Sri bhuvenswari maalai

ஓம் ஸ்ரீமஹா கணபதயே நமஹ

மந்திர ஒலியே மங்கள இசையே மன்மத பாணியளே
சந்திர சேகரி சண்முகன் தாயே சங்கரி சௌந்தரியே
இந்திர ஜாலம் தந்திர மாயம் இலங்கிடு விழியவளே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

பந்தணை விரலி பர்வத தேவி பவபய ஹாரிணியே
சுந்தர ஈசன் சுருதியும் நீயே சுக சுப ரூபிணியே
சிந்தனை யாவும் உன்னிடம் வைத்தேன் சித்தியின் ஒருவடிவே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

சத்திய வடிவே சற்குண உருவே சதுர்மறை சந்நிதியே
நித்திய நிதியே நிறைபுகழ் ஒளியே நிலைத்திட வருபவளே
வைத்திய மணியே வறுமைகள் போக்க வையகம் வாழ்பவளே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

வழிபடுவோர்க்கு வரம் தரும் தாயே வந்தருள் வேணியளே
பழிபடு துயரம் பகைதரும் தீமை பகைகளை புதைத்தவளே
விழிகளின் அருளால் வினைகளை விரட்ட விளக்கொளி ஆனவளே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

அறுபத்து நான்கு கலைகளும் ஆனாய் அன்னையும் நீயானாய்
கருவிடு அரக்கர் கண் பகைகடிந்த கனிமொழி நீயானாய்
குறுகலர் தம்மை குறுந்தடிப் பாய்ச்சும் குணமணி நீயானாய்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

வல்லவள் நீதான் வஞ்சியும் நீதான் வசந்தமும் நீயே தான்
நல்லவள் நீதான் நன்னிதி நீதான் நற்சுனை நீயே தான்
சொல்பவள் நீதான் சொர்க்கமும் நீதான்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

நாற்பத்து மூன்று கோணத்தின் நடுவே நான்மறை நீ நவின்றாய் 
நோற்றிடும் நோன்பின் பலனென வந்தாய் நோய்களை நீ தீர்ப்பாய்
கார்மழை ஆனாய் காவலும் ஆனாய் காத்திட நீ வந்தாய்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

ஜெய ஜெய புவன ஈஸ்வரி தாயே ஜெய ஜெய ஸ்ரீங்காரீ
ஜெய ஜெய மாயா மங்கள ரூபி ஜெய ஜெய ஹ்ரீங்காரீ
ஜெய ஜெய துர்கா சண்டிகை காளி ஜெய ஜெய க்லீங்காரீ
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

தீன தயாபரீ பூர்ண கடாக்ஷி காஞ்சி காமாக்ஷி நமோ நமோ
சர்வ யந்த்ராத்மிகே சர்வ தந்த்ராத்மிகே சர்வ மந்த்ராத்மிகே நமோ நமோ
மாதங்க கன்யா மதுர மீனாக்ஷி பாண்டியராஜ புத்ரீ 
சுந்தர ஹ்ருதயே சோமசேகரீ திரிபுவன ஜனனீ மனோன்மணி

ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *