1008 Paal Kudam

சென்னை போருர் அருகே ஸ்ரீ துர்கையம்மன் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு  1008 பெண்கள்  பால் குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று பால் அபிஷேகம் செய்தனர்.

சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்கை ஆம்மன் ஆலயத்தில் சித்திரா பவுர்ணமி விழா கொண்டாப்பட்டது.விழாவை முன்னிட்டு 1008 பெண்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற உடை அணிந்து பால் குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

அயன்பந்தாங்கள் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மன் கோவிலில் புறப்பட்ட பால் குட ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலை வழியாக ஆயத்தை வந்தடைந்து. பின்னர் துர்கை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

இதனை துர்கை அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது.இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *