Tag: garuda vaganam

  • Thirupathy Garuda Vaganam Purappadu

    பௌர்ணமி தினம் அன்று ஒவ்வொரு மாதமும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருடபாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

     கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி சர்வ ஆபரண அலங்காரம் பூண்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.  அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே நான்கு மாட வீதிகளில் கருட வாகன புறப்பாடு கண்ட உற்சவர் மலையப்ப சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

  • Thirupathy garuda vaganam

    திருப்பதி ஏழுமலையான்  கோயிலில்  பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில்  கருட வாகனத்தில் எழுந்தருளிய  மலையப்ப சுவாமி

    திருப்பதி ஏழுமலையான்  கோயிலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி  மலையப்ப   தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி  பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாட வீதியில்  உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
     
    108 வைஷ்ணவ திவ்யதேசங்களிலும் கருடசேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். அவ்வாறு ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளும் பெளர்ணமி அன்று கருட வாகனத்தில் வலம் வருவது வழக்கம். இந்த வாகன சேவையில் ஏழுமலையான்  கோயில் ஜீயர்கள், கோவில் துணை இஓ  லோகநாதம், விஜிஓ  பாலிரெட்டி,  உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நான்கு மாட வீதியில்  திரண்டு இருந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.