Vasthu Dhosham Neekum Eliya parigaram

பொதுவாக தென் கிழக்கு மூலையான அக்னி மூலையில் சமையலறை அமைவதே சிறப்பு. ஆனால், தற்போதைய நிலையில் நாம் நினைத்த வண்ணம் வீடுகள் நமக்கு வாய்ப்பதில்லை. 

இத்தகைய வாஸ்து தோஷங்கள் ஓரளவு சீர்பெற கார்த்திகை மாத அமாவாசை தினத்தன்று தினையைப் பரப்பி அதன் மேல் தர்பைச் சட்டம் வைத்து தர்ப்பணம் அளித்து மயில்களுக்கு உணவிட்டு வரவும். தொடர்ந்த வழிபாடு சிறந்த பலன்களை நல்கும்.

அதேபோல பூ, கல்வி, வேதம், தண்ணீர் இவற்றை காசுக்காக விற்கக் கூடாது என்பது தெய்வீகச் சட்டம். அறிந்தோ அறியாமலோ கல்வியை காசுக்காக விற்றவர்கள், விற்றுக் கொண்டு இருப்பவர்கள் மனம் திருந்தி இத்தகைய தோஷத்திலிருந்து விடுபட விரும்பவது உண்டு. 

அத்தகையோர் மார்கழி மாத அமாவாசை தினத்தன்று நெல் அல்லது அரிசியைப் பரப்பி அதன் மேல் ஆறு செவ்வாழைப் பழங்களை வைத்து தர்ப்பணம் அளிக்கவும். பின்னர் அந்த செவ்வாழைப் பழங்களுடன் தேன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு தானமாக அளித்து வர செய்த தவறுகளுக்கு பிராய சித்தம் பெற வழி பிறக்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *