Author: லிங்கேஷ்

  • April 23 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – லாபம்
    ரிஷபம்         – பயம்
    மிதுனம்     – பரிவு
    கடகம்         –  சுபம்
    சிம்மம்         –   நன்மை   
    கன்னி         –    கவலை
    துலாம்         –     செலவு  
    விருச்சிகம்     –  அன்பு
    தனுசு         –     தாமதம்
    மகரம்         –    வரவு
    கும்பம்         –      சுகம்
    மீனம்         –      போட்டி
    சந்திராஷ்டமம்    –        அவிட்டம், சதயம்

  • thirupathy gold car

    திருப்பதி ஏழுமலையான் கோயில்  வருடாந்திர   வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை  மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன்  தங்க தேரில் திருமாட வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்ல வலம் வந்து அருள் பாலித்தார்.

    தங்க ரதம்  வீதி உலாவில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்த கோவிந்தா மனம் உருகி வேண்டி கற்பூர ஆரத்தி எடுத்து தங்க தேரில் வலம் வந்த சுவாமியை வழிபாடு செய்தனர். தங்க தேரில்  தரிசிப்பதன் மூலம் லட்சுமி தேவி அருள் செல்வம், இன்பம், ஆசீர்வாதம், அனைத்து தானியங்கள் மற்றும் ஏழுமலையானின்  அருள் கிடைக்கும்  என்று பக்தர்கள் நம்பிக்கை.

    இந்நிகழ்ச்சியில் இ.ஓ. ஏ.வி.தர்மரெட்டி தம்பதி, கோயில் துணை இ.ஓ. லோகநாதம், விஜிஓ நந்த கிஷோர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இன்று மதியம்  கோயிலுக்கு பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் 2 மணிக்கு பால்,தயிர், இளநீர், மஞ்சள், உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

  • April 22 2024 Rasipalan

    ஏப்ரல் 22 – இன்றைய ராசிபலன்….
    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – சினம்
    ரிஷபம்         – திறமை  
    மிதுனம்     – உறுதி
    கடகம்         –  கோபம்
    சிம்மம்         –   தனம்  
    கன்னி         –    பயம்
    துலாம்         –     இன்பம்
    விருச்சிகம்     –  போட்டி
    தனுசு         –     பெருமை
    மகரம்         –    தாமதம்
    கும்பம்         –      நற்சொல்
    மீனம்         –      வீம்பு
    சந்திராஷ்டமம்    –        திருவோணம், அவிட்டம்

  • April 22 2024 madurai meenatchi car fest

    ஏப்ரல் 22 – மதுரை மீனாட்சி தேர்…
    குரோதி வருடம் – சித்திரை – 9
    ஏப் 22, 2024
    திங்கள்
    மதுரை மீனாட்சி,
    கடையம்,
    சங்கரன்கோவில்,
    தூத்துக்குடி சிவன் தேர்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.30 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 4.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  திரையோதசி அ.கா 2.29
    நட்சத்திரம் :  அஸ்தம் இ 8.50
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • shree atchiswarar koil car festival

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்ட விழா நடைபெற்றது.

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் நால்வரால்  பாடல் பெற்ற சைவ திருத்தலமான ஸ்ரீ இளங்கிலி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆச்சி ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் விழா நடைபெறும். கடந்த தமிழ் புத்தாண்டு அன்று கொடியேற்றமும் மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவையும் 5-ம் நாள் திருக்கல்யாண உற்சவம் 7-வது நாளான திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    இன்று காலை 8:00 மணிக்கு தேரில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளினர். அதன் பின்னர் பக்தர்கள் சிவ சிவ என கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இத்திருத்தேர் நான்கு மாத  வீதிகளிலும் வலம் வந்தது. இந்நிகழ்வில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி மற்றும் உள்ளூர் வெளியூரிலிருந்து ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • thirumangalam meenatchi thirukalyanam

    மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவத்திற்கு திருமாங்கல்யம் செய்து தந்த திருமங்கலத்தில் மீனாட்சி – சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    600 ஆண்டுகளுக்கு மேல் பழம்பெருமை வாய்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி – சொக்கநாதர் ஆலயத்தில் இன்று மீனாட்சி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மதுரையில் நடைபெறும் மீனாட்சி அம்மன் கல்யாண வைபோகத்திற்கு திருமங்கலத்தில் இருந்துதான்  திருமாங்கல்யம் செய்து கொடுக்கப்பட்டதாக வரலாறு உள்ளது அதனால்யே இந்த ஊருக்கு திருமாங்கல்யபுரம் என்ற பெயர் வந்ததாகவும் இது நாளடைவில் திருமங்கலம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    மீனாட்சி அம்மன் கல்யாண வைபோகத்திற்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்த ஊர் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் அதே வேளையில் இத்திருக்கோவிலிலும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சொக்கநாதர் – பிரியாவிடை மீனாட்சி அம்மன்,பவளக் கனிவாய் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

    இதனைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சொக்கநாதர் மீனாட்சிக்கு பட்டாடை உடுத்தி  கோவில் சிவாச்சாரியார்கள் சொக்கநாதர் – மீனாட்சியாக மாலை மாற்றும் வைபவமும் அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க சொக்கநாதர் – மீனாட்சிக்கு திருமாங்கல்யம் சூட்டினர். இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.சொக்கநாதர் – மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தையொட்டி சுமங்கலி பெண்கள் புதிதாக திருமாங்கல்ய கயிறை மாற்றிக் கொண்டனர்.

    இந்த திருமண வைபவத்தை காண திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி, கோவில் சிவாச்சாரியார் சங்கரநாராயண பட்டர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  • Raja kuberar koil kumbabishegam

    காஞ்சிபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள குபேரப்பட்டிணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராஜகுபேரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சிவபெருமானிடமிருந்து செல்வத்தின் அதிபதியாக வரம் பெற்றவர் ஸ்ரீராஜகுபேரர். செல்வங்களை வாரி வழங்கக்கூடிய சக்தி வாய்ந்த இவருக்கு காஞ்சிபுரம் குபேரப்பட்டிணத்தில் புதியதாக கோயில் கட்டப்பட்டிருந்தது.இக்கோவிலில்  ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகமும்,இதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன.

    கும்பாபிஷேகத்தையொட்டி-3 யாககுண்டங்கள்,151 கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சென்னை வடபழனி கோயில் அர்ச்சகர் சௌந்தர்ராஜன் தலைமையிலான 11 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினார்கள். யாகசாலை பூஜைகள் நேற்று  மாலையில் தொடங்கியது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் சுவாமிகள்  தலைமையிலான விழா குழுவினர் செய்து இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை புரிந்தமையால் விழா குழுவினரால் ஏற்பாட்டில் அன்னதானங்கள் வழங்கப்பட்டு சுற்று வட்டார ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராஜ குபேரர் அருள் பெற்று அன்னதானம் பெற்று சென்றனர்.

  • April 21 2024 Subamuhurthanaal

    ஏப்ரல் 21 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    குரோதி வருடம் – சித்திரை – 8
    ஏப் 21, 2024
    ஞாயிறு
    பிரதோஷம்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    மகாவீர் ஜெயந்தி, மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  துவாதசி அ.கா 12.30
    நட்சத்திரம் :  உத்திரம் மா 6.23
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் : உத்திராடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • April 21 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – உறுதி
    ரிஷபம்         – நன்மை
    மிதுனம்     – நிறைவு
    கடகம்         –  தனம்
    சிம்மம்         –   கோபம்
    கன்னி         –    பயம்
    துலாம்         –     இன்பம்
    விருச்சிகம்     –  போட்டி
    தனுசு         –     பெருமை
    மகரம்         –    செலவு
    கும்பம்         –      சுபம்
    மீனம்         –      வெற்றி
    சந்திராஷ்டமம்    –        உத்திராடம், திருவோணம்

  • Thirupathy samyuktha

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபல திரைப்பட நடிகை சம்யுக்தா மேனன்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல திரைப்பட கதாநாயகி சம்யுக்தா மேனன்  சுவாமி தரிசனம் செய்தனர்.  இன்று விஐபி தரிசனத்தின் மூலம் திரைப்பட நாயகி சம்யுக்தா மேனன்  சுவாமி தரிசனத்தில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

    தரிசனத்திற்குப் பின் ஆலய ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேதசிர்வாதம் வழங்கினர்.  கோயில் நிர்வாகிகள்  தீர்த்தப்பிரசாதம் வழங்கி பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர்   தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த நடிகை இடம் பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்,