Thiruvalangadu car festival

திருவலாங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருத்தேர் சாமி உலா புறப்பாடு நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உடன் இணைந்த திருவலாங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் ஆடல் வள்ளல் நடராஜப்பெருமானின் ஐம்பெரும் சபைகளில் முதல் சபை திருக்கோயில் ஆகும்.

இந்த திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கமல தேர் புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முடங்க சுவாமி ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கமலத் தேரில் எழுந்தருளினார் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு திருக்கோயில் சார்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டு வடம் பிடித்து தேரை தொடங்கி வைத்தனர் திருக்கோயில் நிர்வாகத்தினர்.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து திருக்கோயில் மாடவீதியில் புறப்பாடு நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *