Thirupathy sri ramanavami

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராம நவமியையொட்டி சீதா ராமர் லட்சுமணர், அஞ்சேனயருக்கு நடைபெற்ற திருமஞ்சனம்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்   ஸ்ரீராமநவமியை முன்னிட்டு சீதா, ராமர்  லட்சுமணர், ஆஞ்சனேய சுவாமி உற்சவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில்  அர்ச்சகர்கள் பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனம்  செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் சுவாமி, செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி தம்பதி, கோயில் துணை இ.ஓ. லோகநாதம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இரவு 7 மணிக்கு  கோதண்டராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் ஏழுந்தருளி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். நாளை இரவு ராமர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *