Girivalam selvadhu eppadi

கிரிவலம் என்றாலே நமக்கு மனதில் முதலில் வந்து நிற்பது திருவண்ணாமலை. 
கிரி- மலை, வலம் – மெதுவாக மலையை சுற்றி வருவது

30 ஆண்டுகளுக்கு முன்பாக,திருவண்ணாமலை சென்று கிரிவலம் செல்பவர்கள்  அனைவருமே ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள். ஆனால் தற்போது சாதாரண மக்களும் கிரிவலம் செல்ல தொடங்கியுள்ளனர். 

பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது நன்று. உலகில் 84 லட்சம் உயிரினங்கள் இருக்கிறதாக வேதங்கள் கூறுகிறது.. இவைகளுக்கு உயிர்ப்பு ஆற்றல் கிடைக்கக் கூடிய நாள் தான் பவர்ணமி. இந்த நாளில் கிரிவலம் செல்வது உகந்தது. 

மலையில் இருக்ககூடிய தாவரங்கள்,மூலிகைகள்,உயிர் ஆற்றல் உள்ள ஜீவ சமாதிகள்,சித்தர்களின் அகர்ஷன சக்திகள் மூலமாக நம்முள் நல்ல மாற்றத்தை கொடுக்கும். 

கிரிவலம் செல்லும் போது அமைதியாய், ஆனந்தமாய், பய  பக்தியுடன்  நடந்து வர வேண்டும். அவ்வாறு  நடக்கும் போது இறை சிந்தனையுடன் இறை நாமத்தை மனதில்  சொல்லிக்கொண்டே  நடக்க வேண்டும்.

ஆண்கள்,மேலாடை இல்லாமல் கிரிவலம் செல்வது நல்லது. மேலும் பட்டு  அல்லது கதர் ஆடையை  அணிந்து கிரிவலம் வந்தால், நல்ல ஆற்றலை  பெற முடியும்..

கூட வருபவர்களிடம் பேசிக் கொண்டு வருவது, சாப்பிட்டுக்கொண்டே கிரிவலம் வருவது தவறான ஒன்று. 

கிரிவலம் செல்லும் போது, வேகவாக நடந்தோ அல்லது ஓடவோ கூடாது. அருணாச்சல புராணம் சொல்லுவது நல்லது. 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *