Author: cmsadmin

  • மலை உச்சியில் பத்ரகாளி!

    தெலுங்கானா மாநிலம், தட்கமல்லா கிராமம், வாரங்கல் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி தேவி திருக்கோவில் உள்ளது. ஏரிக்கரையின் ஓரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலானது, கி.பி 625 இல் சாளுக்கிய மன்னர்களின் ஆட்சியின் போது கட்டப்பட்டதாக தெரிகிறது. இங்கு வழிபாட்டிற்குரிய தெய்வமான  அன்னை ஸ்ரீ பத்ரகாளி தேவி,  அமர்ந்த நிலையில் எட்டு கரங்களுடன்' ஒவ்வொரு கரத்திலும், ஒரு ஆயுதத்தை ஏந்தியவாறு' சுமார் 2.7 மீட்டர் உயரத்தில் காட்சி அளிக்கிறாள்.

    எதிரே சிம்ம வாகனமும், சிவபெருமான்,  ஹனுமான், விநாயகர், சுப்பிரமணிய சுவாமி மற்றும் நவகிரக சன்னதியும் உள்புறத்தில் அமைந்துள்ளது, வெளிப்புறத்தில் விக்னேஸ்வரர் அருள் பாவிக்கிறார். காகதீய மன்னர்களின் குலதெய்வமான பத்ரகாளி தேவி மிகவும், சக்தி வாய்ந்தவள் என நம்பப்படுகிறது.

    ஆண்டுதோறும், ஏப்ரல் அல்லது மே மாதம் பிரம்ம உற்சவம், ஆகஸ்ட்,- செப்டம்பர் மாதம், வசந்த நவராத்திரி, ஷாகம்பரி உற்சவம் மற்றும் சரண் நவராத்திரி போன்ற முக்கிய விழாக்களும் இங்கு நடைபெறுகிறது. வாரங்கல் பத்ரகாளி தேவியை, காலை 5:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை. மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • நிறைமாத கர்ப்பிணியாக காட்சி தரும் அம்பிகை

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் உள்ளது. சக்தியின் வடிவமான அங்காள பரமேஸ்வரி, நிறைமாத கர்ப்பிணி பெண் போன்று பெரிய புற்றின் தோற்றத்தை எடுத்ததாக நம்பப்படுகிறது. இங்கு முக்கிய வழிபாடு தெய்வமாக   பூங்காவனத்து அம்மன் என அழைக்கப்படுகிறாள். பிரசவ நிலையில் காணப்படும்.

    ஒரு பெண்ணை போன்று வாயைத் திறந்து சைன கோலத்தில் சுயம்பு புற்றின் வடிவத்தில் அம்பிகையின் தோற்றம் அமைந்துள்ளது. பொதுவாக அம்மன் ஆலயத்தில் சிம்மம் காணப்படும், ஆனால் இங்கு கருவறையில் லிங்க வடிவில் சிவபெருமான் அருள் பாவிப்பதால், சிங்கத்திற்கு பதிலாக நந்தி தேவர் காட்சியளிக்கிறார். இங்கு இது அபூர்வமாக கருதப்படுகிறது.

    விநாயகர், நடராஜன், மதுரை வீரன் , சுப்பிரமணியர் , தட்சிணாமூர்த்தி, தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆகியோரும் சன்னதி கொண்டுள்ளனர். தல விருச்சகம் வேப்பமரம், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு வடிவான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை பக்தியுடன் வழிபட்டால், பெண்களுக்கு திருமணம், குழந்தை பேரு, ஆண்களுக்கு வேலைவாய்ப்பு, சுயதொழில் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • திருமணத்தடை நீக்கும்,  ‘கல்யாண சாஸ்தா திருக்கோவில்” !  

    சபரிமலை சுவாமி ஐயப்பன் திருமணம் ஆகாதவர் என்பதால்' அவரை கன்னிசாமி என பக்தர்கள் அன்போடு, அழைக்கின்றனர் சுவாமி ஐயப்பன் பல்வேறு கோவில்களில், இருந்தாலும் அவை அனைத்திலும்  ஐயப்பன் அமர்ந்த நிலையில் தனியாகத்தான் காட்சியளிப்பார், ஆனால் தம்பதி சமேதராக சுவாமியை ஐயப்பன் காட்சியளிக்கும் திருக்கோவிலானது எங்கு உள்ளது தெரியுமா ? வாருங்கள் சரண கோஷத்துடன் அவனை தரிசிக்கலாம்.
    தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் தமிழக- கேரள எல்லை பகுதியில்  ‘ஆரியங்காவு’ அருள்மிகு ஸ்ரீ சுவாமி ஐயப்பன் திருக்கோவில்  உள்ளது. இங்கு ஐயப்பன் திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.

    சபரிமலை போன்று இல்லாமல், மதம் கொண்ட யானையை விழுத்தி அதன் மீது  இருபுறமும் பூரண தேவி, புஷ்கலை தேவியர் சமேதராக காட்சியளிக்கும் அழகை காண கண் கோடி வேண்டும், திருமணத்தடை நீங்க இவரை வழிபடலாம்,  தமிழ் கடவுள் ஆன, முருகப்பெருமானுக்கு, ஆறு படை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை இருப்பது போன்று; சுவாமி ஐயப்பனுக்கு, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம்,  சபரிமலை என ஆறுபடை வீடுகள் உள்ளன. புஷ்கலை தேவியை சுவாமி ஐயப்பன் திருமணம் செய்யும் விழாவானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது, ஆரியங்காவு ஐயப்ப சுவாமிக்கு ‘கல்யாண சாஸ்தா’ என்ற திருப்பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • சிவபெருமான் கை சின்னத்துடன் காட்சியளிக்கும் அதிசய கோவில்

    அகத்தியமா முனிவரின் பிரம்மாதி தோஷமும், இந்திரனின் சாபமும் நீக்கி ஈசன் காட்சி அளித்ததும், சீனிவாச பெருமாள் சுயம்புவாக தோன்றிய சிவ கோவிலின் வரலாற்றை அறிவோம் வாருங்கள்.   ஒருமுறை கௌதம முனிவர் தனது மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்.   அப்போது அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது காமம் கொண்டு, அகலிகையை அடைய நினைத்து  இந்திரன் சூழ்ச்சி செய்து. அதிகாலையில் நதிக்கரைக்கு சென்று நீராடும் வழக்கமுடைய  கௌதம முனிவரை விடியும் முன்னரே"  சேவலாக மாறி இந்திரன் முனிவரை நதிக்கரைக்கு நீராட போகச் செய்தான்….

    பின் கௌதம முனிவரின் உருவெடுத்து  இந்திரன் அகலிகையுடன்  சேர்ந்து இன்புட்ரான். பொழுது விடியாததை உணர்ந்து நதிக்கரை நோக்கிச் சென்ற கௌதம முனிவர் மீண்டும் ஆசிரமத்திற்கு வந்தபோது,  இந்திரனின் இழுச் செயலை கண்டு கோபம் அடைந்து இந்திரனுக்கு கௌதம முனிவர் சாபம் விட்டார். அப்போது முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க இந்திரன் சிவனை நோக்கி தவம் இருந்தான், அப்போது மணலால் சிவலிங்கம் செய்து அலங்கார அபிஷேக தீப ஆராதனை செய்து வழிபடுமாறு குரல் ஒன்று ஒலித்தது. அதன்படி மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு அபிஷேகம் செய்ய முற்பட்டபோது அபிஷேக நீர் பட்டு மணல் லிங்கத்தின் ஒரு பகுதி கரைந்து போனது. இதனால் பல காலம் அபிஷேகம் செய்ய முடியாமல் மன வேதனை அடைந்த இந்திரன் தான் உருவாக்கிய மணல் லிங்கத்தை ஆரத் தழுவி கண்ணீர் விட்டு, இனி எந்தப் பின்னையும், நுகர மாட்டேன் எனக் கதறி அழுதான். அப்போது அவனது கை  விரல்கள் லிங்கத்தின் மீது பதிந்து விட்டன.பின் பெண் ஆசையால் ஏற்பட்ட சாபத்தால் பலக்காலம், பூலோகத்தில் தவித்த இந்திரனுக்கு சிவபெருமான் சாப விமோசனம் கொடுத்து அருளினார்.

    அதன்படி கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க இந்திரன் வழிபட்ட, அருள்மிகு ஸ்ரீ வெள்வளை நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கைச்சினேஸ்வரர், திருக்கோயில் ஆனது, திருவாரூர் மாவட்டம் கச்சினம் கிராமத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவ ஆலயங்களில் இது 186 ஆவது தேவார ஆலயம் ஆகும். இந்திரன் மணலால் லிங்கம் செய்து வழிபட்ட பின்னர் அதனை கைகளால் எடுக்க முற்பட்டபோது, அவனது கையின் சின்னம் அதில் பதிந்து விட்டது எனவே இக்கோவிலானது  கைச்சினம் எனவும் அழைக்கப்படுகிறது, கிழக்கு நோக்கி மூன்று நிலை கோபுரத்துடன் காட்சியளிக்கும் இதன் உள்ளே நுழைந்தால், கொடி மரம், பலிபீடம், நந்தி தேவர் மண்டபம், உள்பிரகாரத்தில் விநாயகர், நவகிரகம், நடராஜர், விதூமலிங்கம், அர்த்தநாரீஸ்வரர், சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன. மற்றொரு சிறப்பாக கோவில் நிலத்தை தோண்டிய போது சுயம்பு வடிவாக தோன்றிய ஸ்ரீ சீனிவாச பெருமாளின்  திருமேனியானது இங்கு அருள் பாவிக்கிறது.
    திருவாரூர்-திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியிலிருந்து செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • கும்ப ராசி அன்பர்களே ஏப்ரல் மாதம் சாதகமா?.. பாதகமா?.. உங்களுக்கான மாத ராசி பலன் இதோ..!

    கிரகநிலை:

    ராசியில்  புதன் , சனி – தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன்  – தைரிய வீரிய  ஸ்தானத்தில்  சந்திரன் –  சுக ஸ்தானத்தில்  குரு – பஞசம  ஸ்தானத்தில்  செவ்வாய் –  அஷ்டம  ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    நம்பியவர்களை உயர்ந்த நிலையில் வைத்துப் பார்க்கத் துடிக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம்  எந்த காரியத்தையும் துணிந்து செய்வீர்கள். இளைய சகோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். உங்கள் பேச்சு எடுபடும். முக்கியஸ்தர்களின் பழக்கம் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வேலையே மாறலாம். 
    தொழில் செய்பவர்கள் முதலீடுகள் செய்யும்போது மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப் போகும் போது தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள்.

    குடும்பத்தில் பிள்ளைகளின் படிப்பு மிகவும் நன்றாக இருக்கும்.உங்கள் பிள்ளைகள் படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலமிது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடல்நிலையில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். 
    பெண்களுக்கு கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. 
    மாணவர்கள் நண்பர்களிடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரமிது. 

    அவிட்டம் 3, 4 பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தார் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும்.

    சதயம்:

    இந்த மாதம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும்.  

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

    இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். வியாபாரத்தில் புது யுக்தியை கையாளுவீர்கள்.

    பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சந்தணம், குங்குமம் கொடுத்து  வழிபடவும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

    சந்திராஷ்டம தினங்கள்: 11, 12

    அதிர்ஷ்ட தினங்கள்:  4, 5
     

  • மகர ராசி அன்பர்களே ஏப்ரல் மாதம் சாதகமா?.. பாதகமா?.. உங்களுக்கான மாத ராசி பலன் இதோ..!

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  புதன் , சனி – தைரிய வீரிய  ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் – சுக ஸ்தானத்தில்  சந்திரன் –  பஞசம ஸ்தானத்தில்  குரு – ரண ருண ரோக  ஸ்தானத்தில்  செவ்வாய் –  பாக்கிய ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    கொடுத்த வேலையை சிரமேற்க்கொண்டு செய்யும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம்  நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும். தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இருந்தாலும் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம். தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். 
    உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். 

    தொழில் செய்பவர்கள் லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.  குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக்க் கேட்டு நடப்பர். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். தைரியத்தை இழக்காதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். 
    கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.

    அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது. பெண்களுக்கு குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் – மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை.  மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். 

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

    திருவோணம்:

    இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை.

    அவிட்டம் 1,2 பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும்.

    பரிகாரம்: வில்வ இலையைப் பறித்து சிவனுக்கு அர்ச்சனைக்குக் கொடுக்கவும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

    சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10

    அதிர்ஷ்ட தினங்கள்:  2, 3, 29, 30
     

  • விருச்சிக ராசி அன்பர்களே ஏப்ரல் மாதம் சாதகமா?.. பாதகமா?.. உங்களுக்கான மாத ராசி பலன் இதோ..!

    கிரகநிலை:

    சுக ஸ்தானத்தில்  புதன் , சனி – பஞசம  ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் – ரண ருண ரோக  ஸ்தானத்தில்  சந்திரன் –  களத்திர  ஸ்தானத்தில்

    குரு – அஷ்டம  ஸ்தானத்தில்  செவ்வாய் –  லாப  ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    புதிய உறவுகள் அதிகம் கிடைக்கப் பெறும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம்  வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் இருந்து வந்த தடைகள் நீங்கும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். 

    உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். 
    தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. அனுபவமிக்கவர்களுடன் கலந்து ஆலோசித்து முதலீடு செய்வது நலம். உங்கள் முயற்சி வீண் போகாது. 

    குடும்பத்தில் பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். 
    கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

    அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.
    பெண்கள் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. 
    மாணாவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். 

    விசாகம் 4ம் பாதம்:

    இந்த மாதம் உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.

    அனுஷம்:

    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. . குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். 

    கேட்டை:

    இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். 

    பரிகாரம்: அறுபடை வீடு முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறி யான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை  வளம் பெறும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 4, 5

    அதிர்ஷ்ட தினங்கள்:  25, 26

  • தனுசு  ராசி அன்பர்களே ஏப்ரல் மாதம் சாதகமா?.. பாதகமா?.. உங்களுக்கான மாத ராசி பலன் இதோ..!

    கிரகநிலை:

    தைரிய வீரிய  ஸ்தானத்தில்  புதன் , சனி – சுக ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் – பஞசம  ஸ்தானத்தில்  சந்திரன் –  ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு – களத்திர  ஸ்தானத்தில்  செவ்வாய் –  தொழில்  ஸ்தானத்தில்  கேது  என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    கொடுத்த வாக்கை காப்பாற்றத் துடிக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம்  உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிப்பார்கள். உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. தைரியம் பிரகாசிக்கும். எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். 

    தொழில் செய்பவர்களுக்கு நண்பர்கள் உதவிகள் செய்வர். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். சிலர் வெளிநாடு பயணங்கள் செல்வீர்கள்.
    உத்யோகஸ்தர்களுக்கு வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். 

    குடும்பத்தில் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம். 
    கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

    அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும். பெண்கள் சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன. கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மூலம்:

    இந்த மாதம் மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு  உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். 

    பூராடம்:

    இந்த மாதம் வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

    உத்திராடம் 1ம் பாதம்:

    இந்த மாதம் நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. 

    பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வியாழக்கிழமைதோறும் வலம் வரவும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8

    அதிர்ஷ்ட தினங்கள்:  1, 27, 28

  • துலாம் ராசி அன்பர்களே ஏப்ரல் மாதம் சாதகமா?.. பாதகமா?.. உங்களுக்கான மாத ராசி பலன் இதோ..!

    கிரகநிலை:

    பஞசம  ஸ்தானத்தில்  புதன் , சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் – களத்திர  ஸ்தானத்தில்  சந்திரன் –  அஷ்டம  ஸ்தானத்தில்  குரு – பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் –  அயன சயன போக  ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    அடிமனதில் எதையும் கணக்கு பார்க்கும் துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம்  தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். கடுஞ்சொற்களை பேசுவவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் மதிப்பு உயரும். 

    குடும்பத்தில் தாய் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். பிள்ளைகள் இல்லாதவர்கள் பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். ஆனாலும் நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கீறீர்கள். அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம். 
    உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். 
    தொழில் செய்பவர்கள் எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது.

    கலைத்துறையினருக்கு  உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
    பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே கூடாது. தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும்.  மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பதை விடுத்து நீங்கள் நன்று படியுங்கள். 

    சித்திரை 3, 4 பாதம்:

    இந்த மாதம் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவு திருப்தி தரும்.

    சுவாதி:

    இந்த மாதம் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். அரசியல்வாதிகளுக்கு  மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும்.

    விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

    இந்த மாதம் அரசாங்க பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.

    வீண் வழக்குகள் வரலாம். மனம் தளர மாட்டீர்கள்.

    பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30

    அதிர்ஷ்ட தினங்கள்:  23, 24
     

  • கன்னி ராசி அன்பர்களே ஏப்ரல் மாதம் சாதகமா?.. பாதகமா?.. உங்களுக்கான மாத ராசி பலன் இதோ..!

    கிரகநிலை:

    ராசியில்  கேது –  ரண ருண ரோக ஸ்தானத்தில்  புதன் , சனி – களத்திர  ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன்  – அஷ்டம  ஸ்தானத்தில்  சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில்  குரு – தொழில்  ஸ்தானத்தில்  செவ்வாய் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் ராசியில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    செய்யும் தொழிலில் அதீத நம்பிக்கை கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம்  உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும். சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தினாலும் அதை சமாளித்து விடுவீர்கள்.  தைரியமாக எதையும் எதிர் கொள்வீர்கள். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும். 

    தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், பணி பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள். 

    உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலிடம் கொடுக்கும் அனைத்து வேலைகளையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

    குடும்பத்தில் தாய் தாய் வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். 
    கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

    அரசியல்வாதிகளுக்கு  மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம். 
    மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. சின்ன சின்ன இடையூறுகளை களைந்தால் உங்கள் சாதனைகளை பார்க்கலாம். 

    உத்திரம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். மனதெளிவு உண்டாகும். ஏற்றுமதி சிறக்கும்.  எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். 

    அஸ்தம்:

    இந்த மாதம் பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். 

    சித்திரை 1, 2, பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. 

    பரிகாரம்: முடிந்தவரை பெருமாள் ஆலயத்தை வலம் வந்தால் நல்லது.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28

    அதிர்ஷ்ட தினங்கள்:  21, 22