amman koil palkudam thiruvizha

சென்னை பூந்தமல்லியில் ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் கோவில் பால்குடம் எடுக்கும் விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிப்பட்டனர்.

சென்னை பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள  ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் கோவிலில் 18 ஆம் ஆண்டு பால் குடம் எடுக்கும் விழா நடைப்பெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள்அன்பரசு ஏற்பாட்டில்  நடைப்பெற்ற இவ்விழாவில் திருநங்கைகள் அம்மன் வேடமிட்டு ஆடிய அம்மன் ஆட்டம்,சிலம்பாட்டம்,என பல்வேறு ஆட்டங்கள் நடைப்பெற்றது.

மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் சேலை அணிந்து ஒரே நேரத்தில் அம்மனுக்கு பால் குடம் எடுத்தனர்.  பூந்தமல்லி பனையாத்தம்மன் கோவிலில் தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலை அடைந்தது.

ஊர்வலத்தின் போது பெண் பக்தைகள் ஓம் சக்தி ஓம் சக்தி என முழக்கமிட்டது கூடியிருந்த அனைவரையும் பக்தி மயத்தில் ஆழ்த்தியது.ஒரே நேரத்தில் ஐயாயிரத்திற்கும் மேபட்ட பெண்கள் பால் குடம் எடுத்த நிகழ்வு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *