Thirupathy Online Sevai

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்கர தீப அலங்கார சேவையில் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

டிசம்பர் மாதம் நடைபெறக்கூடிய இந்த கட்டண சேவைகளில் பங்கேற்பதற்கான டிக்கெட் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடபடுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்களில் கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்றவர்களுக்கு 90 நாட்களுக்குள்  ஏழுமலையானை நேரில் வந்து தரிசனம் செய்வதற்கு இரண்டு பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் ஆன்லைனில் நடைபெறும் சேவையில் மட்டும் பங்கேற்கலாம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு அந்த சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுடன் ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் கூடுதலாக பெற்று 90 நாட்களுக்குள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *