midhunam rahu kedhu peyarchi palangal

ராகு கேது பெயர்ச்சி 2020

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். 

மிதுன ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டிலும், கேது ஆறாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில் பன்னிரண்டாம் வீடு  என்பது மோட்சம் அல்லது வீட்டுப் பேறு, தூக்கம், தொண்டு, முதலீடு மற்றும் செலவுகள் முதலியவற்றையும்; ஆறாம் வீடு, தன்னலமற்ற சேவை, அன்றாட நடவடிக்கைகள், தொழில்முறை வேலைகள், கட்டாயக் கடமைகள், சுகாதாரம், நோய்கள், கடன்கள் மற்றும் போட்டிகள் போன்ற அம்சங்களையும் குறிக்கின்றன.

நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. 

எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. 

ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன. எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.
              
மிதுன ராசி அன்பர்களே, 
ராகு உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மிதுனத்திற்குப் பன்னிரண்டாவது வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, உங்களுக்கு நன்மையையும் தீமையும் கலந்த பலன்கள் காத்திருக்கின்றன எனலாம். இதுவரை இருந்த குழப்பம் விலகி, உங்கள் எண்ணங்களில் ஒரு தெளிவு ஏற்படும். உங்களில் சிலர், இந்தக் காலகட்டத்தில், வெளிநாடுகள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இருப்பினும், தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்கு எழலாம். 

இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்; எனவே எச்சரிக்கை தேவை. சில முதலீடுகளைச் செய்யவேண்டும் என்ற ஆவலும், எண்ணமும் கூட, உங்கள் மனதில் எழலாம். இந்த நேரத்தில் இது உங்களுக்குப் புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், கானல் நீர் போல, இது உங்களுக்கு ஏமாற்றத்தையே தரக் கூடும். உங்களில் சிலருக்கு, வெளிநாட்டு நண்பர்கள், அறிமுகங்கள் மூலம் சில அன்பளிப்புகள் வந்து சேரலாம். நாம் பிறருக்கு ஏதாவது கொடுத்தால், அல்லது தானம் செய்தால், அது போல ஏதாவது ஒன்றை அவர்கள் நமக்குத் திருப்பி அளிப்பார்கள், இதன் மூலம் நமக்கு ஆதாயம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். 

ஆனால் இது உங்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களில் சிலர், சில ரகசிய அல்லது மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகலாம். ஆனால் இது, உங்கள் சமூக அந்தஸ்து, பொது வாழ்க்கையில் நீங்கள் ஈட்டியுள்ள நற்பெயர் போன்றவற்றை பாதித்து விடும். எனவே, இந்தக் காலகட்டத்தில் முடிந்தவரை  வெளிப்படையாக இருப்பதே சாலச் சிறந்தது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால்கள், கணுக்கால்கள் போன்றவற்றில் பிரச்சினை, ஏற்பட வாய்ப்புள்ளதால் சிறிது கவனமாக இருப்பது நல்லது. 

கேது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மிதுனத்திற்கு ஆறாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்காது எனலாம். உங்களில் சிலர், சிறு உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம், இதனை நீங்கள் மற்றவர்களுக்குத் தெரிவிக்க விரும்பாமலும் இருக்கலாம். எனவே, மற்றவர்களின் உதவியின்றி, நீங்களே இந்தச் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிப்பீர்கள். தவிர, சிலரது ஆரோக்கியம் கவலை தரும் வகையிலும் இருக்கக் கூடும். இதன் காரணத்தை, மருத்துவ நிபுணர்கள் கூட, துல்லியமாகக் கண்டறிய இயலாமல் போகலாம். எனினும், உங்கள் தொப்புள், குடல், வயிறு போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் கூட, உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் சில தொந்தரவுகள், சச்சரவுகள் போன்றவை எழக்கூடும். 

பணியிடத்தில், வழக்கமான அமைதி இல்லாமல் போகலாம். எனவே மற்றவர்களுடன் சுமுகமாக, அனுசரித்து நடப்பதே புத்திசாலித்தனம். வாழ்க்கைப் பாதையில் கூட, உங்கள் முன்னேற்றத்திற்குத் தடைகள் மற்றும் தாமதங்கள் எழலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் மனதில் சில சந்தேக எண்ணங்களும் தலைதூக்கக் கூடும். இது வெளிப்பட்டால், இது நாள் வரை நீங்கள் பாடுபட்டு சம்பாதித்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்படலாம். மற்றவர்கள் பார்வையில் நீங்கள் தாழ்ந்து விடவும் நேரிடலாம். ஒட்டுமொத்தமாக, இந்தக் காலக் கட்டங்களில் பொருள் இன்பங்களைத் தேடுவதை விட ஆன்மீகத் துறையில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடும்.

நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *