Thirupathy srivari mettu

திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக தேவஸ்தானம் அறிவிப்பு. 

திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்திலிருந்து  ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லக்கூடிய ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை தற்காலிகமாக மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  

ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதற்கு  அலிபிரி மற்றும் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு மலைப் பாதை உள்ளது. ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை திருப்பதியில் இருந்து திருமலைக்கு நேரடியாக குறைந்த படிகளுடன் உள்ளதால் இந்த மலைப்பாதையில் தமிழகம், கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்கள் பயன்படுத்துவது வழக்கம். 

இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தற்காலிகமாக சினிவாசமங்காபுரம் மலைப்பாதை மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

மீண்டும் சாதாரண நிலை ஏற்பட்ட பிறகு ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படும் என்றும் அதுவரை அது அலிலிரி மலைப் பாதையில் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *