Atthi Varadhar August 8 Dharisnam

காஞ்சிபுரம், ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 36 வது நாளான இன்று, இளஞ்சிவப்பு  நிற பட்டாடை அணிந்து காட்சி தரும் அத்தி வரதரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் குளத்திலிருந்து எடுக்கப்பட்டு 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிகிறார் அத்தி வரதர். 

அத்தி வரதரை தரிசிக்க தமிழகம் மட்டுமில்லாமல், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

இளஞ்சிவப்பு நிற பட்டு வஸ்திரத்தில் அத்தி வரதர்  இன்று வண்ண வண்ண மலர்களால் ஆன மாலையை சுற்றப்பட்டு மலர் கிரீடத்தில் காட்சி அளிக்கின்றார். நேற்று 35 வது நாளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *