Thirupathy pavitrochavam

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக செய்யப்படும் பவித்திர உற்சவம் தொடங்கி உள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம்தோறும் நடைபெறக்கூடிய பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்களுக்கு பவித்திர உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு  பவித்ரோற்சவம் இன்று துவங்கியது. 

பவித்ர உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை உற்சவர்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கு பால்,தேன், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தீப, தூப, கற்பூர ஆரத்தி ஆகிய சமர்பணங்கள் உற்சவ மூர்த்திகளுக்கு நடைபெற்றன.

தொடர்ந்து நெய்வேத்தியம் செலுத்தப்பட்டு  யாகசாலையில் பவித்திர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில்   தேவஸ்தான இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

நாளை பவித்ரா உற்சவத்தின் இரண்டாவது  நாள் பவித்ர மாலைகள் மூலவருக்கும், உற்சவருக்கும், ஆனந்த நிலையம், கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் செவ்வாய்கிழமை யாகம் பூர்ணாவுதியுடன் நிறைவு பெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *