Suitable Flowers for Shiva Puja

பூக்கள் இல்லாத பூஜைக்கு பலன் குறைவே என்பது பெரியோர் வாக்கு. அவ்வகையில், சகல மலர்களும் இறை பூஜைக்கு ஏற்றவையே என்றாலும், குறிப்பிட்ட சில மலர்களை சிவபூஜைக்கு விசேஷமாகப் பரிந்துரைக்கின்றன ஞான நூல்கள். 

நீர்ப்பூ வகைகள் 

செந்தாமரை, வெண்தாமரை, செங்கழுநீர், நீலோற்பம், கருநெய்தல், செந்நெய்தல், வெண்நெய்தல் ஆகியவைகள் நீர்ப் பூ வகையைச் சார்ந்தது.

நிலப் பூ வகைகள் 

நாயுருவி,தும்பை,வெட்டி வேர்,பச்சை,சிவந்திப் பூ,மரிக்கொழுந்து,சிவகரந்தை, விஷ்ணு கரந்தை,துளசி,இருதயத்தை,செம்பரத்தை,அனிச்சம், நந்தியாவட்டை ஆகியவைகள் நிலப்பூ வகையைச் சார்ந்தது.

கோட்டுப் பூ வகைகள் 

வன்னி, பலா, எலுமிச்சை, கோங்கு, நார்த்தை, மந்தாரை, மாவிலங்களை, நொச்சி, பன்னீர்-அகில், மாதுளை, அசோகு, பாதிரி, இலந்தை, நுணா, வெள்ளெருக்கு, புன்னை, மருது, விளா, கொன்றை, நெல்லி, குரா, செருந்தி, பொன்னாவரை, கிளுவை, வில்வம், குருந்து ஆகியவைகள் கோட்டுப் பூ வகையைச் சார்ந்தது.

கொடிப் பூ வகைகள் 

நாட்டு மல்லிகை,முல்லை, வெற்றிலை, தாளி, கருக்காக்கொன்றை, வெண்கா கொன்றை குருக்கத் தி, இருவாச்சி, கொன்றை, பிச்சி ஆகியவைகள் கொடிப் பூ வகையைச் சார்ந்தது.

நான்கு வேளை பூஜைக்கு  உகந்த மலர்கள்…

அதிகாலை, காலை, நண்பகல், மாலை ஆகிய நான்கு வேளைகளிலும் சிவ பூஜைக்கு உகந்த மலர்கள் இன்னின்ன என்று ஆன்றோர் வகுத்துள்ளனர். அவை:

அதிகாலை: புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பவம், பாதிரி, அலரி, செந்தாமரை

காலை: அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவர்த்தம், தாமரை, பவழமல்லி.

உச்சிக்காலம்: பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, மல்லிகை, கத்தரி, மந்தாரை, சரக்கொன்றை, தும்பை.

மாலை மற்றும் அர்த்தசாமம்: மல்லிகை, காட்டு மல்லிகை, மகிழம்பூ, கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மரிக்கொழுந்து.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *