Ayothya Ezhumalayan Koil

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில் முக்கிய நகரங்களில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கிய நிலையில் அயோத்தியில் ஏழுமலையான் கோவில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக  கோயில் கட்டுமானத்திற்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்திரப்பிரதேச மாநில அரசை  உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்க முடிவு செய்துள்ளனர். 2021 ஆண்டுக்கான புத்தாண்டு காலண்டர்,  டைரிகள் விலையை உயர்த்த தேவஸ்தான சப் கமிட்டி பரிந்துரை செய்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் பொது கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் விலை உயர்வை ஏற்க  அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி மறுத்துள்ளார். 

இதனால் பழைய விலைக்கே காலண்டர், டைரிகளை விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். திருமலையில் உள்ள ஏசி அறைகளின் வாடகையை ரூ 1000 விலைக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில்  ரூ .1,500 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *