Thirupathy Bramorchava Poster

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்கான சுவரொட்டி வெளியீட்டார் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி. 

திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கான சுவரொட்டியை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்பா ரெட்டி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 29ஆம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி அக்டோபர் 8ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுவதாக தெரிவித்தார். 

வழக்கம்போல் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறக்கூடிய முதல் நாளான 30 ஆம் தேதி மாலை அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை கொண்டுவந்து சமர்ப்பிக்கப்படும். இதையொட்டி  முதல்வரை வரவேற்கும் விதமாக நாளை விஜயவாடாவுக்கு அதிகாரிகளுடன் சென்று அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாலும் அனைவருக்கும் சிறந்த முறையில் சாமி தரிசனம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து உள்ளதாக அவர் தெரிவித்தார். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *