Vinayakar poojai time

நாம் கடையில் சென்று பிள்ளையாரை வாங்க செல்லும் போது ஒரு தாம்பூலத் தட்டில் சிறிது அரிசி, மஞ்சள், அறுகம்புல் பரப்பி அதன் மீது பிள்ளையார் வைத்து கொண்டு வரவேண்டும். விநாயகரை வீட்டுக்கு கொண்டு வந்ததும். வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு உள்ளே அழைத்து வர வேண்டும். கணபதி வீட்டுக்கு வந்த உடன் அவருக்கு ஒரு பட்டுத் துணி அல்லது காவி துணி உடுத்தி சிறிது பூ வைத்து வணங்கவும்.

பின்னர் பிள்ளையாருக்கு சந்தன பொட்டு வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.  அவருக்கு பிடித்த அருகம் புல் அல்லது எருக்கம்பூ மாலை செய்து அணிவித்தால் நலம் 

வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், உள்ளிட்ட பழங்களை வைக்கவும். விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட இனிப்பு வகைகள், பலகாரங்களை செய்து படைக்கலாம்.

எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருள்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாளை (22.8.20) அன்று சனிக்கிழமை, காலை 9 மணி முதல் 10.30 வரை. எனவே பூஜையைக் காலை 7 மணி முதல் 8 மணிக்குள்ளும் 10.30 முதல் 11.30 மணிக்குள்ளும் மேற்கொள்ளலாம். மாலையில் 5 மணி முதல் 7 மணிக்குள் விநாயகருக்கு பூஜை செய்யலாம்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *