Thirupathy Ezhumalayan Puspa Pallaku

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு  திருமலையில் இன்று மாலை சுமார் 3 டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளிய  ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோயில் மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு சேலத்தை சேர்ந்த  மனிசங்கர் என்னும் பக்தர் அளித்த நன்கொடை மூலம் ஒரு வார காலமாக தேவஸ்தான தோட்டத்துறை கண்காணிப்பில் 15 ஊழியர்கள் பிரம்மாண்டமான அழகிய புஷ்ப பல்லக்கு தயார் செய்யும் பணிகள் நடைபெற்றன. 

ரோஜா, மல்லி, முல்லை, கனகாம்பரம்  உள்ளிட்ட ஒன்பது வகையான சம்பர்தாய மலர்களும் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து வகை  மலர்கள் என 3 டன் எடையுள்ள மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கின் முன்பகுதியில் மகாவிஷ்ணுவும், பின் பகுதியை யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரும், புஷ்ப பல்லக்கில் இரு புறங்களையும்  ஆஞ்சநேயர், கருடாழ்வார் கிருஷ்ணர் ஆகியோர் அலங்கரிக்கும் வகையில் புஷ்ப பல்லக்கு தயார் செய்யப்பட்டிருந்தது.

மாலை கோவிலில் இருந்து புறப்பட்டு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே கோயிலில் மாட வீதிகளில் உற்சவம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.அப்போது நான்கு மாடவீதிகளில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் புஷ்பப் பல்லக்கு வாகன சேவை பக்தி மனம் உருகி கற்பூர ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *