Dhosham Neekum Valampuri sangu

விஷ்ணுவின் அம்சமாக சாளக்கிராமம் இருப்பது போல, வலம்புரிச் சங்கு லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. வீட்டின் தலைவாசலில் சங்கு பதித்தால் திருஷ்டி தோஷம் உண்டாகாது. பூஜையறையில் வலம்புரிச்சங்கு இருந்தால் தீய சக்தி நீங்கி தெய்வீக சக்தி நிலைக்கும்.

வெள்ளிக்கிழமையன்று சங்கு பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும். தண்ணீரில் சங்கினைக் கழுவி சுத்தம் செய்து வாழையிலையில் அரிசி பரப்பி அதன் மீது சங்கை வைக்க வேண்டும்.

சந்தனம் குங்குமம், மலர்களால் அலங்கரித்த பின், லட்சுமி அஷ்டோத்திரம், 108 போற்றியை சொல்லி வழிபட வேண்டும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *