Kalazhagar koil masi fest

தென் திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் மதுரையை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் மார்ச் 8 ஆம் தேதி மாசி திருவிழா தொடங்குகிறது. 

மார்ச் 8 – மாலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் கஜேந்திர மோட்சத்துடன் திருவிழா தொடங்குகிறது.

மார்ச் 9 – தெப்ப உற்சவம் 
அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகிறார். மேலும் அன்று மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு வழி நெடுகிலும் நின்ற சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக் கரைப்பட்டி தெப்பம் போய் சேருகிறார்.

அங்கு பகல் 12 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து அன்று மாலையில் சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருவார். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *