Thanjai Annabishegam

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலில்  சிவனுக்கு 1000 கிலோ அரிசியால் வடித்த சாதத்தாலும் 500 கிலோ காய்கறிகளாலும் "அன்னாபிஷேகம் " நடைபெற்றது. 

உலகப் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும்

பக்தர்களால் வழங்கப்பட்ட 1000 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தால் 13 அடி உயரமுடைய சிவலிங்கத்துக்கு  இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது  கேரட்,  பீட்ருட், முள்ளங்கி உள்ளிட்ட 500 கிலோ எடையிலான அனைத்து வித காய்கறிகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் அன்னாபிஷேக வழிபாட்டில் பங்கேற்று சிவபெருமானை வணங்கினர்

இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்று முடிந்ததும் 13 அடி சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட அன்னத்தில் ஒரு பகுதியை பக்தர்களுக்கு பிரசாதமாகவும்,  மீதமுள்ளதை ஆறுகள் குளங்களில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவுக்காகவும் நீர் நிலைகளில் கரைக்கப்படும்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *