Cat Omen: The Backstory of the Superstition

எவ்வளவுதான் அறிவியலும் நாகரிகமும் முன்னேறினாலும், சில மூடநம்பிக்கைகளை நம்மால் தவிர்க்க முடியவில்லை. அப்படியொரு பழக்கம் தான் பூனை சகுனம். வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்தா, அதை அபசகுனம்னு நினைச்சு, வேலையை நிறுத்திட்டு, வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிச்சு, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து, பிறகு திரும்ப கிளம்புவோம். இந்த பழக்கத்தோட பின்னணி கதை ரொம்ப சுவாரசியமானது.

பழங்காலத்துல தெருவிளக்கு இல்லை. ஊருக்கு ஊர் மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டில தான் பயணம். இரவு நேர பயணத்துல, இருட்டுல பூனையோட கண்கள் மட்டும் ரேடியம் மாதிரி மின்னும். பூனையோட உருவம் தெரியாது, ஆனா கண்கள் மட்டும் பளிச்சுனு தெரியும். இது புலி, சிறுத்தை மாதிரியான காட்டு விலங்குகளோட கண்களுக்கும் பொருந்தும். இப்படி மின்னுற கண்களைப் பார்த்து மாடு, குதிரை பயந்து மிரளாம இருக்க, வண்டியை ஓட்டுறவங்க சிறிது நேரம் வண்டியை நிறுத்தி, மாடு அல்லது குதிரைக்கு தண்ணீர் கொடுத்து, கொஞ்சம் ஓய்வு கொடுப்பாங்க.

வண்டி ஓட்டுபவனும் தண்ணீர் குடிச்சு ஓய்வெடுத்து பயணத்தை தொடருவான்.காலப்போக்கில் இது மாறி, பூனை குறுக்கே வந்தா அபசகுனம்னு மாறிடுச்சு. இனி இந்த மூடநம்பிக்கையை மனசுல வச்சு குழப்பிக்க வேண்டாம். பூனை வந்தாலும், வரலேன்னாலும், மனசு திருப்தியோட செய்யுற எந்தக் காரியமும் வெற்றியில முடியும்னு நம்புவோம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *