Tag: Thiruthani

  • Thiruthani Aadi kiruthigai neralayil

    திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு பக்தர்கள்; வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. யூடியுப் வழியாக பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் திருவிழாவை நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    திருவள்ளுர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த  மாவட்டதிலுள்ள வழிபாட்டு தலங்கள்; கடந்த நான்கு மாதங்களாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. திருத்தணி மலைக்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தொன்றுதொட்டு ஆடிக்கிருத்திகை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும், இவ்வாண்டு கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் பொருட்டு திருக்கோவில் வளாகம் மூடப்பட்டு பக்தர்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    ஆகம விதிகளின்படி வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி  இத்திருவிழா நடைபெறுவதை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காணும் பொருட்டு https://tiruttanigaimurugan.org, https://tnhrce.gov.in ஆகிய இணையதளங்களிலும், திருக்கோவில் யூடியுப் (YouTube) அலைவரிசையில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரடி திருக்கோவில் தரிசனம் பொதுமக்களின் வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவிக்கிறார்.

  • Thiruthani Murugan Soorasamharam

    கந்த சஷ்டி விழாவின் போது முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை மாறாக உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்துகின்றனர். 

    திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். அதனால் தான் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. 

    மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றுகிறது கந்த புராணம். திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ… தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ… தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ… நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம். 

    தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. 

    தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்!

  • Thiruthani murugan koil Thiruppadi Thiruvizha

    புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில், நாளை காலை 8 மணி முதல் திருப்படி திருப்புகழ் திருவிழா தொடங்கி, மறுநாளான ஜனவரி 1 ஆம் தேதி தேதி காலை வரை தொடா்ந்து திருப்புகழ்பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒரு வருடத்தை குறிக்கும் விதமாக திருத்தணி முருகபெருமான் கோயிலில் 365 திருப்படிகள் உள்ளன. ஆங்கில புத்தாண்டு தொடங்கும் நாளுக்கு முதல் நாள் இங்கு படிப்பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி திருத்தணி முருகன் மலைக்கோயிலில் நடப்பாண்டுக்கான திருப்படித் திருவிழா நாளை காலை 8 மணிக்கு சரவணப்பொய்கை அருகே திருப்படி பூஜையுடன் தொடங்குகிறது. அப்போது பஜனை குழுவினரை வரவேற்று பக்தி பாடல் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது.

    தொடா்ந்து, நூற்றுக்கணக்கான பஜனை குழுவினா், மறுநாள் ஜனவரி 1-ஆம் தேதி காலை வரை தொடா்ந்து பக்தி பாடல்களைப் பாடியவாறு மலைக் கோயிலுக்குச் சென்று வழிபடுவா். மேலும், 31-ஆம் தேதி நண்பகல் 11 மணிக்கு உற்சவா் வெள்ளி மயில் வாகனத்தில் மாட வீதியில் திருவீதியுலா வருகிறார்.

    ஜன.1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும், இரவு 8 மணிக்கு உற்சவா் வெள்ளி நாக வாகனத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். 

  • Thiruthani murugan pushpanjali

    திருத்தணி, முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆறுமுக சுவாமியை வழிபட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் 5ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கி 7 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

    ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெறும், ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். காலை 11 மணிக்கு மலைக்கோயில் உள்ள மூலவ முருகப்பெருமானுக்கு தங்க கவசமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

    மாலை 4.30 மணிக்கு முருகன் கோயிலின் உபக்கோயிலான அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களை கோயில் ஊழியர்கள் மற்றும் முருக பக்தர்கள் ஊர்வலமாக சரவணப்பொய்கை வழியாக மலைக்கோயிலுக்கு கொண்டுவந்தனர். 

    பின்னர் காவடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சண்முக பெருமானுக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்ச- மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஆந்திரா, சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
     

  • Thiruthani Navaraathiri Vizha

    முருகன் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழாவில் கிளி வாகனத்தில் கஜவள்ளி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் நவராத்திரி விழா தொடங்கியது. முன்னதாக, கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் கஜலட்சுமி அம்மையார் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 

    நவராத்திரி விழாவில் 100க்கும்மேற்பட்ட கொலு பொம்மைகள் வகைக்கப்பட்டிருந்தன. நவராத்திரி விழாவை முருகன் கோயில் இணை ஆணையர் பழனி குமார், தக்கார் வே.ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். இந்த விழா, வரும் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும், மாலை, 6.30 மணிக்கு ஊற்சவர் கஜலட்சுமி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

    இதே போல், திருத்தணி, சேகர்வர்மா நகர் சக்தி வினாயகர், மடம் கிராமத்தில் உள்ள வன துர்க்கையம்மன், ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் தணிகை மீனாட்சி அம்மன், பழைய பஜார் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோயில்களிலும் நவராத்திரி விழா இன்று துவங்கியது. வரும் 8 ஆம் தேதி வரை, மாலை 6.30 மணிக்கு கொலு பொம்மைகளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெறுகிறது.

  • Aadi Pooram Thiruthani murugan Palabishegam

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால் காவடி  புஷ்ப காவடி மயில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் . பக்தர்கள் முன்னிலையில் பாலபிஷேகம் நடைபெற்றது.

    ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

     சென்னை வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம், கல்மண்டபம் என பல்வேறு பகுதியிலிருந்து ஒரு நாள் முன்னதாகவே திருத்தணி முருகன் கோயிலின்  அடிவாரத்தில் தங்கி இன்று அதிகாலை 500 க்கும் மேற்பட்டோர் பால் குடங்களுடன் மலைக்கோயில் வழியாக முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய பால்குடங்கள் எடுத்து வந்தனர்.

    காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்கள் பக்தர்கள் முன்னிலையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டது  மேலும் இன்று அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு பால் பழம் பஞ்சாமிர்தம் தேன் இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தங்க கவச அலங்காரம் முருகப்பெருமானுக்கு செய்யப்பட்டது . 

    இதில் சென்னையை சேர்ந்த பக்தர்கள் மயில் காவடி பால் காவடி புஷ்ப காவடி உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு ஆணி செருப்பு என்று சொல்லப்படும் பாதரட்சை அணிந்துகொண்டு மலைக் கோயிலை வலம் வந்தனர் .
     

  • Thiruthani Theppal Urchavam

    திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில்  50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    திருத்தணி சரவண பொய்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் தெப்பம் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள் பாலித்தார். திருத்தணி முருகன் கோவில் கடந்த 24-ஆம் தேதி முதல் ஆடிக்கிருத்திகை உற்சவம் நடந்தது வந்தது. 

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் உடன் வந்து மூலவரை தரிசித்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மலைப் படிகள் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் வந்தடைந்தார் .

     இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் பெருமாள் எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டன. பின்னர் இரவு ஏழரை மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மூன்றாம் நாள் விழாவில் உற்சவர் ஏழு முறை குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
     

  • Thiruthani Aadi Barani vizha

    திருத்தணியில் ஆடி கிருத்திகை முதல் நாளான இன்று பரணி விழா தொடங்கியது .  ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்,  மருத்துவ வசதி  தீயணைப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது  1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது விழாவின் முதல்நாளான இன்று பரணி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. திருத்தணிக்கு காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

    அதேபோல் சென்னையில் இருந்து திருத்தணிக்கு  வருவதற்கு 3 சிறப்பு ரயில்களும், தரிசனம் முடிந்து செல்ல மூன்று சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. பரணி விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பன்னீர் காவடி புஷ்ப காவடி  எடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.  

    பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிகளும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார் . அதேபோல் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Thiruthani Aadi kiruthigai

    திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில்  ஆடிக்கிருத்திகை, தெப்பல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து காவடிகளுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதில் பல பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்தல், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்வர். விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இதனைத்தொடர்ந்து பச்சை மாணிக்க மரகதக் கல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். 

    லட்ச கணக்கான பக்தர்கள் கூடும், இத்திருவிழாவில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரும் வகையில், நகரின் முக்கியப் பகுதிகளிலும், கோயிலைச் சுற்றியும் தாற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீர் வசதி, நடமாடும் மருத்துவக் குழுக்கள், தடையில்லா மின்சாரம் வழங்குதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன. 

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரம் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மேலும், சரவணப்பொய்கை குளத்தில் 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் விழாவில் அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் பிரமுகர்கள் அதிக அளவில் அமருவதால் ஏற்படும் இடையூறைக் கட்டுப்படுத்த, இந்த ஆண்டு முதல் இசைக் கலைஞர்கள், கோயில் குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் யாரும் தெப்பலில் ஏற அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     

  • Thiruthani Theppa Thiruvizha

    திருத்தணி முருகன் கோவிலில், வரும், 26ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடை பெறும் தெப்பத் திருவிழாவிற்காக, குளத்தில், டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்ப, கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

    திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகையை ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது.ஆடிக்கிருத்திகையை ஒட்டி, மலையடிவாரத் தில் உள்ள சரவண பொய்கை என்கிற திருக்குளத்தில், மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

    அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஆடி அஸ்வினி, 24ம் தேதியும், ஆடி பரணி, 25ம் தேதியும், ஆடி கிருத்திகை, 26ம் தேதியும் நடைபெற உள்ளது.ஆடி கிருத்திகையையொட்டி, 26ல் துவங் கும் தெப்பத் திருவிழா, 28ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், கடந்தாண்டு பருவ மழை இல்லாததால், கோவில் குளத்தில் தண்ணீர் மிக குறைந்த அளவில் உள்ளது.இதில் தண்ணீரில் தெப்பம் கட்டுவதற்கும், தெப்பத் திருவிழா நடத்துவதற்கும் முடியாது. திருத்தணியில் போதிய மழை பெய்யாததால், குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லை.ஆகையால், முதற்கட்டமாக தெப்பம் கட்டுவதற்கு, டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, திருக்குளத்தில் விடுவதற்கு, கோவில் நிர்வாகம் தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

    இதற்காக, தனியார் டிராக்டர் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, ஒரு டிராக்டர் தண்ணீர், 600 ரூபாய் வீதம், திருக்குளத்திற்கு விடுவது என, தீர்மானித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் விட பக்தர்களுக்கு அழைப்புமுருகன் கோவில் திருக்குளத்தில் தண்ணீர் இல்லாத தால், தெப்பத் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

    இதையடுத்து, கோவில் நிர்வாகம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் டிராக்டர் மூலம் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி கடந்த மூன்று தினங்களாக டிராக்டர் மூலம் தண்ணீர் திருக்குளத்திற்கு விடப்பட்டுள்ளது.  தொடர்ந்து இப்பணிகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.