2016-12-02-14-30-23

சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்கள், பம்பை நதியில் இறங்கி குளிக்க வேண்டாம், என திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், பல்வேறு கோவில்களுக்கும் செல்வதால் அவர்களுடன் குடும்ப பெண்களும் வருவதாகவும்,
பம்பை வரும் இந்த பெண்கள், பம்பை ஆற்றில் குளிப்பதாகவும், இவ்வாறு குளிப்பது தவறு எனறும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விரதமிருந்து வரும் பக்தர்கள் குளிக்கும் இடத்தில் பெண்களும் குளிப்பது ஆசாரங்களுக்கு எதிரானது என்பதால், பக்தர்களுடன் வரும் பெண்கள் இதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *