Koranovai Kattupaduthum thanvanthri manthiram

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் தன்வந்திரி மந்திரம்
இன்றைக்கு ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ்  உலுக்கிக் கொண்டிருக்கின்றது. எப்போது அதன் தாக்கம் தணியும், மக்கள் எப்போது அச்சத்திலிருந்து மீள்வது என்ற சிந்தனை தான் அனைவரிடத்திலும் இருக்கின்றது. 
தற்போதுள்ள இக்கட்டான சூழலில் தெய்வங்களாக  மருத்துவர்கள், பாதுகாப்பு வீரர்கள் என பொதுமக்களின் துன்பங்களை தங்களின் துன்பமாக தாங்கிக் கொண்டு பலரும் இருக்கின்றனர்.
தெய்வங்கள் மனித ரூபத்தில் மருத்துவர்களாக, செவிலியர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் நாம் எல்லாம் வல்ல இறைவனை துதித்து இந்த இக்கட்டான சூழலிலிருந்து வெளிவரவும், உலகை பிடித்துக் கொண்டுள்ள நோயை விரட்டவும் நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரத்தை சொல்லி நாம் நோயிலிருந்தும், நோய் பயத்திலிருந்தும் வெளிவருவோம்.
கொரோனாவுக்கு தீர்வு சொல்வது போல் மகாபாரதத்தில் உள்ள முக்கிய நிகழ்வு…தன்வந்திரி மந்திரம்;
ஓம் நமோ பகவதே
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய
நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம !
இதன் பொருள்: 
அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருக்கும் வாசுதேவனே, தன்வந்திரி பகவானே
எல்லா நோய்க்கும் மருந்தாக, நோய்களை தீர்ப்பவனாகா இருப்பவரே, மூன்று உலகிற்கும் அதிபதியான ஸ்ரீ மகா விஷ்ணு பகவானே உன்னை வணங்குகிறோம்.
இந்த மந்திரத்தை இக்கட்டாண இந்தத் தருணத்தில் சொல்லச் சொல்ல துன்பங்கள் விலகும்!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *