்ளன.

    ஆக நடுவிலுள்ள உருவம் ஒரு தெய்வ மூர்த்தமாக இருக்க வேண்டும். பக்கத்துக்கு நாலுபேர் வீதம் அந்த இறையுருவை வணங்குவதுபோல் வடிக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்துக்குக் கீழே, சண்டேஸ்வரர் சந்நிதிக்கு அருகிலுள்ள வடக்கு வாயிலின் நிலை மேலே, அஷ்ட மங்கலச் சின்னங்கள் என்னும் எட்டு மங்கலப் பொருட்கள் பொறிக்கப்பட்டிருக்கும். குத்துவிளக்கு, ஆனை, சிம்மம், கவரி, ரிஷபம், கொடிமரம், சங்கநிதி என எட்டுப் பொருட்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். அதுதான் மன்னர் இராஜராஜன் பெருவுடையாரை வணங்க வரும்போது பயன்படுத்தும் நுழைவாயில்.

    பெரிய கோயிலுக்கு வடக்கே இப்போதுள்ள சீனிவாசபுரத்தில்தான் இராஜராஜனின் அரண்மனை இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து மன்னர் வழிபாட்டுக்கு வரும் நுழைவாயிலில் இப்படி மங்கலச் சின்னங்கள் பொறிப்பது வழக்கம் என்று அதைக் காட்டி, குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா சொன்னார். இது மன்னர் வழிபட வரும் வாயில் என்பதால் இங்கு மெய்க்காவலர்கள் பலர் நிறுத்தப்பட்டிருந்ததாக சாசனம் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் குடவாயில் ஐயா எழுதியிருக்கிறார்.

    தஞ்சைக் கோயிலின் வடபுற மதில் சுவரின் வடமேற்கே, இராஜராஜன் வருவதற்கு ஒரு வாயில் இருக்கிறது. அதற்கு அணுக்கன் திருவாயில் என்று பெயர். பிற்காலத்தில் அதன் புழக்கம் நின்றுவிட்டது. அதன் மேல்புத்திலும் மங்கலச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்துவிளக்குகள், பூரணகலசம் ஆகியவை அங்கே காட்டப்பட்டுள்ளன.

    படம் நன்றி – முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியம்

    குடவாயில் ஐயா அவற்றைக் காட்டினார். அந்த வாயிலில் துளைகள் காணப்படுகின்றன. அந்தத் துளைகளுக்குள் மரச் சட்டங்களைச் செருகி, அதன் மேல் மர வேலைப்பாடு மிக்க அலங்கார வாயில் அமைந்திருக்க வேண்டும்.

    தஞ்சைக் கோயில் உட்புற சுவரோவியங்களில், மாமன்னர் தமது பட்டத்து மகிஷிகளோடு வணங்கும் தில்லை நடராஜர் ஆலய ஓவியத்தில் இதுபோன்ற வாயில்கள் இருந்ததை இன்றும் பார்க்க முடியும். 1980-களின் முற்பகுதியில் என் தந்தை தஞ்சையில் உயர் அதிகாரியாக வேலை பார்த்தபோது அந்த ஓவியங்களைப் பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது அவற்றின் அருமை பெருமை எனக்கு அதிகம் தெரியாது. அதன் பின்னர் பலமுறை முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.

    படம் நன்றி – தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

    வடமேற்கில் உள்ளதைப் போல் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மதில் சுவரில் மேலும் இரண்டு சிறுவாயில்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளன. அவை தமிழக பாணியில் இல்லாமல், சேரநாட்டு அதாவது கேரள பாணியில் உள்ளதைக் கவனிக்க வேண்டுமென்றார் குடவாயில் ஐயா. அவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக இருந்திருக்க வேண்டும். மரம், காலத்தால் மட்கி அழிந்து விட்டது. அணுக்கன் திருவாயில் இப்போது மரக்கதவுகளால் அடைபட்டுள்ளது. இருந்தாலும் துளைகள் எஞ்சியுள்ளன.

    குறுவாள்கள், அங்குசம், கோடரி, சங்கு, உடுக்கை, சூரியன் போன்றவைற்றையும் எட்டு மங்கலச் சின்னங்களாகப் பொறிக்கும் பழக்கம் சோழர் காலக் கோயில்களில் இருந்ததாகக் கல்வெட்டு ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அதுபோல, அங்கோர் வாட் கருவறை திசைவாயில் மேலே பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் மங்கலச் சின்னங்களாக இருக்கக் கூடுமோ என்று நினைத்தேன். ஆனால் இதில் ஒன்பது சிற்பங்கள் உள்ளன. வடக்கு, மேற்கிலுள்ள உருவங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. சில உருவங்கள் நான்முகன் போல் தெரிகின்றன.

    வடக்கில், நடுவிலுள்ள ஓர் உருவம், தாமரை மலரைக் கையிலேந்திய அஜந்தா குகை ஓவிய பத்மபாணி போலிருக்கிறது. மேற்கே நடுவிலுள்ள ஓர் உருவம் பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டுவது போலப் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கே நிலைவாயிலின் நடுவே இருப்பது சந்தேகமின்றி, பள்ளிகொண்ட பெருமாள்தான். படத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பெருமாள் கிழக்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார். தாயார் மேற்கே காலடியில் காட்டப்பட்டிருக்கிறார். உந்திச் சுழியிலிருந்து மேலே உயரும் கொடியில், பத்ம பீடத்தில் நான்முகம் அமர்ந்திருக்கிறார். பிரம்மனைச் சுற்றிலும் திருவாசி இருக்கிறது. பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமரையைத் தாங்கிய கொடி தவிர மேலும் ஓரிரு கொடிகள் தெரிகின்றன. இடப்பக்கமும் வலப்பக்கமும் வணங்கிய நிலையில் பக்கத்துக்கு நாலு விகிதம் எட்டு உருவங்கள். ஆக, இது மிக முக்கியமான கருவறை நுழைவாயில்.

    திருவரங்கம், சிதம்பரம் இரண்டு ஆலயக் கருவறை மூர்த்தங்களும் தென்திசை நோக்கியே அமைக்கப்பட்டுள்ளன. தென்திசை கூற்றுவன் திசை. ஆகவே, பக்தர்களின் எமபயம் போக்கும் நோக்கில் சீரங்கம் இரங்கநாதரும் சிதம்பரம் நடராஜரும் தென்திசை நோக்குவதாக ஐதீகம். அதே நோக்கம்தான் இந்த ஆலயத்திலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். ஆக, கீழே நாம் பார்த்த விஷ்ணு சிலை இங்கே தெற்கே பார்த்தவாறுதான் நிறுவப்பட்டிருக்கிறது.

    அது நான்கு திசையிலும் தெரியும் வகையில்தான் முதலில் கருவறை நிலைவாயில்கள் அமைக்கப்பட்டனவா அல்லது தொடக்கத்திலேயே தென்திசை மட்டும் திறந்திருக்க, மற்ற மூன்று திசை வாயில்களும் மூடப்பட்டிருந்தனவா என்பது எனக்குத் தெரியவில்லை. இப்போதுள்ள மூன்று திசைவாயில்களைப் பார்த்தால், அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டதைப் போலத்தான் தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும், இது விஷ்ணு ஆலயக் கருவறைதான். அதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

    சின்னப் புடைப்புச் சிற்பம்தான் என்றாலும் அப்பட்டமான கெமர் பாணியில் அமைந்த அழகிய சிற்பம். திருமகள் அப்சரஸ் போல மூன்று கொண்டை உள்ள தலை அலங்காரத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளார். திருமால் ஏன் கிழக்கே தலைவைத்திருக்க வேண்டுமெனப் புரியவில்லை. திருவரங்கத்தில் மேற்கே அல்லவா தலை வைத்திருப்பார் ? அத்துடன் கம்போடிய விஷ்ணு கிடந்த கோலத்திலேயே ஏதோ ஓர் ஆயுதத்தை இடக்கையில் பிடித்து ஓங்கியவாறு காட்டப்பட்டுள்ளார். இது போர்க்களக் காட்சியை நினைவூட்டுகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? நுணுக்கமான சிற்பம். அருகில் சென்று பார்த்தாலோ சக்தி வாய்ந்த கேமராவில் அருகே சென்று படம் எடுத்துப் பெரிதுபடுத்திப் பார்த்தாலோதான் கண்டுபிடிக்க முடியும்.

    அடுத்து, நிறைவாகக் கிழக்குப்புற வாயிலைக் காணச் சென்றோம். வழியில் சில புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. அவை அங்கே இருந்த சிலைகளாகத் தெரியவில்லை. வேறு எங்கிருந்தோ எடுத்து வரப்பட்டுத் தாழ்வாரங்களில் வைக்கப்பட்டிருந்தவை போல் தெரிந்தன. வழக்கம்போலப் பல சிலைகளுக்குத் தலை இல்லை. இனிமேல் உலகின் எந்த மூலையில் புத்தர் சிலையைப் பார்த்தாலும் அதற்குத் தலை இருந்தால் நான் ஆச்சர்யப்பட்டுப் போவேன் என்று நினைக்கிறேன்.

    கிழக்குப்புற வாயில் மற்ற இரண்டு வாயில்களைப் போல் அடைக்கப்பட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாக புத்தர் நின்றிருந்தார். கீழே அமர்ந்த நிலையில், நாலைந்து புத்தர் சிலைகள். அவற்றுள் சில மரச் சிற்பங்கள். நல்ல களையான முகங்கள். அப்பாடா என்றிருந்தது அந்த முகங்களைப் பார்க்கும்போது. ஆனால் இவை கம்போடிய புத்தர் சிலைகளாகத் தெரியவில்லை. தாய்லந்து புத்தரைப் போல் இருந்தது தலை அலங்காரம்.

    கண்கள் மூடி ஊழ்கத்தில் அமர்ந்த கோலத்தில் இல்லை இவை. பத்து வயது பாலகனின் புன்முறுவலோடு அரைக்கண் திறந்து மலர்ச்சியான கோலத்தில் இருந்தன மர புத்தர் சிலைகள். உண்மையில் அந்தச் சிலைகள் எனக்கு இனந்தெரியாத இன்பத்தை அளித்தன என்று சொல்லலாம். பின்னப்பட்டுப் போன சிலைகளும் தூண்களும் பெருகிக் கிடந்த இடத்தில் முழுமையான இந்தச் சிலைகள் ஏதோ ஒரு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.

    அந்த மரச் சிலைகளுக்கு முன்னால், கிடந்த கோலத்தில் ஒரு கல் புத்தர். அதற்கு முன்னாலும் ஊதுபத்திகள், படையல், மெழுகுவர்த்திகள். இந்த வாயிலுடன் ஆலயச் சுற்று முடிவடைகிறது.                     

    இனி கீழே இறங்க வேண்டியதுதான். நியாயப்படி, உலக அதிசயம் அங்கோர் வாட்டைப் பார்த்தாகி விட்டது என்ற நிறைவு இந்த இடத்தில் வர வேண்டும். ஆனால், எங்களுக்கு வரவில்லை.

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

     

  • 2033

    சபரிமலையில் படிபூஜை நடத்த, 2033 வரை முன்பதிவு முடிந்து விட்டதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இனி படி பூஜைக்கு முன்பதிவு செய்ய, 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
    சபரிமலையில் பூஜையானது, 18 படிகளிலும் குடியமர்த்தப்பட்டுள்ள மலை தேவதைகளை திருப்திபடுத்தும் வகையில் நடக்கிறது.
    அனைத்து படிகளிலும் பட்டு விரித்து அதில் தேங்காய், பூக்கள் வைக்கப்பட்டு, குத்து விளக்கேற்றி வைத்த பின், தந்திரி, ஒருமணி நேரம் பூஜை நடத்துவார்.
    தொடர்ந்து அனைத்து படிகளிலும் நிவேத்யம் நடைபெறும். இறுதியில் தீபாராதனை நடத்தி, பூஜை நிறைவு பெறும். இது முடிந்ததும் தந்திரிகளும், பூஜாரிகளும் ஸ்ரீகோவிலுக்குள் செல்வர்.
    படிபூஜைக்கு இந்த ஆண்டு முதல், தேவசம்போர்டு நிர்ணயித்துள்ள கட்டணம், 75 ஆயிரம் ரூபாய். சபரிமலையில் நடைபெறும் பூஜைகளில் அதிக கட்டணம் இதுவாகும். இதற்கான முன்பதிவு, 2033-ம் ஆண்டு வரை முடிந்து விட்டது. இனி, 2034-க்கு தான் முன்பதிவு செய்ய முடியும். மண்டல மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், 60 நாட்களில் படிபூஜை கிடையாது. மாத பூஜை காலத்தில் மட்டுமே இந்த பூஜை நடைபெறுகிறது.
    இதேபோல உதயாஸ்தமன பூஜையின் முன்பதிவு, 2023-ம் ஆண்டு வரை நிறைவு பெற்றுள்ளது.

  • 2016-12-02-14-30-23

    சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்கள், பம்பை நதியில் இறங்கி குளிக்க வேண்டாம், என திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
    தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், பல்வேறு கோவில்களுக்கும் செல்வதால் அவர்களுடன் குடும்ப பெண்களும் வருவதாகவும்,
    பம்பை வரும் இந்த பெண்கள், பம்பை ஆற்றில் குளிப்பதாகவும், இவ்வாறு குளிப்பது தவறு எனறும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    விரதமிருந்து வரும் பக்தர்கள் குளிக்கும் இடத்தில் பெண்களும் குளிப்பது ஆசாரங்களுக்கு எதிரானது என்பதால், பக்தர்களுடன் வரும் பெண்கள் இதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • 2016-12-02-14-03-36

    பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவாக திருத்தணி முருகன் கோயிலில் இ-உண்டியல் முறையை கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
    முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
    பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதலை, அங்குள்ள உண்டியல்களில் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
    இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் மலைக்கோயிலில் இ – உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது.
    இந்த இயந்திரம் மூலம் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை எளிதாகச் செலுத்தலாம். இத்திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

  • 2016-12-01-15-29-43

    பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழனி முருகன் கோயில்.
    இங்கு ஆண்டு தோறும் திருக் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா டிசம்பர் 6-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
    தீப திருவிழா நிகழ்ச்சிகள்…
    டிசம்பர் 6 –
    மாலையில், சாயரட்சை பூஜையில் காப்புகட்டு
    டிசம்பர் 7 –
    மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனையும், 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனையும், 6.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 7.30 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.
    டிசம்பர் 8 முதல் 11 –
    மாலையில் நடக்கும் சாயரட்சை பூஜையின் போது சிறப்பு வழிபாடு, பூஜைகளும் நடைபெறுகிறது. 6-ம் திருநாளில் நடக்கும் சாயரட்சை பூஜையின் போது, யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டுவரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.
    டிசம்பர் 12 –
    திருக்கார்த்திகை. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறப்பும், உடன் விஸ்வரூபதரிசனமும், நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின்னர் சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறுகிறது. இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திக்குகளிலும் தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் முன்புறம் உள்ள தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும், திருஆவினன் குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில்களில் திருக் கார்த்திகை தீபம் ஏற்றி சொக் கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.