thirupathi sarva dharisanam cancel

திருப்பதியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருவதையொட்டி, திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்தபடி உள்ளனர். இதனால் தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், அதிக கூட்டம் காரணமாக இன்றுமுதல் வரும் 13 ம் தேதி வரை மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனம், ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *