Thirupathy garuda vaganam

திருப்பதி ஏழுமலையான்  கோயிலில்  பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில்  கருட வாகனத்தில் எழுந்தருளிய  மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான்  கோயிலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி  மலையப்ப   தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி  பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாட வீதியில்  உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
 
108 வைஷ்ணவ திவ்யதேசங்களிலும் கருடசேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். அவ்வாறு ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளும் பெளர்ணமி அன்று கருட வாகனத்தில் வலம் வருவது வழக்கம். இந்த வாகன சேவையில் ஏழுமலையான்  கோயில் ஜீயர்கள், கோவில் துணை இஓ  லோகநாதம், விஜிஓ  பாலிரெட்டி,  உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நான்கு மாட வீதியில்  திரண்டு இருந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *