Namakkal Anjaneyar palabishegam

ஆடி மாதம் முதல் ஞாயிற்று கிழமையை யொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம். ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம்.

மாதந்தோறும் தமிழ் மாத முதல் ஞாயிற்று கிழமை நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம்.

இன்று ஆடி மாதம்  முதல் ஞாயிற்று கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.  வழக்கத்திற்கு மாறாக ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *