Mahalaya Amavasai in Saturday

சனிக்கிழமை அமாவாசை எப்படி மிக சிறப்பான நாளாக பார்க்கப்படுகின்றதோ, அதை விட மிக சிறப்பாக பார்க்கப்படுவது சனிக்கிழமையில் வரும் மகாளய அமாவாசை.

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி மகாளய அமாவாசை தினம் வருகின்றது. மகாளய பட்சமான அதாவது செப்டம்பர் 14 முதல் 28ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

இந்த தினங்களில் தர்ப்பணம், முன்னோர் வழிபாடு செய்ய முடியாதவர்கள் கண்டிப்பாக நாளை வரும் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெற்றிடுங்கள்.

1999ம் ஆண்டு இந்த மகாளய அமாவாசை சனிக்கிழமை தினத்தில் வந்தது. தற்போது மீண்டும் இந்த மகாளய அமாவாசை இந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி சனிக்கிழமை தினத்தில் அமைந்துள்ளது முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகின்றது.

செப்டம்பர் 28ம் தேதி அதிகாலை 03.07 மணிக்கு அமாவாசை வருகிறது.
செப்டம்பர் 29ம் தேதி நள்ளிரவு 12.44 மணிவரை அமாவாசை நீடிக்கின்றது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *