Komadha vazhipadu

காமதேனு மந்திரத்தை அதன் ரகசியங்கள் அறிந்து பூஜிப்பவனுக்கு கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும். பசுவின் உடலில் சகல தெய்வங்களும் உறைவதால் ஆண்டுக்கு ஒருமுறையாவது கோ பூஜை செய்ய வேண்டும்.

பசுவை பூஜிப்பவன், போஷிப்பவன் எல்லாருமே சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணிய லோகத்தை அடைவர் என்று பிரம்மதேவர் வரம் அருளியிருக்கிறார், பசுக்களின் தேகமெல்லாம் தேவர்கள் நிறைந்திருக்கின்றனர். தினமும் பசுவுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடும்போது, ஒரு கைப்பிடி பசும்புல் அல்லது வாழைப்பழம் அதற்குக் கொடுக்கவேண்டும்.

 தினமும் இப்படி செய்ய இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் வழிபட்டாலும் சுகமான வாழ்வு கிட்டும்.  பசுவின் பின் பக்கத்தைத் தரிசிக்க வேண்டும். அதனால் லட்சுமியைத் தரிசித்த புண்ணியம் ஏற்ப்படும். மேலும் அந்த இடத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டால் கங்கையில் நீராடிய புண்ணியமும் ஏற்படும் . பசுவின் பாதத்துளி மேலே பட்டால் வாயவ்ய ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *