Tag: Pillayarpatti

  • Pillayarpatti chadurthi kodiyetram

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. ஆனால், கொரோனா ஊரடங்கு தடை காரணமாக, சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பக்தர்களின்றி கட்டுப்பாடுகளுடன் நடந்தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

     
    அதன்படி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு அருகில் உற்சவ விநாயகரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. வருகிற 10-ந் தேதி வரை நடக்கும் சதுர்த்தி திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பிரகாரத்தை வலம் வருவார்.

    இந்த நிகழ்வுகளில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள். சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • pillayarpatti soora samharam

    பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆறாம் திருநாளான இன்று மாலை கோவில் முன்புறம் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது

    விநாயகரை போருக்கு அழைத்த கஜமுகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர் பெண்கள் குலவையிட்டு தரிசனம் செய்தனர்

    கொரோனா ஊரடங்கால்  கோவிலை சுற்றி வெளி பிரகாரத்தில்  மிண்ணொளியில் நடக்க வேண்டிய நிகழ்வு கோவில் முன்பு எளிமையாக நடைபெற்றது.

  • Pillayarpatti vinayakar veedhi ulla

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அதிகாலை முதலே கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கற்பக விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வந்த அற்புதமான வீடியோ காட்சி. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி வழிபாடு செய்தனர்.

     

  • Pillayarpatti Karpaga vinayagar koil theerthavari

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் . இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது.

    பத்து நாள் திருவிழாவில் இறுதி நாளான இன்று கற்பக விநாயகர் வெள்ளிகேடகத்தில் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி பூஜைகள் நடைபெற்றது.

    அங்கு  அங்குசதேவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிசேகங்கள் நடைபெற்றது. பின்னா பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. 

  • Pillayarpatti Car Festival

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தேரோட்டம்  வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் . இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. 

    இந்த ஆண்டு கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது ஒவ்வொரு நாளும் ரிசபம், சிம்மம், கமலம், உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஒன்பதாவது திருநாளான இன்று மாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  தேர் வடம் பிடித்து இழுத்தனர். 

    சதுர்த்தி விரதம் இருக்கும் பெண்கள் மட்டுமே இருக்கு சண்டிகேஸ்வரர் சிறிய தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

    கோவிலைச் சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்த திருத்தேர் மாலை 6.40 மணிக்கு நிலைக்கு வந்தது. மூலவர் சந்தனக் காப்பு அலங்காரம் வருடம் ஒரு முறை மட்டும் நடக்கும் என்பதால் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகர டிரஸ்டிகள் செய்துள்ளனர். நாளை 10 வது திருநாளான விநாயகர் சதுர்த்தி கோவில் தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்தி திருவீதி உலாவுடன் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெரும். 

  • Pillayarpatti Soorasamharam Video

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வை, ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் சதுர்த்தி பெருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் ஆறாம் திருநாளான நேற்று வெள்ளி யானை வாகனத்தில் திருக்கோவில் மணிமண்டபத்தில் விநாயகர் எழுந்தருளினார்.

    இதன்பின், மேள வாத்தியங்கள் முழங்க திருக்கோவிலை சுற்றி வந்து கோவில் முன்பாக உள்ள குளத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பிள்ளையார்.

    இங்கு தேவர்களை கொடுமைப்படுத்திய கஜமுக அசுரனை போரில் எதிர்கொண்ட நிகழ்வு நடைபெற்றது. தனது தந்தத்தால் அசுரனை விநாயகர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சூரசம்ஹார நிகழ்வினை கண்டுகளித்து தரிசனம் செய்தனர்.
     

  • Pillayarpatti Chadurthi Vizha

    பிரசித்திப் பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்டு  24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தாண்டிற்கான விழா வருகிற 24-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமர்சையாக நடைபெற உள்ளது. 

    விழாவையொட்டி தினந்தோறும் சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம், பஞ்ச மூர்த்தி அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி, 9-ம் திருநாளான வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கோவிலில் உள்ள மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் தான் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். 
     
    2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு திருமுக்கூறுணி மோதக கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.