Tirupathy Ezhumalayan Ticket

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் கோட்டா நாளை வெளியீடப்படுகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பக்தர்களுக்கான தரிசனம் ஊரடங்கு  தளர்வுக்கு பிறகு கடந்த ஜுன் 11ம் தேதி முதல்  அனுமதிக்கப்படுகின்றனர்.  அவ்வாறு ரூ 300 டிக்கெட் மூலம் தினந்தோறும் 13 ஆயிரம் டிக்கெட்கள் என இந்த மாத 30 தேதி வரைக்கான டிக்கெட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்  நாளை சனிக்கிழமை காலை 11 மணி முதல்  https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *