Thiruthani Hundiyal Ennum

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் தங்கம் ஆகியவை திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்தால்-34- நாட்களில் உண்டியல் பணம் என்னும் பணி மலைக்கோயில் மேல் தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.

 காலையில் தொடங்கிய இந்த பணியில் சேலம் மாவட்டத்திலிருந்து தமிழக முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தன்னார்வ முருக பக்தர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியினை மேற்கொண்டனர் மற்றும் இந்த பணியில் திருத்தணி முருகன் கோயில் ஊழியர்கள் ஆகியவர்கள் ஈடுபட்டனர்.

 காலை முதல் மாலை வரை உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயிலின் இணை ஆணையர் செயலாளர் சிவாஜி திருக் கோயில் தக்கார் ஜெய்சங்கர் ஆகியோர்கள் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது என்ன பட்ட பணம் எவ்வளவு என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

 பணமாக 92 லட்சத்து 32 ஆயிரத்து 713 ரூபாய் தங்கம் ஆயிரத்தி 178 கிராம் வெள்ளி ஏழாயிரத்து 881 கிராம் ஆகியவை பக்தர்கள் முருகன் கோயில் மற்ற உப கோயில்களில் செலுத்திய பணம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *