Viswanathar temple pradhosham

ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத ஈஸ்வரர் சன்னதியில் மார்கழி பிரதோஷ விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

இந்த மார்கழி பிரதோஷ நாளில் கோவிலுக்கு சிவனுக்கு முன்பாக அமைந்துள்ள நந்தி பகவான் மற்றும் பிரதோச உற்சவநாதருக்கு மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் தேன், பன்னீர், பால் , ஆகிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி மற்றும் உற்சவநாதருக்கு புஷ்பா பூ மலர்களால் அலங்காரம் செய்து மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் பூ மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாதரை கோவிலில் இருந்த திரளான பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவில் முழுவதும் பக்தி பாடல்களை பாடியபடி வலம் வந்து  நமச்சிவாய வாழ்க நமச்சிவாய வாழ்க என பக்தி பரவசத்துடன் முழக்கம் விட்டனர் அதன் பின்னர் கோவில் கருவறையில் இருக்கும் காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத ஈஸ்வருக்கு பஞ்சஆரத்தி ,தட்டஆரத்தி கும்பஆரத்தி ஆகிய மஹா  தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *