pillayarpatti soora samharam

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆறாம் திருநாளான இன்று மாலை கோவில் முன்புறம் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது

விநாயகரை போருக்கு அழைத்த கஜமுகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர் பெண்கள் குலவையிட்டு தரிசனம் செய்தனர்

கொரோனா ஊரடங்கால்  கோவிலை சுற்றி வெளி பிரகாரத்தில்  மிண்ணொளியில் நடக்க வேண்டிய நிகழ்வு கோவில் முன்பு எளிமையாக நடைபெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *