Thiruverkadu theppam

ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவேற்காட்டில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

இதில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கோயிலில் இருந்து பலக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

இதில் மூன்றாம் நாளான இன்று தெப்பத்தில் 11 சுற்றுகள் கோயில் குளத்தில் சுற்றி வரப்பட்டது மேலும் பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க குறிப்பிட்ட அளவு பக்தர்கள் தெப்ப உற்சவத்தை காண கோயில் தெப்ப குளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *