thanga thirichi vaganathil thirupathy ezhumalayan

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது . இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு ஆகம ஆலோசகர்  சிறப்பு பூஜைகள் செய்து பிரம்மோற்சவத்திற்கான கங்கண கயிறுகளை கட்டினார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுத்துச் செல்ல நான்கு மாடவீதியில் வலம் வந்து  பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் வீதி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தினந்தோறும் காலை இரவு நேரங்களில் சுவாமி தாயார் பல்வேறு வாகங்களில் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *