Tag: Mahalaya amavasai

  • October 14 2023 Mahalaya amavasai

    அக்டோபர் 14 – மகாளய அமாவாசை
    சோபகிருது வருடம் – புரட்டாசி 27
    அமாவாசை
    14-அக்-2023 சனி
    மகாளய அமாவாசை,
    நவராத்திரி கொலு வைக்க காலை 7.31 – 9.00 மணி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : அமாவாசை
    திதி நேரம் : அமாவாசை இ 11.57
    நட்சத்திரம் : அஸ்தம் மா 5.44
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Mahalaya amavasai idai seeya vendum

    முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி, தர்ப்பணம் அமாவாசை தினம் செய்வது மிகவும் சிறப்பானது. இந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்யும் திதியோ அல்லது தர்ப்பணமோ செய்வதால் நம் தலைமுறை தலைக்கும். பொதுவாக ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரத்தில் வரும் பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமை தினத்தில் விரதம் இருப்பது சிறப்பானது. நல்ல பலனை கொடுக்கும். அப்படி ஒவ்வொரு வாரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை தினங்களிலாவது விரதம் இருந்து பெருமாளைத் தரிசிப்பது உகந்தது.

    தற்போது சனிக்கிழமையும், மகாளய அமாவாசையும் கூடி வரும் நாளில் நாம் கட்டாயம் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு, வீட்டில் தீபம் ஏற்றி இறைவனையும் வழிபடுவது மிகவும் சிறப்பானது. பொதுவாகச் சனிக்கிழமை விரதம் இருப்பதால் நம்மீது இருக்கும் சனி பகவானின் வக்கிர பார்வை குறையும். இந்த சனி மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வதால் நமக்கும், நம் முன்னோருக்கும் இருக்கும் சனி பார்வை பிரச்சினை விலகும்.

    இதனால் முன்னோர்கள் ஏதேனும் சில பாவங்களால் வைகுண்டம் அடைய முடியாமல் இருந்தால், நாம் இந்த நாளில் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களை வைகுண்டம் அடைய வழிவகுக்கும்.

  • Mahalaya amavasai en ivalavu sirappu

    அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

    மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் அன்று காலை புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த நாளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து நீர்நிலைகளில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அர்ப்பணித்து வழிபடுவார்கள்.. மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். 

    மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம். 

    மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும்.

     ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. 
     

  • October 06 2021 mahalaya amavasai

    அக்டோபர் 6 – மகாளய அமாவாசை
    பிலவ வருடம் – புரட்டாசி 20
     அமாவாசை அமாவாசை
    மகாளய அமாவாசை, 
    நவராத்திரி கொலு வைக்க காலை 9.00 – 10.30 மணி
    06-அக்-2021 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    மா    5.36
    நட்சத்திரம்    :    அஸ்தம்    ந.இ    1.19
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Mahalaya Amavasai Tharpanam

    புரட்டாசி சனிக்கிழமை அன்று மஹாளய அமாவாசை திதி வந்தது சிறப்பாக கருதப்படுகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு சனிக்கிழமை மஹாளய அமாவாசை வந்ததையடுத்து 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புரட்டாசி 2 வது  சனிக்கிழமை அன்று அமாவாசை தர்பணம் கொடுப்பது சிறப்பு பெற்றதாக கருதுகிறார்கள்.

    இந்துகளின் புனித நாளான  மஹாளய  அமாவாசையான  இன்று கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த  ஆயிரகனக்கான  இந்துக்கள்  புனித  நீராடி தங்கள்  முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை நடத்தி வணங்கினார்கள்.

    மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர்  தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் குளத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு  ஏராளமானோர்  தங்களது முன்னோர்களுக்கு திதி எனப்படும்  தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில்  மஹாளய அமாவாசை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிக்கிழமை  அன்று  மஹாளய அமாவாசை வருவதால் வீரராகவப் பெருமாளை தரிசிக்க சென்னை காஞ்சிபுரம் வேலூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் குவிந்ததால் திருவள்ளூர் நகரம் நிரம்பி வழிந்தது. 

    மஹாளய அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு. மதுரை மாவட்டம் . திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் சரவண பொய்கை தெப்பகுளத்தில் புரட்டாசி மாத மஹாலய அமவாஸையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் எனும் "பித்ரு " சாந்தி செய்து கொண்டனர். 

    திருவொற்றியூரில் மஹாளய அமாவாசை தர்ப்பணம்  செய்வதற்காக கடற்கரையில் ஏராளமானோர் குவிந்து  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பவித்ரா ஜோதி மக்கள் அறக்கட்டளை சார்பில்  இலவசமாக ஆண்டுதோறும்  திருவெற்றியூர் திருச்சினாம் குப்பம்  கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆறுகளிலும் குளங்களிலும் கடற்கரையிலோ தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் சென்னையில் கடற்கரை பகுதியில் தர்ப்பணம் கொடுக்க வசதியில்லாத நிலையில் கோவில்களில் சத்திரங்களில் தர்பணம் கொடுத்து வருகிறார்கள்.


     நம் முன்னோர்களுக்கு அமாவாசையில் தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெற்று முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை    அதிலும் காசியில் ஓடும் நதிக்கரையில் அல்லது ராமேஸ்வரம் கடற்கரையில் திதி கொடுப்பது முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும் இதனைத் தீர்ப்பதற்கு காசிக்கோ ராமேஸ்வரதுக்கோ ஒரு சிலரால் மட்டுமே செல்ல முடியும் என்பதனால் ஏழை எளியவர் வசதி படைத்தவர் யாவரும் ஒரே இடத்தில் இலவசமாக திதி கொடுக்க ஏதுவாக சித்தர்களின் பூமி  என்றழைக்கப்படும்   திருவொற்றியூரில் கடலில் காசி விஸ்வநாதர் கோயில்  மூழ்கிய  இடத்தில் தர்பணம் கொடுப்பது காசியில் தர்பணம் கொடுத்த பலனை தரும் என்பதால்  கடற்கரையில் எள்ளும் தண்ணீரும்  கரைத்து முன்னோர்கள்  ஆசியை பெறுவதற்க்காக  ஏராளமானோர் குவிந்தனர் 

  • Mahalaya Amavasai in Saturday

    சனிக்கிழமை அமாவாசை எப்படி மிக சிறப்பான நாளாக பார்க்கப்படுகின்றதோ, அதை விட மிக சிறப்பாக பார்க்கப்படுவது சனிக்கிழமையில் வரும் மகாளய அமாவாசை.

    2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி மகாளய அமாவாசை தினம் வருகின்றது. மகாளய பட்சமான அதாவது செப்டம்பர் 14 முதல் 28ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

    இந்த தினங்களில் தர்ப்பணம், முன்னோர் வழிபாடு செய்ய முடியாதவர்கள் கண்டிப்பாக நாளை வரும் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெற்றிடுங்கள்.

    1999ம் ஆண்டு இந்த மகாளய அமாவாசை சனிக்கிழமை தினத்தில் வந்தது. தற்போது மீண்டும் இந்த மகாளய அமாவாசை இந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி சனிக்கிழமை தினத்தில் அமைந்துள்ளது முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகின்றது.

    செப்டம்பர் 28ம் தேதி அதிகாலை 03.07 மணிக்கு அமாவாசை வருகிறது.
    செப்டம்பர் 29ம் தேதி நள்ளிரவு 12.44 மணிவரை அமாவாசை நீடிக்கின்றது.
     

  • Mahalaya amavasai Seiya vendiyavai

    முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி, தர்ப்பணம் அமாவாசை தினம் செய்வது மிகவும் சிறப்பானது. இந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்யும் திதியோ அல்லது தர்ப்பணமோ செய்வதால் நம் தலைமுறை தலைக்கும். பொதுவாக ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரத்தில் வரும் பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமை தினத்தில் விரதம் இருப்பது சிறப்பானது. நல்ல பலனை கொடுக்கும். அப்படி ஒவ்வொரு வாரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை தினங்களிலாவது விரதம் இருந்து பெருமாளைத் தரிசிப்பது உகந்தது.

    தற்போது சனிக்கிழமையும், மகாளய அமாவாசையும் கூடி வரும் நாளில் நாம் கட்டாயம் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு, வீட்டில் தீபம் ஏற்றி இறைவனையும் வழிபடுவது மிகவும் சிறப்பானது.

    பொதுவாகச் சனிக்கிழமை விரதம் இருப்பதால் நம்மீது இருக்கும் சனி பகவானின் வக்கிர பார்வை குறையும். இந்த சனி மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வதால் நமக்கும், நம் முன்னோருக்கும் இருக்கும் சனி பார்வை பிரச்சினை விலகும்.

    இதனால் முன்னோர்கள் ஏதேனும் சில பாவங்களால் வைகுண்டம் அடைய முடியாமல் இருந்தால், நாம் இந்த நாளில் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களை வைகுண்டம் அடைய வழிவகுக்கும்.