Atthi Varadhar 42 nd day

அத்திவரதர் வைபவம் 42 வது நாளான இன்று அத்திவரதர் ராஜ கிரீட அலங்காரத்தில் அத்தி வரதர் அற்புதமாக காட்சியளித்தார். 

இன்று அத்தி வரதரை தரிசிக்க கடைசி வார விடுமுறை நாள் என்பதால் பல லட்சம் மக்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து இருந்தனர். ஒவ்வொரு நாளும் அத்தி வரதர் புதிய பட்டு வஸ்திரம் அணிந்து, புது அலங்காரத்தில் காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று ராஜ கிரீடம் அணிந்து ராஜா போல காட்சி தருகின்றார். 

வரும் ஆகஸ்ட் 16ம் தேதியோடு அத்தி வரதரின் தரிசனம் முடிக்கப்படுவதாகவும், 17ம் தேதி அவருக்கான ஆகம முறைப்படி பூஜைகள் செய்து மீண்டும் அவர் இருந்த அனந்த புஸ்கரனியில் வைக்கப்பட உள்ளார். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *