Thirupathy bramorchavam day 1

ஐந்து நாள் உற்சவத்தில் முதல் நாளில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பரிவாரங்களுடன் தெப்பத்தில் பவனி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர தெப்போற்சவம் வைபவமாக துவங்கியது. மார்ச் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ள தெப்போற்சவத்தை  முன்னிட்டு ஆலய கருவறையில் உள்ள ஸ்ரீ  ராமச்சந்திர  சமேத லக்ஷ்மண சீதா உற்சவ மூர்த்திகள் ஸ்ரீ ருக்மணி ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நாள்தோறும் வலம் வருவர்.

 

அந்த வகையில்  முதல் நாளில் மாட வீதிகளில் வலமாக வரச் செய்து ஆலய திருக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள செய்தனர் தொடர்ந்து உற்சவமூர்த்திகள் அலங்காரம் மின் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் திருக்குளத்தை மூன்று முறை வலம் வர செய்தனர் திருக்குளத்தில் படித்துறையில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து  சுவாமியை வழிபட்டனர். ஐந்து நாட்கள் தெப்போற்சவத்தின்  முதல் நாள் உற்சவம் வைபவமாக நடைபெற்றது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *