Tirupathy devotees

கொரோனா ஊரடங்கையொட்டி கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் அனைத்துப் பூஜைகளும் வழக்கம்போல் நடந்து வருகின்றன. 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டு, வருகிற 8-ந்தேதியில் இருந்து கோவில்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
   
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநில அரசின் உத்தரவுக்காக தேவஸ்தான அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். தேவஸ்தான ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

 திருமலை-திருப்பதி தேஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று ஏழுமலையான் கோவில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் உள்பட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர மாநில அரசு உத்தரவின்படி தான் ஏழுமலையான் கோவில் திறக்கப்படும். அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். பக்தர்களை தங்க வைக்கும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 5 அடி தூர இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் தரையில் கட்டங்கள் போடப்பட்டுள்ளன. தினமும் 7 ஆயிரம் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதில் முதல் கட்டமாக தேவஸ்தான ஊழியர்கள், முன்னாள் ஊழியர்களும், 2-வது கட்டமாக உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து இருக்கிறார். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *