Thirupathy Sorgavasal dharisanam

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1.74 லட்சம் பக்தர்கள்  சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 6.19 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கை பக்தர்கள் செலுத்தியிருக்கின்றனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி கடந்த ஆறாம் தேதி அதிகாலை 2 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று துவாதசியையொட்டி நள்ளிரவு 12.30 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டனர்.

வைகுண்ட ஏகாதேசி அன்று 84 ஆயிரத்து 160 பக்தர்களும் நேற்று துவாதசியன்று 84 ஆயிரத்து 160 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரண்டு நாட்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 738 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர். 

பின்னர் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் எண்ணப்பட்டதில்  இரண்டு நாட்களில் 6.19 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள நான்கு அறைகளில் பக்தர்கள் காத்திருப்பதால் தரிசனத்திற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் ஆதார் அட்டை மூலம் வழங்கக்கூடிய சர்வ தரிசனம் மற்றும் மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வழங்க கூடிய திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள்   ஆன்லைனில் ரூ 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2  மணி நேரத்தில் சாமி தரிசனம்  செய்து வருகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *