Thirupathy VIP Dharshan Ticket

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு 10,000 நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசனம் டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூபாய் 10,000 நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் 24 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசனம் டிக்கெட் வழங்கும் கோட்டாவை இன்று தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர். 

இதன்மூலம் பத்தாயிரம்  ரூபாய் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தங்களுக்கு உரிய தேதியில் விஐபி தரிசனம் செய்வதற்கான ரூபாய் 500 டிக்கெட்டிற்கு பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *